என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sreesanth"

    • வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது.
    • அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

    நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன்.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    • லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.

    இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.

    இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.

    அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார். 



    • போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
    • ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.

    ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.

    2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    • சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார்.
    • சஞ்சு சாம்சனுக்கு எனது ஆதரவு, மற்ற கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என சபதம் எடுத்ததாக ஸ்ரீசந்த் மீது குற்றச்சாட்டு.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இவருக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்கவில்லை. இதில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என ஸ்ரீசந்த் தெரிவித்தார்.

    மேலும், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பேன், கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஸ்ரீசந்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று சிறப்ப பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீசந்துக்கு 3 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசந்த் கேரளா கிரிக்கெட் லீக்கில் கொல்லம் ஏரியஸ் அணியின் துணை உரிமையாளர் ஆவார். லக்கில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் திருப்திகரமான பதில் அளித்திருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இருப்பினும், அணி நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    • விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
    • ஸ்ரீ சாந்தை அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    லக்னோ:

    லக்னோ-பெங்களூர் இடையே போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டபோது விராட்கோலிக்கும், காம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    விராட்கோலியிடம் லக்னோ வீரர் கெய்ல் மேயர்ஸ் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பக்கம் வந்த காம்பீர், கெய்ல் மேயர்சை அவரிடம் என்ன பேச்சு என்று கூறி அழைத்து சென்றார். இதனால் கோலி ஆத்திரம் அடைந்தார். இதேபோல லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்குடன் கைகுலுக்கும் போதும் கோலி வம்புக்கு இழுத்து ஆத்திரப்படுத்தினார்.

    அதைத்தொடர்ந்து காம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரையும் மற்ற வீரர்கள் தடுத்தப்போது வாக்குவாதம் நிற்கவில்லை. காம்பீர் முன்னோக்கி சென்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். அவரை கோலி வம்புக்கு இழுத்ததால் ஆத்திரம் அடைந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வாக்குவாதத்தால் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. பரிசளிப்பு நிகழ்வின்போது விராட் கோலி கோபத்துடன் காணப்பட்டார். இந்த மோதல் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    காம்பீரும், விராட்கோலியும் இது மாதிரி மோதிக் கொள்வது இது முதல்முறையில்லை. டெல்லியை சேர்ந்த இருவரும் பலமுறை இது மாதிரி ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

     

    இந்த நிலையில் விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி ஒரு ஜாம்பவான், இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

    என கூறியுள்ளார்.

    • எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-

    போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

    போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும்.
    • அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி.

    ஐபிஎல் 2024 தொடர் நாளை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் டோனி குறித்தும் அவரது கேப்டன்ஷிப் குறித்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டோனியிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும். அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி. அவரிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர்.

    இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

    • நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும்.
    • அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.

    இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் அனைவரும் உலக கோப்பையில் வென்று கொடுத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார். நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார். கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார் ரோகித் அதிரடியை காண காத்திருங்கள் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    • தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் பார்க்க மாட்டேன் என்று பராக் கூறியிருந்தார்.
    • அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.

    ஐபிஎல் தொடரில் பெரிய அளவிள் விளையாடாத ரியான் பராக். 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    அதனை தொடர்ந்து தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று பராக் தெரிவித்திருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஃபைனலில் மட்டும் எந்த அணி வெல்லப் போகிறது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் ரியான் பராக் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ள அவர் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    என ஸ்ரீசாந்த் கூறினார்.

    • ஸ்ரீசாந்தின் அலட்சியத்தால் டோனி கோவமடைந்தார்.
    • டோனி அப்படி இருந்து நான் பார்த்ததில்லை.

    மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை பெற்று தந்தவர்.

    இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இவரை குல் கேப்டன் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். காரணம் மைதானத்தில் அழுத்தமாக இடங்களிலும் அமைதியாக இருந்து சாதித்து காட்டியவர்.

    இந்நிலையில் 2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி கோபப்பட்ட சம்பவத்தை தமிழக வீரர் அஸ்வின் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டிருந்த டோனிக்கு நான் ட்ரிங்க்ஸ் எடுத்துச் சென்றேன். அப்போது ஸ்ரீசாந்த் எங்கே என கேட்டார். அவர் ஓய்வு அறையில் இருக்கிறார் என கூறினேன். அவரை உடனடியாக வீரர்கள் அமரும் இடத்திற்கு வர சொல் என்றார். ஆனால் ஸ்ரீசாந்த அதை புறக்கணித்தார்.

    அடுத்த முறை ஹெல்மெட்டுடன் மைதானத்துக்குள் செல்கிறேன். அப்போது டோனி கோபத்துடன் இருந்தார். அவர் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை. ஸ்ரீ எங்கே அவர் என்ன செய்கிறான் என மீண்டும் கேட்டார்.

    அவர் ஓய்வு அறையில் மசாஜ் செய்கிறார் என்று நான் அவரிடம் சொல்கிறேன். அதற்கு டோனி எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஓவரில், ஹெல்மெட்டைத் திருப்பித் தரும்படி என்னை அழைத்தார். அப்போது அமைதியாக இருந்தார். ஹெல்மெட் கொடுக்கும்போது, ஒரு காரியம் செய். ரஞ்சிப் சார் கிட்ட போங்க. ஸ்ரீ-க்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். நாளைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யச் சொல்லுங்கள். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினார்.

    நான் திகைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்க்கிறேன். உடனே டோனி 'என்ன நடந்தது? உனக்கு நான் பேசும் ஆங்கிலம் புரியவில்லையா என கேட்டார்.

    இதனை கேட்ட ஸ்ரீ உடனே எழுந்து உடைகளை அணிந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து ட்ரிங்க்ஸ் கொடுக்கும் கடமைகளை அவரே ஏற்றுக்கொள்கிறார். அடுத்த முறை டோனிக்கு ட்ரிங்க்ஸ் தேவைப்படும்போது, ஸ்ரீசாந்த் அங்கு இருப்பார் என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sreesanth #SC
    புதுடெல்லி:

    2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ‘கடினமான தண்டனையான ஆயுட்கால தடையை எல்லா வழக்குகளிலும் அமல்படுத்தக்கூடாது. ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை ரத்து செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி 3 மாத காலத்துக்குள் ஸ்ரீசாந்திடம் விசாரணை நடத்தி அவரது தண்டனையின் அளவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  #Sreesanth #SC
    ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் விளையாட விரும்புவதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறினார். #Sreesanth
    சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. எனது வாழ்க்கையில் இன்னும் மிஞ்சி இருப்பது என்ன வென்று எனக்கு தெரியாது. எது என்னுடைய வாழ்க்கை என்று நினைத்தேனோ? அந்த கிரிக்கெட்டை கடந்த 6 வருடங்களாக நான் விளையாடவில்லை. நாட்டின் உயரிய கோர்ட்டின் தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் மதித்து கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்ப என்னை அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் பள்ளி மைதானத்துக்கு பயிற்சிக்கு சென்றால் என்னை யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதனை செய்ய விரும்புகிறேன். வயது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்த விஷயமாகும்.

    ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.

    இருண்ட காலத்தில் எனது பெற்றோர் மற்றும் என்னுடைய மனைவி, அவரது பெற்றோர் என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹர்பஜன்சிங், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்’.

    இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

    ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். வருகிற 18-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.  #Sreesanth

    ×