என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லார்ட்ஸில் சதம் அடித்தார் கே.எல். ராகுல்
- 176 பந்தில் சதம் அடித்தார்.
- சதம் அடித்த அடுத்த பந்தில் அவுட் ஆனார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3ஆவது நாளான இன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளையின்போது 98 ரன்கள் எடுத்திருந்தார்.
மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், ஆர்ச்சர் வீசிய 67ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார். 176 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் விளாசினர். அடுத்த ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் 100 ரன்னோடு வெளியேறினார்.
இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் புகழ்வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
Next Story






