என் மலர்
நீங்கள் தேடியது "Rahul Dravid"
- 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
- இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.
டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், ரூட் ஆகியோர் இதுவரை 210 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ஜெயவர்தனே (205), ஸ்மித் (200) ஆகியோர் உள்ளனர்.
- இங்கிலாந்து இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
- இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.
இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான்கள் அறிமுகமாகிய ஜூன் 20-ந் தேதியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி (ஜூன் 20-ந் தேதி 1996-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்கள்.
அதனை தொடர்ந்து விராட் கோலி ஜூன் 20-ந் தேதி 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். அந்த வரிசையில் தமிழக வீரர் சாய் சுதர்சனும் இதே நாளில் அறிமுகமாகியுள்ளார். இவரும் பல சாதனைகள் படைக்க ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் அணியால் இலக்கை நெருங்கி வெற்றி பெற முடியவில்லை.
- வெற்றி பெறக் கூடிய சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்க, பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 200 ரன்களுக்கும் மேல் சேஸிங் செய்ய முயற்சித்து சொற்ப ரன் வித்தியசாத்தில் தோல்வியைடந்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 8 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கெதிராக 10 ரன்னில் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 219 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 209 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க ஜோடியான ஜெய்வால் (50)- சூர்யவன்ஷி (40) முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 76 ரன்கள் குவித்தது. ஜெய்வால் ஆட்டமிழக்கும்போது 8.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. பந்து வீச்சில்தான் குறை உள்ளதாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது 220 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் என நான் நினைக்கவில்லை. இது 195 முதல் 200 ரன்கள் அடிக்கக்கூடிய விக்கெட். நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்.
நிங்கள் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. விக்கெட் வீழ்த்துவது மற்றும் ரன்னை கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிலும்தான். ஒவ்வொரு போட்டியில் நாங்கள் 200 முதல் 220 வரை சேஸிங் செய்ய வேண்டியிருந்தது.
இது மிகவும் கடினமானது. ஸ்கோரை நெருங்கி வந்தோம், ஆனால், எங்களால் போட்டியை முடிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று கூடுதலாக ரன் சேர்க்க முடியாததால் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். கடைநிலை வீரர்களுக்கு கிளக் ஆகி எங்களுக்கு தேவையான பெரிய ஷாட்கள் கிடைக்கவில்லை.
இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் பெங்களூரு- ராஜஸ்தான் மோதுகிறது.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்தார்.
18-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சுவுக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்ததுன்னு நினைக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். எங்கள் மருத்துவக் குழு அவரை விளையாட அனுமதிக்கவில்லை.
எனவே மேலும் அவர் பயணம் செய்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு ஆலோசனை வழங்கியது. அதேசமயம் இன்னும் இரண்டு விமானங்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதால் கூட அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவருக்கு சிகிச்சை அளித்து, விரைவில் அவரைத் திரும்பக் கொண்டுவர முயற்சிப்பதற்காக, பிசியோவை அவருடன் வைத்திருந்தோம். அவர் குணமடைவதை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம்.
அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை. ஆனால் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். இப்போதைக்கு, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அதனால்தான் அவர் பெங்களூருக்கு பயணம் செய்யவில்லை.
என்று சஞ்சு சாம்சன் கூறினார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
- இனிமேல் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வி, இரண்டில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. லக்னோனிக்கு எதிராக இரண்டு ரன்களில் வெற்றியை நழுவ விட்டது.
நாளை ஆர்.சி.பி. அணியை எதிர்கொள்ள உள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டு போட்டியில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது.
இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனிமேல் விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் (6) வெற்றிபெற வேண்டும்.
இந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட் இனிமேல் தப்பு செய்ய முடியாது. அனைத்து போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-
ஆர்.சி.பி.க்கு எதிரான நாளைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். உண்மையில், நாங்கள் இருக்கும் நிலையில் இங்கிருந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிக தவறுகளைச் செய்ய முடியாது. தொடரின் தற்போதைய நிலையில் பாதி தூரம் தாண்டிய நிலையில் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கீழ் பாதியில் இருக்கிறோம்.
நாங்களில் புள்ளிகள் பட்டியலில் விரைவாக முன்னேற தொடங்க வேண்டும், மேலும் ஆட்டங்களில் விரைவாக வெற்றி பெறவும் வேண்டும். இனிமேல் சறுக்குவதற்கான எந்த வழியும் வாய்ப்பும் இல்லை.
இந்த தொடரில் இன்னும் நிலைத்திருக்க நாங்கள் நன்றாக விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது, இதற்கு முன்பு இரண்டு நெருக்கமான ஆட்டங்களில் தோற்றுள்ளோம், ஆனால் நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளோம்.
இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
- ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நினைக்கிறேன்.
- ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் அமர்ந்து கொண்டு அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு அற்புதமான மனிதரை பெற்றிருப்பது பாக்கியம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராகுல் டிராவிட் தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
ராகுல் டிராவிட் நம்ப முடியாத அசாத்தியமான மனிதர். ராகுல் டிராவிட்டை போன்ற ஒருவரை இந்த காலக்கட்டத்தில் பெற்றிருப்பது பாக்கியம். ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்.
அவர் வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். வீரர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதையும் உறுதிசெய்கிறார். இது தனிப்பட்ட வீரரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் மிகவும் முக்கியமானது.
கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமல்ல, மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை எப்படி நடத்துகிறார் என்பதையும் கற்றுக்கொள்ள அவரை நெருக்கமாக பார்ப்பது ஒரு வாய்ப்பாகும். அவர் பல ஆண்டுகளாக இவ்வளவு நேர்த்தியையும் அமைதியையும் பராமரித்து வருகிறார். மேலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
இவ்வாறு ஜெய்ஸ்வால் ராகுல் டிராவிட்டை புகழ்ந்து கூறினார்.
- ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
- ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.
2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.
அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.
- தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
- சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார்.
- ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுகிறார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 61 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
போட்டி நிறைவுக்கு பின்னர் மெல்போர்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து கூறியதாவது:
அவர் (சூரியகுமார்) முற்றிலும் தனித்துவமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், சந்தேகத்திற்கு இடமின்றி அவர் விளையாடுவது, புதிதாக ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கிறது.
25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது நம்ப முடியாதது. அதனால்தான் அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருக்கிறார். 225 ரன்களுடன், இந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீராக அவர் திகழ்கிறார். விராட் கோலி (246) மட்டுமே அவரை விட அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.
தனது உடலை எவ்வாறு கவனித்துக் கொள்கிறார், உடற் பயிற்சிக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, நிறைய கடின உழைப்புக்கு அவர் வெகுமதியைப் பெறுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும்.
- ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள்.
ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 2-வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.
இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள்.
அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர்.
அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
- டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், லஷ்மண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
நாளை டி20 கிரிக்கெட் தொடங்குகிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் பலர் களம் காண்க இருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். அதுவும் குறிப்பாக பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணி தனது அணுகுமுறையை மாற்றலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் பயிற்சியாளரான லஷ்மண் பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என இளம் வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
இது குறித்து லஷ்மண் கூறுகையில் டி20 கிரிக்கெட்டில் நாம் சுதந்திரமாக, பயமின்றி விளையாடுவது அவசியம். இந்த எண்ணத்துடன் களத்தில் சென்று விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தகவல் கேப்டன் மற்றும் நிர்வாகம் மூலம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவேளையில், சீதோஷண நிலை, அப்போதைய போட்டியின் சூழ்நிலை ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் டி20 விளையாட்டிற்கு தேவை. ஏராளமான அணிகள் இந்த முறையை கொண்டு வர முயற்சிக்கும் வகையில் அப்படிபட்ட வீரர்களை அடையாளம் காணும் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். அவரது இருப்பும் பணி நெறியும் முன்னுதாரணமானது. அவர் ஒரு வீரர்களின் கேப்டன் மற்றும் அணுகக்கூடியவர். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.
- அயர்லாந்து தொடரின்போது ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது
- தற்போது நியூசிலாந்து தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இநதிய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-
நான் ஓய்வு (Brealks)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)... நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.