என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நம்முடைய ஹீரோக்களுக்கு சபாஷ்: ஓவல் போட்டி முடிவு குறித்த சந்தேகத்திற்கு வருத்தம் தெரிவித்த சசி தரூர்
    X

    நம்முடைய ஹீரோக்களுக்கு சபாஷ்: ஓவல் போட்டி முடிவு குறித்த சந்தேகத்திற்கு வருத்தம் தெரிவித்த சசி தரூர்

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலியை சில நேரம் மிஸ் செய்கிறேன்.
    • ஆனால் ஒவல் டெஸ்டில் எப்போதும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியிருந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணிக்கு இந்தியா 574 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கட் (54), ஜோ ரூட் (106), ஹாரி ப்ரூக் (11) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    நேற்றைய ஆட்ட நேரம் முடியும் நேரத்தில் ஜோ ரூட், ப்ரூக் ஆட்டமிழந்தனர். அத்துடன் வெளிச்சம் இல்லாததால் போட்டி முன்னதாகவே முடிவடைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

    இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முக்கியமான தருணத்தில் வெற்றி பெற முடியவில்லை. முன்னாள் வீரர்களான ரோகித் அல்லது விராட் கோலி இருந்திருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என விமர்சனம் செய்தனர். அதில் சச தரூரும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர் ஆவார்.

    ஆனால் இன்று காலை 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 367 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன்செய்தது.

    இந்த நிலையில் நமது ஹீரோக்களுக்கு சபாஷ் என சச தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் "வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை... என்ன ஒரு வெற்றி (WHAT A WIN!) இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததில் இந்திய அணிக்கு மிகவும் உற்சாகமும் மகிழ்ச்சியும்! அணியில் காணப்பட்ட மன உறுதி, மன உறுதி மற்றும் ஆர்வம் நம்பமுடியாதவை. இந்த அணி சிறப்பு வாய்ந்தது.

    நேற்று முடிவு குறித்து நான் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியதற்கு வருந்துகிறேன். ஆனால் முகமது சிராஜ் ஒருபோதும் நம்பிக்கையை நிறுத்தவில்லை! நம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றைய போட்டிக்குப்பின் "இந்தத் தொடரில் விராட் கோலியை நான் சில முறை தவற விடுகிறேன். ஆனால், இந்த போட்டியில் எப்போதும் மிஸ் செய்கிறேன். அவருடைய பேட்டிங்கை தவிர்த்து கிரிட், தீவிரம், ஆடுகளத்தில் இருக்கும் உத்வேகம் உள்ளிட்டவை போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

    Next Story
    ×