என் மலர்
நீங்கள் தேடியது "Lucknow Super Giants"
- ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.
- புதிய சீசன் துவங்கும் முன் அந்த அணியில் இருந்து விலகினார்.
ஐ.பி.எல். 2025 சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தின் போது லக்னோ அணி ரூ. 27 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணியில் தக்க வைக்க டெல்லி அணி ரைட்-டு-மேட்ச் முறையை பயன்படுத்த முயற்சித்தது. எனினும், லக்னோ அணி ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது. கடந்த 2021, 2022 மற்றும் 2024 ஐ.பி.எல். சீசன்களில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில், புதிய சீசன் துவங்கும் முன் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகினார்.
கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ரூணல் பாண்டியா வரிசையில், ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நான்காவது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். "ரிஷப் பண்ட் அதிக மதிப்புமிக்க வீரர் என்பதை தாண்டி அவர் ஐ.பி.எல்.-இல் சிறந்த வீரராகவும் இருப்பார்," என்று லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தார்.
ஐ.பி.எல். 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், மிக மோசமான நெட் ரன்-ரேட் அடிப்படையில் ஏழாவது இடம் பிடித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐ தொடர்ந்து ரிஷப் பண்ட் கேப்டன் ஆகியிருக்கும் இரண்டாவது ஐ.பி.எல். அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இருக்கும்.
- ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர்.
- கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்-ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதுபோக மிட்செல் மார்ஷ், மார்க்கிராம், டேவிட் மில்லர் போன்ற வீரர்களையும் எடுத்துள்ளது.
இந்த அணியில் ரிஷப் பண்ட், பூரன், மார்க்கிராம், மில்லர் போன்ற பல வீரர்கள் தலைமை ஏற்கும் நிலையில் உள்ளனர். இதனால் கேப்டன் யார் என்பதை பின்னர் முடிவு செய்வோம் என லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீசின் ஷமர் ஜோசப் உள்ளார். மிட்செல் மார்ஷும் இருக்கிறார். இவர்கள் பந்து வீச்சில் எப்படி ஆதிக்கம் செலுத்த இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பேட்டிங்கில் தொடக்க வீரர்களை களம் இறக்குவதில் லக்னோவிற்கு சவால் இருக்கும். மிடில் ஆர்டர்களில் பண்ட், பூரன், மார்க்கிராம், ஆயுஷ் படோனி உள்ளிட்டோர் உள்ளனர்.
24 பேர் கொண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
1. நிக்கோலஸ் பூரன் (வெளிநாட்டு வீரர்), 2. ரவி பிஷ்னோய், 3. மயங்க் யாதவ், 4. மொஹ்சின் கான், 5. ஆயுஷ் படோனி, 6. ரிஷப் பண்ட், 7. டேவிட் மில்லர் (வெளிநாட்டு வீரர்), 8. எய்டன் மார்க்கிராம் (வெளிநாட்டு வீரர்), 9. மிட்செல் மார்ஷ் (வெளிநாட்டு வீரர்), 10. ஆவேஷ் கான், 11. அப்துல் சமத், 12. ஆர்யன் ஜூயல், 13. ஆகாஷ் தீப், 14. ஹிம்மத் சிங், 15. எம். சித்தார்த், 16. திக்வேஷ் சிங், 17. ஷாபாஸ் அகமது, 18. ஆகாஷ் சிங், 19. ஷமர் ஜோசப் (வெளிநாட்டு வீரர்), 20. பிரின்ஸ் யாதவ், 21. யுவராஜ் சவுத்ரி, 22. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், 23. அர்ஷின் குல்கர்னி, 24. மேத்யூ பிரீட்ஸ்கே (வெளிநாட்டு வீரர்).
- இது முழு குழுவையும் பாதித்தது என்று நினைக்கிறேன்.
- பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது.
2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் கேஎல் ராகுலுடன் கடுமையாக நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் பார்வையில் சிக்கிய அந்த பேச்சுவார்த்தை குறித்து கேஎல் ராகுல் இறுதியாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் ஐந்து ஆட்டங்களில் மூன்று அல்லது கடைசி நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இது நடந்தபோது, எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது
விளையாட்டிற்குப் பிறகு மைதானத்தில் என்ன நடந்தாலும் அது ஒரு பகுதியாக இருப்பதற்கான மிகச் சிறந்த விஷயமாகவோ அல்லது கிரிக்கெட் மைதானத்தில் எவரும் பார்க்க விரும்பும் விஷயமாகவோ இல்லை. இது முழு குழுவையும் பாதித்தது என்று நினைக்கிறேன். பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது.
நாங்கள் ஒரு குழுவாக அரட்டை அடித்து, மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தோம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எங்களின் சிறந்த கால்களை முன்னோக்கி வைக்க முயற்சித்தோம். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களின் சிறந்தவை எப்போதும் போதுமானதாக இல்லை. நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்களால் பிளேஆஃப்களுக்குச் செல்லவோ அல்லது சீசனை வெல்லவோ முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
- கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது.
- அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர், ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
புதுடெல்லி:
2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை வெளியிட்டு இருந்தன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோஷின்கான் (ரூ. 4 கோடி), பதோனி (ரூ.4 கோடி) ஆகிய 5 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.
அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்போது இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதோடு 2025 சீசனில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 'ராகுல் லக்னோ அணியின் அங்கம்' என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தின் போது கே.எல். ராகுலை மீண்டும் எடுக்க லக்னோ அணி திட்டமிட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நிக்கோலஸ் பூரன் உலகின் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் ஆவார். அவரை விடுவித்து ஏலத்தில் எடுப்பதற்காக காத்திருக்க முடியாது. எங்களிடம் ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு வீரரை எடுப்பதற்கு உரிமையாளரை ஆர்.டி.எம். கார்டு இருக்கிறது.
மேலும் முடிந்த வரை எங்கள் அணியில் விளையாடிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து அம்சங்கள் குறித்து நானும், அணி உரிமையாளரும் மீண்டும், மீண்டும் ஆலோசித்து வருகிறோம். வீரர்கள் தக்க வைப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.
இவ்வாறு லாங்கர் கூறியுள்ளார்.
லக்னோ அணி நிர்வாகம் தக்கவைப்பு மூலம் ரூ.51 கோடியை செலவழித்துள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் செலவிட அந்த அணியின் கைவசம் ரூ.69 கோடி இருக்கிறது.
லக்னோ அணி 2024 சீசனில் 7-வது இடத்தை பிடித்தது. ராகுல் தான் அந்த அணியில் அதிகபட்சமாக 520 ரன் குவித்தார். அவரது ஸ்டிரைக்ரேட் 136 ஆக இருந்தது. முதல் வீரராக தக்க வைக்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 499 ரன் எடுத்தார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 178 என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது.
- கடந்த 3 சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார்.
ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 சீசன்களாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்திய அணியில் இடம் பிடித்த வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை ரீடெய்ன் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.
- ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா.
- கடந்த சீசனில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
இந்திய டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடந்த சீசனின்போது திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சோபிக்கவில்லை. இதற்கிடையே அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அத்துடன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரோகித் சர்மா எதுவும் தெரிவிக்கவில்லை. அதேபோல் அணி நிர்வாகமும் ரோகித் சர்மாவை விடுவிக்கும் எண்ணம் உள்ளது என்பது போன்ற கருத்தை தெரிவிக்கவில்லை.

ஆனால் டெல்லி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் ரோகித் சர்மாவை வாங்க தயாராக இருக்கின்றன. 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலம் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இரு அணிகளும் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாம்.
ரோகித் சர்மா உறுதிப்படுத்துதலுக்கான இரு அணிகளும் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தலா 100 முதல் 125 கோடி வரை செலவழித்து வீரர்களை ஏலத்தில் எடுக்க பிசிசிஐ அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. மந்தமாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.
அவர் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாண்ட்யா 16 ரன்னிலும் வதேரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் நமன் வெற்றிக்காக போராடினர். அதிரடியாக விளையாடிய நமன் அரை சதம் விளாசினார்.
இறுதியில் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
- மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - படிக்கல் களமிறங்கினர்.
படிக்கல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 28 ரன்னிலும் ஹூடா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேஎல் ராகுலுடன் பூரன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய பூரன் 19 பந்தில் அரை சதம் கடந்தார்.
The FIREW?RKS have begun at Wankhede!Will #NicholasPooran score a ton tonight? ?? | @IPL? | #MIvLSG: LIVE NOW on Star Sports | #IPLOnStar pic.twitter.com/CCyIXz2Axz
— Star Sports (@StarSportsIndia) May 17, 2024
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அர்ஷத் கான் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் போன போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து ஓவரில் கேஎல் ராகுல் 55 ரன்களுடன் வெளியேறினார்.
69 ரன்னில் 3-வது விக்கெட்டை இழந்த லக்னோ அணி 178 ரன்னில் 4-வது விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்த 1 ரன்னை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் பதோனி மற்றும் குர்ணால் பாண்ட்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
- டெல்லி அணிக்கு எதிராக லக்னோ தோல்வியை தழுவியது.
- இதனால் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
3 மற்றும் 4-வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.
- கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி அபிஷேக் போரெல் மற்றும் ஸ்டப்ஸ் அதிரடியால் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 5, ஸ்டோய்னிஸ் 5, ஹூடா 0, டி காக் 12, பதோனி 6 என சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த நிலையில் பூரன் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பூரன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 27 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து குர்ணால் பாண்ட்யா 18 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து அர்ஷத் கான் மற்றும் யுத்வீர் சிங் சரக் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். யுத்வீர் சிங் சரக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.