என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மல்லையா"

    • இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது
    • கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    மக்களவையில் எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.

    இந்த மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரை, இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.

    கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.

    அவருக்குப் பிறகு, வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

    இதற்கிடையே விஜய் மல்லையா, மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அவ்வப்போது லண்டனில் பார்ட்டி நடத்தி நடனமாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.  

    • ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
    • இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும்.

    இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

    பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

    மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

    இந்நிலையில் லலித் மோடி தனது 63வது பிறந்தநாளை லண்டனில் அண்மையில் கொண்டாடினார்.

    கடந்த வார இறுதியில் நடைபெற்ற விருந்தில் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் வீடியோக்களை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    லண்டனின் மேஃபேரில் உள்ள விலையுயர்ந்த மடாக்ஸ் கிளப்பில் இந்த விருந்து நடைபெற்றது.

    இந்த கிளப்பில் ஒரு மேஜையை புக்கிங் செய்ய குறைந்தபட்சம் ஆயிரம் பவுண்டுகள் (சுமார் ரூ. 1.18 லட்சம்) கட்டணம் ஆகும். விருந்தில் நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டி நடனமாடும் காட்சிகள் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.  

    • ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கத்தை விஜய் மல்லையா வழங்கினார்.
    • விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் பணிகளுக்காக 27 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.3 கிலோ தங்கம் மாயமானதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செப்டம்பர் 4, 1998 அன்று, சபரிமலையில் உள்ள கருவறை, கூரை மற்றும் துவாரபாலக சிற்பங்கள் ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கம் மற்றும் 1,900 கிலோ செம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.. இந்த தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையாவால் பரிசாக அப்போது வழங்கினார்.

    இந்நிலையில், சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளில் இருந்த தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை, அவை செம்புத் தகடுகள் என பழுது பார்க்கும் நிறுவனம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.

    • முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்றார்.
    • இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாத பொருளாக மாறியுள்ளது.

    இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி ஒன்றில் இணைந்து பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் கடுமையான நிதி குற்றங்களைச் சந்தித்து வரும் இந்த இருவரும் லண்டனில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் இருவரும் பாடல்களைப் பாடி மகிழ்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்தில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்று லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    "இது நிச்சயமாக சர்ச்சைக்குரியது. ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன்" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

    மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    • இந்திய சிறைகளில் உள்ள நிலைமைகள் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டின் பிரிவு 3 ஐ மீறுவதாகக் கண்டறியப்பட்டது.
    • ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு அதன் முன்னாள் உரிமையாளர் என்ற வகையில் விஜய் மல்லையா மல்லையா வாழ்த்து சொன்னார்.

    இந்தியாவில் ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி குற்றச்சாட்டில் தேடப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையா 2016 இல் வெளிநாட்டுக்கு தப்பியோடி, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் தொழிலதிபர் ராஜ் ஷமானியுடனான நான்கு மணி நேர பாட்காஸ்ட் உரையாடலில், அவர் மீதான வழக்குகள், இந்தியாவிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறுதல், சட்டப் போராட்டங்கள், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சரிவு மற்றும் திருடன் என்று அழைக்கப்பட்டது பற்றி விஜய் மல்லையா மனம் திறந்துள்ளார்.

    பாட்காஸ்டில் பேசிய மல்லையா, "மார்ச் (2016) முதல் நான் இந்தியாவுக்குச் செல்லாததால், நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று அழைக்கலாம். நான் தப்பியோடவில்லை, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவை விட்டு வெளியேறினேன். நான் சரி என்று நினைக்கும் காரணங்களுக்காக நான் திரும்பி வரவில்லை, எனவே நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று அழைக்க விரும்பினால், என்னை அப்படி அழைக்கவும், ஆனால் 'திருடன்' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? " என்று கேட்டார்.

    நியாயமான விசாரணை உறுதி செய்யப்பட்டால் அவர் இந்தியா திரும்புவாரா என்று கேட்டதற்கு, "அத்தகைய உத்தரவாதம் கிடைத்தால் நான் நிச்சயமாக அதைப் பரிசீலிப்பேன்" என்று மல்லையா பதிலளித்தார்.

    நாடுகடத்தல் வழக்கில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, இந்திய சிறைகளில் உள்ள நிலைமைகள் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டின் பிரிவு 3 ஐ மீறுவதாகக் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

    கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் சரிவு பற்றிப் பேசிய மல்லையா, 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறினார். அந்த சமயத்தில் "ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டது. பணம் புழங்குவது நின்றுவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பும் பாதிக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.

    "நான் பிரணாப் முகர்ஜியிடம் சென்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் செயல்பாடுகளைக் குறைக்க வேண்டும், விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், ஏனெனில் இந்த மந்தமான பொருளாதார சூழலில் அது தொடர்ந்து செயல்பட முடியாது என்று கூறினேன்" என்று தெரிவித்த மல்லையா, செயல்பாடுகளைக் குறைக்க வேண்டாம் என்றும் வங்கிகள் அவருக்கு ஆதரவளிக்கும் என்றும் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    இந்த ஆண்டு பிப்ரவரியில் மல்லையா கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார். உண்மையில் செலுத்த வேண்டிய ரூ.6,200 கோடிக்கு எதிராக வங்கிகள் ஏற்கனவே ரூ.14,000 கோடியை வசூலித்துவிட்டதாக அவர் தனது வழக்கறிஞர் மூலம் வாதிட்டார். வசூலிக்கப்பட்ட தொகையின் விரிவான கணக்குகளை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார். இந்த மனுவில் உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இருப்பினும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பான நிதிக் குற்றங்களுக்காக மல்லையாவை விசாரணைக்கு உட்படுத்த இந்திய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

    ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு அதன் முன்னாள் உரிமையாளர் என்ற வகையில் விஜய் மல்லையா மல்லையா வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    அந்த அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை அந்த பேரணி நடைபெறும்.

    இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியை முன்னாள் ஆர்சிபி அணி நிர்வாகத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா நேற்று டிவி-யில் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கண்கலங்கி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.
    • அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    புதுடெல்லி :

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களைப் பெற்றுவிட்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்தவில்லை.

    அவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார். அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    அவரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் நடவடிக்கை மும்பை தனிக்கோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு தடை கோரி விஜய் மல்லையா தரப்பில் மும்பை ஐகோர்ட்டை நாடினார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    உடனே அவர் தரப்பில் 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கோர்ட்டு இடைக்கால தடை எதுவும் விதிக்காத நிலையில், விஜய் மல்லையாவை 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி மும்பை தனிக்கோர்ட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது.

    இப்படி அறிவிக்கிறபோது, அவரது சொத்துகளை பறிமுதல் செய்கிற அதிகாரம், வழக்கு தொடுக்கிற புலனாய்வு அமைப்புக்கு வந்து விடுகிறது.

    இந்த நிலையில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிண்டல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக தான் விஜய் மல்லையாவிடம் இருந்து எந்த அறிவுறுத்தல்களையும் பெறவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் பாப் டூ பிளசிஸ் வென்றார்.

    இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விஜய் மல்லையா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மல்லையான எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் நான்கு இடங்களுக்குள் தகுதிபெற்று ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி. அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏமாற்றமளிக்கும் தொடக்கத்திற்குப் பிறகு சிறந்த உறுதியும் திறமையும் வெற்றிகரமான வேகத்தை உருவாக்கியுள்ளன. கோப்பையை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • ஆர்சிபி மற்றும் விராட் கோலியை தேர்வு செய்யும்போது இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என உள்ளுணர்வு சொன்னது.
    • தற்போது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என உள்ளுணர்வு சொல்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது விஜய் மல்லையா ஆர்சிபி அணியை ஏலத்தில் எடுத்தார். அதேபோல் விராட் கோலியையும் ஏலத்தில் எடுத்தார்.

    இதுவரை ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    இந்த சீசனில் முதல் எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அதாவது ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று, சென்னை அணிக்கெதிராக ரன்ரேட்டி அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேஉத்வேகத்துடன் சென்றால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆர்சிபி அணியை எடுப்பதற்காகவும், விராட் கோலியை எடுப்பதற்காகவும் ஏலம் கோரியபோது, என்னுடைய உள்ளுணர்வு என்னிடம், நான் அதைவிட சிறந்த தேர்வை தேர்வு செய்திருக்க முடியாது எனச் சொன்னது.

    அதேபோல் தற்போது என்னுடைய உள்ளுணர்வு, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி-க்கு சிறந்த வாய்ப்பு என என்னிடம் சொல்கிறது. முன்னோக்கி, மேல்நோக்கி செல்ல பெஸ்ட் ஆஃப் லக்..

    இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

    • விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • விசாரணை அமைப்புகள் அவர்களை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    கோடிக்கணக்கான பண மோசடி வழக்கில் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்ற தொழில் அதிபர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோட காரணம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.

    சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டு முன்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமின் வழங்கப்பட்ட வியோமேஷ் ஷா, நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வியோமேஷ் ஷாவின் நிபந்தனை மாற்றி அமைக்கப்பட்டால் நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    ஆனால், விசாரணை அமைப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், "இந்த விவாதங்களை முழுமையாக நான் ஆய்வு செய்து பார்த்ததில் வெளிநாட்டிற்கு ஓடிய நபர்கள், விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் காரணம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.

    மேலும், "வியோமேஷ் ஷா சம்மன் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஜாமின் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக பலமுறை விண்ணப்பம் செய்துள்ளார். ஷா வழக்கை நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் வழக்குடன் ஒப்பிட முடியாது" என்றார்.

    நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி பலகோடி ரூபாய் பிஎன்பி மோசடியில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். நிரவ் மோடி தற்போது இங்கிலாந்தில் உள்ள சிறையில் உள்ளார். மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் உள்ளார். மல்லையாக இங்கிலாந்தில் உள்ளார். 900 கோடி ரூபாய் லோன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    • மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
    • நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.

    நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

    நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.

    • கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்
    • கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

    இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் மற்றும் தனது நிறுவனத்தின் மூலம் வாங்கிய பல்வேறு கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

     

    இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

     

    அவர் மீதான வழக்கு இதுநாள்வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரம்மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எனவே தற்போது மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இதற்கு முன்னரும் பல முறை விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

     

    ×