என் மலர்
நீங்கள் தேடியது "rahul dravid"
- பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார்.
- கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.
எட்ஜ்பஸ்டன்:
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 5-வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரர் பும்ரா பணியாற்றினார்.
ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கபில்தேவுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
இந்த நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் வல்லவர். ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர்.
பும்ரா இதுவரை கேப்டனாக இருந்தது இல்லை. இதனால் புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியம் அல்ல. தனது பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.
இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
- ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர்.
- இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்திய அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.
கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அணியுடன் பயிற்சியாளர் டிராவிட் ஆலோசனை நடத்தும் புகைப்பட காட்சிகளை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 2 முறை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
46 வயதான ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும். தற்போதுள்ள அணியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
20 ஓவர் போட்டியில் விளையாட கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்து கொள்வது கடினமானது. ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இல்லாததால் பந்து வீசவில்லை. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
தற்போது உள்ள 5 இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள். பிரித்வி ஷா, வெங்கடேஷ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் எதிர்கால இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருப்பார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத காலத்தில் அவர்கள் முத்திரை பதிக்கலாம்.
வெங்கடேஷ் அய்யரின் சிறப்பான ஆட்டத்துக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் என்னை ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு அணுகி இருந்தது.
பயிற்சியாளர் பதவியில் 300 நாட்கள் வீரர்களுடன் செலவிட வேண்டும். அவ்வளவு நாட்கள் என்னால் இருக்க முடியாது என்பதால் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டேன்.
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. குடும்பத்தை தியாகம் செய்து பார்க்க வேண்டிய வேலை அதுவாகும். இதனால்தான் அவர் பொறுப்பேற்றது வியப்பை அளித்தது. அவரது குடும்ப விவரம் பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன்.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

என்றாலும் 82 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.
ராகுல் டிராவிட் கடந்த 2002-ம் ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் 1137 ரன்கள் குவித்திரந்தார். தற்போது கோலி 1138 ரன்கள் சேர்த்து டிராவிட் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதிய டெஸ்ட் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

ராகுல் டிராவிட் 446 நிமிடம் களத்தில் நின்று 353 பற்துகளை சந்தித்து 180 ரன் (20 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 376 ரன் எடுத்து அணியை தோல்வியில் இருந்து தவிர்த்து வெற்றி பெற வைத்தனர்.
281 ரன் குவித்த இந்த டெஸ்ட் குறித்து லட்சுமண் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வெளியிட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, ஜாகீர்கான் பங்கேற்றனர்.

எனது கேப்டன் பதவியும் பறிபோய் இருக்கும். லட்சுமண் 281 ரன் குவித்தது எனது கேப்டன் பதவியை காப்பாற்றினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
2001-ம் ஆண்டு நடந்த இந்த தொடரில் இந்திய அணி மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோற்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டிலும், சென்னையில் நடந்த 3-வது டெஸ்டிலும் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. #Ganguly #VVSLaxman
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து போன்ற சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் இதுபோன்ற கண்டிசனில் விளையாடும்போது அனுபவம் முக்கியமானது.

ஒயிட் பந்தில் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை மனதில் வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது.
ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவது சிறந்தமுறையில் தயார் ஆவதற்கு உதவும். ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் நாம் இன்னும் சிறப்பான வகையில் முன்னேற்றம் காண வேண்டும்’’ என்றார்.
இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஹால் ஆஃப் பேம் பட்டத்திற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை டிராவிட்டிடம் வழங்கினார். இதன்மூலம் ராகுல் டிராவிட் கவுரவமான இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 889 ரன்களையும் குவித்துள்ளார். ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் ஏற்கனவே இந்தியாவின் பிஷன் சிங் பேடி, கபில்தேவ், கவாஸ்கர், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து கண்டிசன் பேட்டிங் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்காது. இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் திணறியதாக நான் நினைக்கிறேன். விராட் கோலியை நீக்கிவிட்டு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு ஈசியாக இருக்கவில்லை.

நான் இங்கிலாந்தில் விளையாடியுள்ளேன். கண்டிசன் சற்று கடினமான இருக்கலாம். ஆனால், ஐந்து ஆட்டங்களிலும் கண்டிசன் கடினமாகவே இருப்பது மிகவும் அரிதானது. இதுபோன்ற கண்டிசனுக்கு நாம் மிகவும் சிறப்பான வகையில் தயாராக வேண்டும். நாம் முயற்றி செய்து, கண்டிசனுக்கு ஏற்ற வகையில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விளையாடுவது தேவையானது. இது கடினமானதுதான். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்றார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அறிமுக வீரரான ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள ராகுல் டிராவிட், கங்குலியுடன் இணைந்துள்ளார்.

இதற்கு முன் 1946-ல் ருசி மோடி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்துள்ளார். 1996-ல் கங்கு 131 ரன்களும், ராகுல் டிராவிட் 95 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது நான்காவது வீரராக ஹனுமான் விஹாரி 56 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த 6-வது வீரர் ஹனுமான் விஹாரி ஆவார்.