என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: ரிஷப் பண்ட் விலகல்... துருவ் ஜூரல் அணியில் சேர்ப்பு
- இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
- இந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விலகியுள்ளார். வலைப் பயிற்சியின் போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.






