என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்பஜன்சிங்"
- 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
- லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.
அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார்.
- போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
- ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
- நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
- 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.
அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.
ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.
- பார்டர்-கவாஸ்கர் தொடரில் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
- இன்னும் 3 விக்கெட் எடுத்தால் அவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாதனையை முறியடிப்பார்.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான அவர் முதல் டெஸ்டில் 8 விக்கெட்டும் (5+3), 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டும், 3-வது டெஸ்டில் 9 விக்கெட்டும் (6+3) கைப்பற்றினார்.
4-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு பும்ரா 21 விக்கெட் எடுத்து இருந்தார். மெல்போர்னில் தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் அவர் 4 விக்கெட் கைப்பற்றினார். 2-வது இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
5-வது விக்கெட்டாக இன்று நாதன் லயனை அவுட் செய்தார். இதன் மூலம் பும்ரா இந்த தொடரில் 30 விக்கெட்டை வீழ்த்தினார்.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். இன்னும் 3 விக்கெட் எடுத்தால் அவர் ஹர்பஜன்சிங் சாதனையை முறியடிப்பார்.
சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 32 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
பும்ரா 3-வது முறையாக இந்த தொடரில் 5 விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் பிபுன்சிங் பெடி, பி.எஸ்.சந்திரசேகர், கும்ப்ளே ஆகியோரை அவர் சமன் செய்தார். மெல்போர்ன் மைதானத்தில் 9 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 44 டெஸ்டில் 203 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவர் 13 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்தார் பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 200-வது விக்கெட்டாக (44 டெஸ்ட்) அமைந்தது. இதன் மூலம் பும்ரா பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
200 விக்கெட்டுகள் வீழ்த்திய உலக அளவில் 85-வது வீரர், இந்திய அளவில் 12-வது வீரர் ஆவார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 2-வது இந்தியர் என்ற சிறப்பை ஜடேஜாவுடன், பும்ரா பகிர்ந்துள்ளார். இந்திய பவுலர்களில் இந்த இலக்கை அதிவேகமாக தொட்டவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். அவர் 37 டெஸ்டுகளிலேயே 'டபுள்செஞ்சுரி' விக்கெட்டை எடுத்து விட்டார்.
பும்ரா சராசரியாக 19.56 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளார். 20-க்கும் குறைவான சராசரியுடன் 200 விக்கெட்டை வீழ்த்திய ஒரே பவுலர் பும்ரா தான்.
200 விக்கெட்டுகளை எடுப்பதற்கு அவர் 3,912 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்திய வகையிலும் பும்ராவுக்கே முதலிடம். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் ஜோயல் கார்னெர் 4,067 ரன்கள் வழங்கி இந்த மைல்கல்லை அடைந்ததே சாதனையாக இருந்தது.
குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டை மகசூல் செய்த சாதனையாளர் பட்டியலில் பும்ரா 4-வது இடத்தில் உள்ளார். இதற்காக அவர் 8,484 பந்துகள் வீசி இருக்கிறார். முதல் 3 இடங்களில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (7,725 பந்து), தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் (7,848 பந்து), ககிசோ ரபடா (8,154 பந்து) உள்ளனர்.
புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் மட்டும் பும்ரா 23 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்) வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை தனதாக்கினார். அனில் கும்பிளே சிட்னி ஸ்டேடியத்தில் 20 விக்கெட் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.






