என் மலர்
நீங்கள் தேடியது "லலித் மோடி"
- ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
- இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும்.
இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனில் அண்மையில் கொண்டாடினார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற விருந்தில் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் வீடியோக்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
லண்டனின் மேஃபேரில் உள்ள விலையுயர்ந்த மடாக்ஸ் கிளப்பில் இந்த விருந்து நடைபெற்றது.
இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும். விருந்தில் நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டி நடனமாடும் காட்சிகள் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.
- வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது.
- அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன்.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
- போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
- ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
- முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்றார்.
- இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாத பொருளாக மாறியுள்ளது.
இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி ஒன்றில் இணைந்து பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடுமையான நிதி குற்றங்களைச் சந்தித்து வரும் இந்த இருவரும் லண்டனில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் இருவரும் பாடல்களைப் பாடி மகிழ்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்தில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்று லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
"இது நிச்சயமாக சர்ச்சைக்குரியது. ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன்" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
- லலித் மோடி 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.
- இந்திய புலனாய்வு முகமைகளால் தேடப்படும் பட்டியலில் லலித் மோடி வைக்கப்பட்டு உள்ளார்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் நிமோனியா பாதிப்பும் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ நாட்டில் சிகிச்சைக்குப் பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு விமானத்தில் திரும்பினார்.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லலித் மோடிக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பதால் 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார்.
- லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
- மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, லலித் மோடியின் சார்பில் ஆஜராகி வாதாடினார்
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி மீது ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார். இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் லலித் மோடி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பதிவுகளில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி தனது வாதத்தை முன்வைத்தார்.
அப்போது, லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக லலித் மோடி சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய நிளிதழ்ளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
லலித் மோடி சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் மிகவும் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பதிவுகள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- இந்த வழக்கு நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் சிடி ரவிகுமார் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
- மன்னிப்பை ஏற்றுக் கொள்வதால் இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்த பகிரங்க மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் சிடி ரவிகுமார் அடங்கிய அமர்வில் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது லலித் மோடி சார்பில் அவரது வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், 'எதிர்காலத்தில் நீதிமன்றங்களின் கண்ணியம், இந்திய நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'நிபந்தனையற்ற, அடிமனதில் இருந்து மன்னிப்பு கோரும் பட்சத்தில், அதனை வழங்குவது தான் சரி என்று நீதிமன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் காரணமாக நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் பெருமனதோடு ஏற்றுக் கொள்கிறோம். மன்னிப்பை ஏற்றுக் கொள்வதால் இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம்,' என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
அனைவரும் இந்த துறைக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒற்றை கோரிக்கையாக இருந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக ஏப்ரல் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி கூறிய அவதூறான கருத்துக்கு அவர் சமூக வலைதளங்கள் மற்றும் தேசிய நாளேடுகள் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை.
- டெல்லி அணிக்காக விளையாட விரும்பினேன்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர். 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை டோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை லலித் மோடி அழித்து விடுவேன் என மிரட்டியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் பெங்களூர் எனது இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றும் உணவு எனக்கு பிடிக்கவில்லை. டெல்லி மீரட்டுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருந்து எனது வீட்டுக்கு செல்ல சுலபமாக இருக்கும்.
ஆனாலும் ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாங்க. அது ஒப்பந்தம் என்று தெரியவில்லை. நான் பெங்களூரு அணிக்கு விளையாட விரும்பவில்லை டெல்லிக்காக விளையாட விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து மிரட்டினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என கூறினார்.
இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.
- லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
- விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன்.
லண்டன்:
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லலித் மோடி கூறியிருப்பதாவது:-
"என்மீது எந்த கோர்ட்டிலும் வழக்குகள் இல்லை. சட்டப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தால், தயவுசெய்து அதை சமர்ப்பிக்கவும். இருப்பினும், நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 'மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
- அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.
பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லலித் மோடி, ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறின. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அதை செய்தோம். அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். ஸ்ரீனிவாசனுக்கு பிளின்டாஃப் வேண்டும் என்பதால், நாங்கள் மற்றவர்களிடம் அவரை ஏலம் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்."
"அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார்," என்று தெரிவித்தார்.
- லலித் மோடி 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார்.
- லித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லலித் மோடி, "என்மீது எந்த கோர்ட்டிலும் வழக்குகள் இல்லை. சட்டப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தால், தயவுசெய்து அதை சமர்ப்பிக்கவும். இருப்பினும், நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 'மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமையை பெற்றுள்ளார். இதனையடுத்து, தனது இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அவர் விண்ணப்பித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
- அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது மேட்ச் பிக்சிங் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமை பெற்று தஞ்சம் அடைத்தார். இதனையடுத்து, கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், லலித் மோடி குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தபோது அவரின் இன்டர்போல் குற்றப்பின்னணி தரவுகளில் அவர் எந்த குற்றவியல் தண்டனையும் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் லலித் மோடி குறித்து எச்ச்சரிக்கை அறிவிப்பை வெளியிட இந்திய அதிகாரிகள் இன்டர்போலிடம் கோரிக்கை வைத்திருப்பது குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் இரண்டு முறையும் இன்டர்போல் தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அதிகாரிகளின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் லலித் மோடி தற்போது மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரை நாடு கடத்த இந்திய அதிகாரிகள் கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






