search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumar Sangakkara"

    • வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
    • இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

    இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
    • இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம்.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி.

    இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ரவி பிஷ்னோய் அருமையாக பந்து வீசினார். அவரது பந்தை மூன்று, நான்கு சிக்ஸர் விளாச நாங்கள் கமிட் ஆகவில்லை. இந்த ஆடுகளம் சவாலானதாக இருந்தது. அவர்களது பந்து வீச்சும் ஸ்மார்ட்டாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் அடித்து ஆட தவறினோம்.

    இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம். துரதிர்ஷ்டவசமாக அவர் நல்ல ஃபார்மில் இல்லை. வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட் செய்கிறார். அவரது சிக்கலை அடையாளம் கண்டு, அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். எங்கள் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.

    என சங்ககாரா கூறினார்.

    • இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
    • நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன.

    இந்தியா- இலங்கை அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் ஜனவரி 3 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்த தொடருக்கான டி20 கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ஹர்திக் குறித்து இலங்கையின் முன்னாள் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா பெரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    கேப்டன்ஷிப்பை மாற்றுவது, புதிய கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய கேப்டன் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

    நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய லீக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

    தனது முதல் சீசனில் ஹர்திக் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது குஜராத். அணியின் அறிமுகப் போட்டியிலும், கேப்டனான முதல் போட்டியிலும் ஹர்திக் அபாரமாக செயல்பட்டு அணியை ஐபிஎல் சாம்பியனாக்கினார்.

    அதைத் தொடர்ந்து, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான கேப்டனாகவும் ஹர்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தொடரை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டார்.

    • இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    • 5-வது அல்லது 6-வது இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்கு அதிரடி ஷாட்களுடன் கலக்க வேண்டும்.

    மும்பை:

    இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்த தொடர் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்த தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் டி20 தொடருக்கு ஒரு அணியும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஒரு அணியும் பிரிக்கப்பட்டிருந்தன.

    இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தான். கடைசியாக கடந்த நியூசிலாந்துடனான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற சாம்சன், அதன்பின் வங்கதேச தொடரில் தற்போதும் இலங்கையுடனான டி20 தொடருக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர் குமார் சங்ககாரா முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.

    சஞ்சு குறித்து சங்ககாரா கூறியதாவது:-

    சஞ்சு சாம்சன் தனது பணி என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதுகுறித்து நன்கு தெளிவு பெற்ற பின்னர் தான் எப்படிபட்ட அனுகுமுறையை வெளிப்படுத்தப்போகிறோம் என முடிவு செய்ய வேண்டும். டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைத்தால் அதற்கேற்றார் போல நிதானம் வேண்டும், ஒருவேளை 5வது அல்லது 6வது இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்கு அதிரடி ஷாட்களுடன் கலக்க வேண்டும்.

    எனவே குழப்பிக்கொள்ளாமல் தெளிவாக விளையாட வேண்டும். இதனையெல்லாம் விட ஒரே ஒரு விஷயத்தை சஞ்சு சாம்சன் செய்யவே கூடாது. சஞ்சு சாம்சனுக்கு நீண்ட நாட்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இதுதான் தனது கடைசி வாய்ப்பு, இதில் நிரூபித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டும் இருந்துவிடக்கூடாது. அவர் இளம் வீரர், நிறைய திறமைகள் உள்ளே உள்ளன. எனவே நிதானமாக ஒவ்வொன்றாக மெதுவாக அவற்றினை கொண்டு வர வேண்டும். அவசரப்பட்டு இழந்துவிடக்கூடாது என சங்ககாரா கூறியுள்ளார்.

    இந்திய அணி விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல. திறமையான வீரர்கள் உள்ளனர் என்று சங்ககரா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. விராட் கோலி 200 ரன்கள் அடித்ததால் எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    ஆனால் லார்ட்ஸில் 23, 17 என நாற்பது ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புஜாரா, ரகானே, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் திணறி வருகிறார்கள்.

    இதனால் இந்தியா முழுக்க முழுக்க விராட் கோலியை நம்பியே இருக்கிறது. அவர் ஒன் மேன் ஆர்மியாக இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பேட்டிங்கில் ஜாம்பவான விளங்கியவரும் ஆன சங்ககரா, இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக விராட் கோலியை பேட்டிங் செய்து வருவதை பார்க்கையில் அவருடன் மற்ற பேட்ஸ்மேன்களை ஒப்பிடுவது நியாயம் அல்ல. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் இருக்கும். சிறந்த பெர்மார்மர். ஆனால், மற்ற வீரர்கள் சிறந்தவர்களே.

    புஜாரா, ரகானே உண்மையிலேயே சிறந்த பேட்ஸ்மேன்க்ள. புஜாரா டெஸ்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ரகானே வெளிநாட்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பார்மில் இருக்கும்போது கேஎல் ராகுல் அபாயகரமானவர். முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் குறைந்தவர்கள் அல்ல’’ என்றார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன குமார் சங்ககரா, தனக்கு அரசியலில் ஈடுபடும் என்ற எண்ணமே இல்லை என்கிறார். #Sangakkara
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த இவர், தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான், தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

    தற்போது நடந்து முடிந்துள்ள பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடத்தில் வெற்றி பெற்றது. வருகிற 18-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் வழியில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன சங்ககரா அரசியலில் களம் இறங்க இருக்கிறார் என்ற செய்தி வந்தது.



    இந்நிலையில் அப்படி என்ற எண்ணமே இல்லை என்று சங்ககரா தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘என்னைப் பற்றி வரும் யூகம் மற்றும் வதந்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அரசியலில் ஈடுபடும் எந்த எண்ணமும் எனக்கில்லை.

    நான் அரசியலில் இல்லை. இது உறுதி. நான் எப்போதும் இல்லை என்பதை என்னால் சொல்ல முடியும்’’ என்றார்.
    ×