என் மலர்
நீங்கள் தேடியது "vijay mallya"
- கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுள்ளனர்.
- கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பெங்களூரு:
தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அவர் பெற்ற கடனுக்கு ஈடாக அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை ஏலத்தில் விற்றது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்று ரூ.14 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜய் மல்லையா சார்பில் அவரது வக்கீல் சஜன் பூவையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "வங்கிகளில் நான் பெற்ற கடனை வசூலிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, ரூ.6,200 கோடியை செலுத்த வேண்டும் என கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை செலுத்தாததால், அமலாக்கத் துறை அந்த நிறுவன சொத்துகளை விற்று கடனை திருப்பிச் செலுத்தி உள்ளது.
ஆனால், ரூ.6,200 கோடி கடனுக்கு சொத்துகளை விற்று ரூ.14 ஆயிரம் கோடி மீட்டுள்ளதாக நிதி மந்திரி கூறி உள்ளார். அதேநேரம், ரூ.10,200 கோடி மீட்கப்பட்டு வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடன் வசூல் அதிகாரி கூறியுள்ளார்.
எனவே, நான் பெற்ற கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டுள்ளதால் அந்த கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று நீதிபதி ஆர்.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தேவதாஸ், விஜய் மல்லை யாவின் இந்த மனு குறித்து வருகிற 13-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
- வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016 இல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.
- மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார், அவரை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளை கோரி விஜய் மல்லையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016 இல் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். அவர் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஈடாக அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன. இந்நிலையில் வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளைக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையில் மல்லையா சார்பாக மூத்த வழக்கறிஞர் சஜன் பூவய்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். மல்லையா ரூ.6203 கோடி திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அவரின் சொத்துக்களை விற்று ரூ.14,131 கோடியை வங்கி வசூலித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இருப்பினும் மக்களவையில் மல்லையாவை ஒரு பொருளாதார குற்றவாளி என கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடன் வசூல் அதிகாரி ரூ.10,200 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளதாகவும் மல்லையாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
எனவே, வசூலிக்கப்பட்ட கடன் தொகை குறித்த அறிக்கையை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மல்லையா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மல்லையாவின் மனுவின் அடிப்படையில், நீதிபதி ஆர்.தேவதாஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
- விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து 14,131.6 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
- நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து 1052.58 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
தொழில் அதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றிருந்தார். வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பி கட்ட முடியாத நிலையில், வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். அதேபோல் வைர வியாபாரியான நீரவ் மோடியும் வங்கிகளில் கடன் பெற்று, பின்னர் கட்ட முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
இதுபோன்று பல தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்பப் பெற முடியாமல் உள்ளள. இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு முறைகேடு செய்தவர்களின் சொத்துகளை விற்பனை செய்து 22,280 கோடி ரூபாயை வங்கிகளுக்கு அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து 14,131.6 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
அதேபோல் நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து 1052.58 கோடி ரூபாய் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
தேசிய ஸ்பாட் எக்சேஞ்ச் லிமிடெட் முறைகேட்டில் 17.47 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.எஸ். குரூப் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்பனை செய்து 20.15 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்வேலி குரூப் (Rose Valley Group) 19.40 கோடி ரூபாய்
சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்- 185.13 கோடி ரூபாய்
நவேரா சேக் மற்றும் மற்றவர்களின் மதிப்புகள் (ஹீரா குரூப்) - 226 கோடி ரூபாய்
மெகுல் சோக்சி மற்றும் மற்றவர்களிடம் இருந்து - 2,565.90 கோடி ரூபாய்
நாயுடு அம்ருதேஷ் ரெட்டி மற்றும் மற்ற மதிப்புகள்- 12.73 கோடி ரூபாய்
வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களைச் செய்த எவரையும் தனது அரசாங்கம் விட்டுவைக்கவில்லை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்
- கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் மற்றும் தனது நிறுவனத்தின் மூலம் வாங்கிய பல்வேறு கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கு இதுநாள்வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரம்மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எனவே தற்போது மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னரும் பல முறை விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

- மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
- நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.
நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.
நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.
- விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- விசாரணை அமைப்புகள் அவர்களை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
கோடிக்கணக்கான பண மோசடி வழக்கில் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்ற தொழில் அதிபர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோட காரணம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டு முன்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமின் வழங்கப்பட்ட வியோமேஷ் ஷா, நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது வியோமேஷ் ஷாவின் நிபந்தனை மாற்றி அமைக்கப்பட்டால் நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால், விசாரணை அமைப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், "இந்த விவாதங்களை முழுமையாக நான் ஆய்வு செய்து பார்த்ததில் வெளிநாட்டிற்கு ஓடிய நபர்கள், விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் காரணம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.
மேலும், "வியோமேஷ் ஷா சம்மன் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஜாமின் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக பலமுறை விண்ணப்பம் செய்துள்ளார். ஷா வழக்கை நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் வழக்குடன் ஒப்பிட முடியாது" என்றார்.
நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி பலகோடி ரூபாய் பிஎன்பி மோசடியில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். நிரவ் மோடி தற்போது இங்கிலாந்தில் உள்ள சிறையில் உள்ளார். மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் உள்ளார். மல்லையாக இங்கிலாந்தில் உள்ளார். 900 கோடி ரூபாய் லோன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
- அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.
- அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி :
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை.
அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அவரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் நடவடிக்கை மும்பை தனிக்கோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி விஜய் மல்லையா தரப்பில் மும்பை ஐகோர்ட்டை நாடினார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
உடனே அவர் தரப்பில் 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்காத நிலையில், விஜய் மல்லையாவை 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி மும்பை தனிக்கோர்ட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.
இப்படி அறிவிக்கிறபோது, அவரது சொத்துகளை பறிமுதல் செய்கிற அதிகாரம், வழக்கு தொடுக்கிற புலனாய்வு அமைப்புக்கு வந்து விடுகிறது.
இந்த நிலையில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிண்டல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக தான் விஜய் மல்லையாவிடம் இருந்து எந்த அறிவுறுத்தல்களையும் பெறவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து அவரது மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது
புதுடெல்லி:
பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். 2016-ம் ஆண்டில் இருந்து அவர் லண்டனில் உள்ளார்.
இதற்கிடையே வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி விஜய் மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு 2020-ம்ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் அவர் கோர்ட்டில் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு பலமுறை வாய்ப்பளித்தது. ஆனால் விஜய் மல்லையா ஆஜராகவில்லை.
இந்த வழக்கு கடந்த மார்ச் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி லலித் தலைமையிலான பெஞ்ச் விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தது.
அதில், கோர்ட்டில் தகவல் தெரிவிக்காமல் விஜய் மல்லையா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அவருக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
ரூ.317 கோடியை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்த வேண்டும். அத்தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இவர்கள் சொத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இவர்களது ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் சொத்துக்களில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 113 கோடியே 91 லட்சம் சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.335 கோடியே 6 லட்சம் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ள மொத்த நிதியில் 84.61 சதவீதம், வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, அமலாக்க இயக்குனரகம் தங்களுக்கு ஒப்படைத்த சொத்துகளை விற்று ரூ.7,975.27 கோடியை ஈட்டி உள்ளது.

விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

இதன் விளைவாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமாகும். தற்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை இந்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடி கொடுத்து உதவிகரம் நீட்டியது. ஆனால் தனியார் விமான நிறுவனங்களுக்கு இவ்வாறு வஞ்சனை செய்கிறது. பொதுத்துறை வங்கிகளாக இருந்தாலும் எந்த பாகுபாடுமின்றி செயல்படதான் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். #JetAirways #VijayMallya