என் மலர்
நீங்கள் தேடியது "கே.எல். ராகுல்"
- சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
- கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசியுள்ளனர். அத்துடன் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.
சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.
- கே.எல். ராகுல் 5 டெஸ்டில் 532 ரன்கள் குவித்தார்.
- சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.
ஆனால், அந்த சந்தேகத்தை இந்திய அணி தகர்த்தது. சிறப்பான ஆட்டத்தால் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என தொடரில் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.
இதற்கு முக்கிய காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக தொடக்க வீரரான கே.எல். ராகுல் அற்புதமாக விளையாடினார். அவர் 10 இன்னிங்சில் 2 சதம், 2 அரைசதத்துடன் 532 ரன்கள் குவித்துள்ளார். கவாஸ்கருக்கு (774 மற்றும் 542) அடுத்தப்படியாக வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரரான அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் இந்த தொடர் அவருக்கு எப்போதும் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.
அதேபோல் சுப்மன் கில் கேப்டன் பதவியுடன் சிறப்பாக பேட்டிங் செய்ய கடினம். அவருக்கு மிகுந்த நெருக்கடி இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். ஆனால், சுப்மன் கில் அபாரமாக விளையாடி 4 சதங்கள் விளாசினார். இதில் ஒன்று இரட்டை சதம் ஆகும். மொத்தம் 754 ரன்கள் குவித்துள்ளார். 10 இன்னிங்சில் அவரது சராசரி 75.4 ஆகும்.
ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருக்கு (774) அடுத்த இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில்லுக்கும் இந்த தொடர் நினைவில் இருக்கக் கூடிய தொடராக இருக்கும்.
- அட்கின்சன் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தால் கே.எல். ராகுல்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார்.
- 176 பந்தில் சதம் அடித்தார்.
- சதம் அடித்த அடுத்த பந்தில் அவுட் ஆனார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3ஆவது நாளான இன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளையின்போது 98 ரன்கள் எடுத்திருந்தார்.
மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், ஆர்ச்சர் வீசிய 67ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார். 176 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் விளாசினர். அடுத்த ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் 100 ரன்னோடு வெளியேறினார்.
இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் புகழ்வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல் ஆகியோர் சதம் விளாசினர்.
- குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், பண்ட் (2) ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்.
இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது.
இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனை 6 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் மற்றொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி ஒரே டெஸ்டில் 5 சதங்கள் அடித்தது 1 முறை மட்டுமே நடந்துள்ளது. 1955 இல் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரே இன்னிங்சில் 5 சதங்கள் விளாசியது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
- பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே சஞ்சீவ் கோயங்கா திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்திருந்தார்.
- இது அவரின் 9ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹெட்டிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் சேர்த்தன.
6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது பந்தில் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இதனால் 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிவடைந்த பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். கே.எல். ராகுல் நிதானமாக விளையாடினார். ரிஷப் பண்ட் 83 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கே.எல். ராகுலுக்கு முன்னதாக சதத்தை எட்டிவிடும் அளவிற்கு அற்புதமாக விளையாடினார்.
என்றாலும் 62ஆவது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து 202 பந்தில் சதம் விளாசினார். இவரது சதத்தில் 18 பவுண்டரிகள் அடங்கும். இந்தியா தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 99 பந்தில் 82 ரன்கள் எடுத்துள்ளார்.
கே.எல். ராகுலின் 9ஆவது சர்வதேச டெஸ்ட் சதம் இதுவாகும். முதல் இன்னிங்சில் 42 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.
- சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கே.எல். ராகுல் அரைசதம் தாண்டி விளையாடி வருகிறார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹெட்டிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் சேர்த்தன.
6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது பந்தில் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இதனால் 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா 159 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கூடுதலாக 200 ரன்கள் சேர்த்தால், இங்கிலாந்து சேஸிங் செய்ய கடும் சவாலானதாக இருக்கும்.
- சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.
- 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து வார்னரின் சாதனையை கே.எல். ராகுல் முறியடித்துள்ளார். 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
1. கே.எல். ராகுல் - 130 இன்னிங்ஸ்
2. டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
3. விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
4. ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
5. ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்
- கே.எல். ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
- கே.எல். ராகுலின் பிறந்த நான் இன்று. பிறந்த நாளில் மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் அதியா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
இன்று கே.எல். ராகுலுக்கு பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளில், தனது மகளுக்கு இவாரா (Evaarah) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவாரா என்றால் கடவுளின் பரிசு என அர்த்தம்.
- ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம்.
- கேப்டன் ரோகித் ஷர்மா, அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஆறு நாட்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பயிற்சியில் கே.எல். ராகுல் கலந்து கொண்டார். முதலில் தான் கடந்த சில வாரங்களாக செய்துவரும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் கே.எல். ராகுல்.
அதன் பிறகு, நெட்ஸ்-இல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவருக்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீசினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல், உடலில் எந்த இடையூறும் ஏற்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. கே.எல். ராகுல் பயிற்சியில் ஈடுபடுவதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்து வந்தனர்.
வேகப்பந்து வீச்சை தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் மயான்க் மார்கன்டே ஜோடி கே.எல். ராகுலுக்கு பந்துவீசியது. இவர்களின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் பல்வேறு ஷாட்களை அடித்தார். இதில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களும் அடங்கும்.
- முதல் போட்டியின்போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
- 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில், கடைசி 3 போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பு.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது
இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நூறு சதவீதம் உடல் தகுதி பெறவில்லை என்பதால் முழுமையாக குணமடைவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
23 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஆன தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கெதிராக 193 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 என ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






