என் மலர்
நீங்கள் தேடியது "டாம் மூடி"
- உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார்
- லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உலகளாவிய கிரிக்கெட் இயக்குநராக டாம் மூடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் , SA20 உள்ளிட்ட உலகளாவிய சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளை டாம் மூடி இனிமேல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாம் மூடியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலியின் பணி நிலைத்து நின்று விளையாட வேண்டும்- ஸ்ரீசாந்த்
- ஓவருக்கு 11 அல்லது 9 ரன்கள் அடிக்க போதுமான திறமை விராட் கோலியிடம் உள்ளது- டாம் முடி
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்துள்ளது. விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணி தேர்வு, இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரரின் ரோல் என்ன? என்பது குறித்து பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து டிவி-யின் லைவ் நிகழ்ச்சயில் ஸ்ரீசந்த் மற்றும் டாம் மூடி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஸ்ரீசாந்த் கூறும்போது "விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளம் இறங்க வேண்டும். ஏனென்றால் அந்த இடத்தில் களம் இறங்கி Anchor ரோலில் (நிலைத்து நின்று) விளையாட முடியும்" என்றார்.
அப்போது குறிக்கிட்டு ஸ்ரீசாந்த் பேசியதை திருத்தி கூறினார் டாம் மூடி. டாம் மூடி கூறுகையில் "Anchor என்ற வார்த்தை தவறு. அதை அவர் திருத்த வேண்டியது அவசியம். டி20 கிரிக்கெட்டில் அவருடைய புத்திசாலித்தனம், அனுபவம் ஓவருக்கு 11 அல்லது 9 ரன்ரேட் என்பதற்கு போதுமானது" என்றார டாம் மூடி.
விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தொடக்க வீரரான களம் இறங்குவாரா? என்பது சந்தேகம்தான்.






