என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கோ யான்சென்"

    • முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.
    • டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 201 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

    இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கதில் களம் இறங்கிய அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், யான்செனை பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் மிஸ்சிங் என அனில் கும்ப்ளே சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

    இந்தியாவின் பேட்டிங் முயற்சி மிகவும் மோசம் என நான் உணர்ந்தேன். டெஸ்ட் போட்டிக்கு தேவையான பொறுமை மற்றும் திறமையை பயன்படுத்துதல் (application) மிஸ்சிங். சில பந்துகள் சிறப்பாக வீசப்பட்ட போதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் கடினமான ஸ்பெல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை அல்லது செசன் செசனாக விளையாட தயாராக இல்லை.

    முதல் இன்னிங்ஸ் ரன்னை விரைவாக எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 489 ரன்களை படிப்படியாகத்தான் எட்ட வேண்டுமே தவிர, விரைவாக எட்ட வேண்டும் என்பது யதார்த்தமற்றது. எதிரணி பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களது ஸ்பெல்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமானது. ஆனால் இந்தியா அதை போதுமான அளவு காட்டவில்லை.

    யான்சென் விதிவிலக்காக அபாரமாக பந்து வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருந்தார். அவர் பவுன்சர்களை வீசத் தொடங்கியபோது இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை பின்னால் விட்டு விளையாடவோ அல்லது பந்துகள் தாக்குவதை எதிர்கொள்ளவோ தயாராக இல்லை என்று தோன்றியது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அந்த அணுகுமுறை அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தியாவின் அணுகுமுறையில் அது இல்லை.

    இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

    • முதல் இன்னிங்சில் யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 201 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    முக்கியமாக ஷார்ட் பந்து யுக்தி மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்களா? என்ற கேள்வி யான்செனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு யான்சென் "எல்லாம் விசயங்களும் நாம் நினைத்த வழியில் செல்லாது. ரிஷப் பண்ட் பந்தை கேலரிக்கு பறக்க விட்டிருந்தால் அல்லது எனது தலைக்கு மேல் தூக்கி அடித்திருந்தால், இந்த உரையாடல் வேறுமாதிரி இருந்திருக்கும்.

    நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், கொல்கத்தா போன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில பிட்ச் ஆகி பேட்ஸ்மேனை நோக்கி வரவில்லை. இதனால் நாங்கள் வேறு திட்டத்தை தேட வேண்டியிருந்தது. துருவ் ஜுரலை பவுன்சர் மூலம் வெளியேற்றிய பிறகு, ஓ.கே. கூல், இது எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்று நாங்கள் சொன்னோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக உள்ளது. நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் உள்ளது. நீங்கள் ஷார்ட் பந்துகளை சிறப்பாக விளையாடினால், உங்களால் ரன்கள் குவிக்க இயலும். நீங்கள் சிறப்பாக பந்து வீசினால், உங்களால் விக்கெட் வீழ்த்த இயலும்" என்றார்.

    • முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வெளிநாட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மார்கோ யான்சென் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு மொகாலியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

    மேலும் மொத்தமாக 3-வது இடதுகை வேகப்பந்து வீச்சாளராக யான்சென் உள்ளார். இதற்கு முன்பு 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்திய வீரர் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.
    • யான்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல். ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    கே.எல். ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

    இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்றது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்களை தாண்டி விளையாடியது.

    வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர்- குல்தீப் யாதவ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.

    வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததும் குல்தீப் யாதவ் 19 ரன்னில் வெளியேறினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் யான்சென் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    கடைச விக்கடெ்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா 5 ரன்னில் யான்சென் பந்தில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா பாலோ-ஆன் ஆனது.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தற்போது 288 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    • 9-வது வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் களமிறங்கினார்.
    • யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில்

    9-வது வரிசையில் களம் புகுந்த தென்ஆப்பிரிக்க வீரர் யான்சென் 7 சிக்சருடன் 93 ரன்கள் நொறுக்கினார். 9 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சாதனையாளர் பட்டியலில் யான்சென் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்தின் டிம் சவுதி 2008-ம் ஆண்டு நேப்பியரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 9 சிக்சர் அடித்ததே இந்த வகையில் சாதனையாக உள்ளது.

    ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விரட்டிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக் (இருவரும் தலா 7 சிக்சர்) ஆகியோரின் சாதனையை யான்சென் சமன் செய்தார்.

    இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனைக்கு யான்சென் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 சிக்சர் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

    ×