search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harbhajan"

    • அழுத்தமான பெரிய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் ஆவர்.
    • இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்படும் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

    டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய கேம் சேஞ்சர்ஸ் பென் ஸ்டோக்ஸ், ஜடாஜா, ரிஷப் பண்ட், ஸ்மித், நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

    மேலும் கூறியதாவது:- அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் ஆகியோர் ஆவர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார்.

    அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9000-க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார்.

    இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி தலைமையிலான 38 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மாற்றத்துடன் விளையாடியது ரொம் ஓவர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு பெற்றார். அதில் இருந்து இந்தியா அவரது தலைமையில் தற்போது வரை 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 22 முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று முடிவடைந்த டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

    விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து 38 டெஸ்டுகளிலும் வீரர்களை மாற்றியுள்ளார். அவர் 11 பேர் கொண்ட ஒரே அணியுடன் அடுத்த போட்டிகளில் விளையாடியது கிடையாது. இருந்தாலும் 22 வெற்றிகளை ருசித்துள்ளார். இப்படி 38 போட்டிகளிலும் வீரர்களை மாற்றியது மிகவும் ஓவர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரைக்கும் 38 டெஸ்டிலும் மாற்றம் என்பது மிகவும் ஓவர் (Too Much). ஆனால், ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமானவர்கள். அதேபோல் ஒவ்வொரு அணியின் செயல்பாடும் வித்தியாசமானவை. இப்படி மாற்றுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். அதனால் மாற்ற விரும்புகிறார்கள்.



    இந்திய அணி தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றியை நெருங்கியது. இங்கிலாந்தில் வெற்றியை நோக்கி திரும்பியுள்ளனர். மாற்றத்தை கேப்டன் விரும்புகிறார். நிர்வாகம் அதை அங்கீகரித்து, வீரர்களை ஏற்றுக் கொண்டால், எனக்கு அது பெரிய விஷயம் அல்ல.

    விராட் கோலி மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் எளிதாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களை நான் அதிக அளவில் பார்த்தது கிடையாது, மற்ற பேட்ஸ்மேன்களை விட கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி பேட்டிங் செய்கிறார்’’ என்றார்.
    ×