என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீசந்த்"

    • போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
    • ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.

    ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.

    2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    • சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார்.
    • சஞ்சு சாம்சனுக்கு எனது ஆதரவு, மற்ற கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என சபதம் எடுத்ததாக ஸ்ரீசந்த் மீது குற்றச்சாட்டு.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இவருக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்கவில்லை. இதில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என ஸ்ரீசந்த் தெரிவித்தார்.

    மேலும், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பேன், கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஸ்ரீசந்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று சிறப்ப பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீசந்துக்கு 3 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசந்த் கேரளா கிரிக்கெட் லீக்கில் கொல்லம் ஏரியஸ் அணியின் துணை உரிமையாளர் ஆவார். லக்கில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் திருப்திகரமான பதில் அளித்திருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இருப்பினும், அணி நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    • விராட் கோலியின் பணி நிலைத்து நின்று விளையாட வேண்டும்- ஸ்ரீசாந்த்
    • ஓவருக்கு 11 அல்லது 9 ரன்கள் அடிக்க போதுமான திறமை விராட் கோலியிடம் உள்ளது- டாம் முடி

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைத்துள்ளது. விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணி தேர்வு, இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரரின் ரோல் என்ன? என்பது குறித்து பேசி வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து டிவி-யின் லைவ் நிகழ்ச்சயில் ஸ்ரீசந்த் மற்றும் டாம் மூடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது ஸ்ரீசாந்த் கூறும்போது "விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளம் இறங்க வேண்டும். ஏனென்றால் அந்த இடத்தில் களம் இறங்கி Anchor ரோலில் (நிலைத்து நின்று) விளையாட முடியும்" என்றார்.

    அப்போது குறிக்கிட்டு ஸ்ரீசாந்த் பேசியதை திருத்தி கூறினார் டாம் மூடி. டாம் மூடி கூறுகையில் "Anchor என்ற வார்த்தை தவறு. அதை அவர் திருத்த வேண்டியது அவசியம். டி20 கிரிக்கெட்டில் அவருடைய புத்திசாலித்தனம், அனுபவம் ஓவருக்கு 11 அல்லது 9 ரன்ரேட் என்பதற்கு போதுமானது" என்றார டாம் மூடி.

    விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தொடக்க வீரரான களம் இறங்குவாரா? என்பது சந்தேகம்தான்.

    ×