search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvsIND"

    • முதல் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
    • டி20 தொடரை வென்றதுபோல் ஒரு நாள் போட்டியிலும் வெல்ல இந்திய அணி முயற்சிக்கும்.

    ஓவல்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்குகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், முகமது சமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, டாப்லே.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 215 ரன்களை குவித்தது.
    • இந்திய வீரர் சூர்யகுமார், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை குவித்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி, ரோகித் சர்மா தலா 11 ரன்னில் அவுட்டாகினர். 31 ரன்களுக்குள் இந்தியா 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். அய்யர் நிதானமாக ஆட சூர்யகுமார் அதிரடியில் இறங்கினார். மைதானம் முழுவதும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை வென்றது.

    • இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 77 ரன்களை குவித்தார்.
    • டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் 18 ரன்னிலும், ஜேசன் ராய் 27 ரன்னிலும், பிலிப் சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடிய மலான் பின்னர் அதிரடியில் இறங்கி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 77 ரன்களை குவித்து அவுட்டானார். மொயீன் அலி டக் அவுட்டானார்.

    லிவிங்ஸ்டோன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 216 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    • இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
    • இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 49 ரன் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

    இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், பிலிப் சால்ட், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலீசன், ரீஸ் டோப்லே.

    • இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து 121 ரன்களுக்கு சுருண்டது.
    • புவனேஷ்வர் குமார், பும்ராவின் சிறப்பான வேகப்பந்து வீச்சால் இந்தியா வெற்றி.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டையும், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர்குமார், ஸ்விங் முறை பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

    டி20 கிரிக்கெட்டில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது தமக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியதில் ஆச்சரியமில்லை என்றும், அவர் தெரிவித்தார்.

    இங்கிலாந்திற்கு எதிராக அவர்களது சொந்த நாட்டில் 3-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார்

    தாம் நேர்மறையாகவே சிந்திப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தமக்கு எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன் என்றும் புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டார்.

    • முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா, ஜடேஜா அதிரடியால் 170 ரன்களை எடுத்தது.
    • இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ரோகித் சர்மா 31 ரன்னும், ரிஷப் பண்ட் 26 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • இந்தியாவின் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்தது.
    • இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் கிலீசன் ரோகித், கோலி உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் இறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்ட்யா 12, தினேஷ் கார்த்திக் 12, ஹர்ஷல் படேல் 13, புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலீசன், மாட் பார்கின்சன்.

    • முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • 3 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20  தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அரைசதத்துடன், 4 விக்கெட்டும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    ரோகித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 13-வது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 போட்டியில் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் குவித்திருந்தது.
    • இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்ததுடன், 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன. இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜசன்ராய் 4 ரன்னுடன், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேவிட் மலன் 21 ரன்னும், ஹாரி புரூக் 28 ரன்னும் அடித்தனர். லிவிங்ஸ்டோன் டக்அவுட்டானர். அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் அடித்தார். கிரிஷ் ஜோர்டன் ரன்கள் அடித்தார்.

    19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
    • இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர்.

    ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

    • கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் டி20 போட்டி இன்று சவுத்தம்டனில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார்.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

    இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லி, மாட் பார்கின்சன்.

    இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    ×