என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harbhajan Singh"

    • ரோகித் ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
    • சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு இது ஒரு புதிய சவால் என்றாலும், ரோகித் வெறும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள் அணியையும் வழிநடத்தும் கூடுதல் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், ரோகித் கேப்டனாக இல்லாமல், ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.

    ஒருவேளை அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால், மீண்டும் கேப்டனாகத்தான் செல்வார் என்று நான் நினைத்தேன். அவர் சமீபத்தில்தான் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பிற தொடர்களையும் வென்று கொடுத்துள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவர். எனவே, குறைந்தபட்சம் இந்த ஒரு தொடருக்காவது அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    நீங்கள் 2027 உலகக்கோப்பையைப் பற்றி யோசிப்பதாக இருந்தால், அது இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். ஒருவேளை இன்னும் 6 அல்லது 8 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து கூட அவர் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சுப்மன் கில்லுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே நேரத்தில், ரோகித் சர்மா கேப்டனாக இல்லாதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு கிரிக்கெட், வணிகம் நடைபெறக் கூடாது எனச் சொல்கிறார்கள்.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (நாளைமறுதினம்) துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடத்தப்பட வேண்டுமா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் போட்டியாக இருக்கும். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எல்லோரும் கிரிக்கெட் மற்றும் வர்த்தகம் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறக்கூடாது எனச் சொல்கிறார்கள். நாம் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினோம். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் புறக்கணித்தோம்.

    ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் புரிதல் முறை உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கருத்து. அரசாங்கம் போட்டி நடக்கலாம் என்று சொன்னால், அது நடக்க வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    • வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது.
    • அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

    நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன்.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    • லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.

    இந்த நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பது போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.

    இந்த நிலையில், வீடியோ வெளியானதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் உங்கள் இருவரையும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் இழுப்பதை பார்க்கும்போது மனிதாபிமானமற்றவர்களாக தெரிகிறீர்கள்.

    அந்த சம்பவத்தில் இருந்து ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் மீண்டு வந்துவிட்டனர். ஆனாலும் அந்த பழைய காயத்தை நீங்கள் மீண்டும் கிளறி விடுகிறீர்கள். இது அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளார். 



    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் ஷ்ரேயாஸ் ஐயர், கில்லுக்கு இடம் வழங்கியுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இத்தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

    இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார்.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டி20 என்பது வெறும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளின் விளையாட்டு அல்ல. அவரது பேட்டிங் அடிப்படைகள் மிகவும் வலுவானவை, அவரால் எந்த வடிவத்திலும் ரன்கள் எடுக்க முடியும். மேலும் அவால் 160 ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாட முடியும்.

    தற்போதுள்ள இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அதிரடியான வீரர்கள் இருந்தாலும், சுப்மன் கில் போன்ற நங்கூரமிடக்கூடிய மற்றும் கியர்களை மாற்றக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகவும் முக்கியம். அதனால் இந்த தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பிடிக்க வேண்டும்.

    என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

    • லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும்.
    • ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். அவருடன் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற வேண்டும். 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப் பந்துவீச்சாளர்களு டன் இந்திய அணி களம் இறங்க வேண்டும்.

    ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை அவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு ஆடுகளத்திலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
    • பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்.

    சென்னை:

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. மும்பையை வீழ்த்தியது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்றது.

    சென்னை அணியில் ராகுல் திரிபாதி , ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள். இதில் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். ஆனால் திரிபாதி போதுமான ரன்களை குவிக்கவில்லை.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கான்வேயை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சென்னை அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. அவர்கள் அதிக தவறுகளைச் செய்கிறார்கள். ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்குகிறார்கள்.

    அவர் தனது உடலை அதிகமாக குலுக்குகிறார். ஆனால் அதற்கு தகுந்த ரன்கள் அடிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு மன்னித்து கொள்ளுங்கள். திரிபாதி மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய வீரர். ஆனால் அவர் ஆடும் லெவனில் இருக்க கூடாது என்பதில் நான் தெளிவாக சொல்கிறேன். பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதற்கான நோக்கமும் தற்போது அவரிடம் தெரியவில்லை.

    ருதுராஜ் கெய்க்வாட், சரியான தொடக்க வீரர் ஆவார். அவர் திரிபாதிக்காக 3-வது இடத்தில் களம் இறங்குகிறார். எப்போதும் தொடக்க ஜோடி சென்னை சூப்பர் கிங்சுக்கு ஒரு பெரிய பலமாக இருந்து வருகிறது. மேத்யூ ஹைடன், டுவைன் ஸ்மித், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக இருந்தனர்.

    தற்போது சென்னை அணியில் கான்வே இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தனர். திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் கான்வே நிச்சயமாக இடம் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
    • இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி

    நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.

    அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

    • வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 2-வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

    குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

    நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர்.

    அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
    • 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.

    ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • அணியின் துணை கேப்டனாக இல்லாத போது வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்துக்கும், தேர்வாளர்களுக்கு எளிதாகி விடும்.
    • கே.எல்.ராகுல் திறமையான வீரர்தான். ஆனால் அவர் திணறி வருகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னனி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். டெஸ்டில் அவரது ஆட்டம் மோசமாக இருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்டது.

    இதனால் வருகிற 1-ந் தேதி இந்தூரில் தொடங்கும் 3-வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    11 பேர் கொண்ட அணியில் அவருக்கு பதிலாக சுப்மன்கில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் லோகேஷ் ராகுல் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணியின் துணை கேப்டனாக இல்லாத போது வெளியே உட்கார வைப்பது நிர்வாகத்துக்கும், தேர்வாளர்களுக்கு எளிதாகி விடும். கே.எல்.ராகுல் திறமையான வீரர்தான். ஆனால் அவர் திணறி வருகிறார். ரோகித் சர்மாவுடன், சுப்மன்கில் தொடக்க வீரராக ஆடுவதை பார்ப்போம்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    • ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஹோலி பண்டிகையை எங்களை போல கொண்டாடாதீர்கள் என ஜாலியாக அட்வைஸ் செய்துள்ளனர்.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஹோலி பண்டிகை இந்தியாவில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹோலி பண்டிகை கொண்டாடி வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஹோலி பண்டிகையை எங்களை போல கொண்டாடாதீர்கள் என ஜாலியாக அட்வைஸ் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் யுவராஜ் சிங் கழிப்பறையில் இருந்து வெளியே வந்து ஹர்பஜன் சிங்கின் முகத்தில் வண்ணங்களை பூசி ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதுபோல ஹர்பஜன் சிங்கும் யுவராஜ் முகத்தில் வண்ணங்களை பூசி வாழ்த்து தெரிவித்தார்.


    யுவராஜ் சிங்கிடம் நீ இப்போது கழிப்பறையில் இருந்து தானே வந்தாய் என்று கேட்டார். உடனே யுவராஜ் மன்னித்து விடு என சிரித்தப்படி கூறினார். மேலும் எங்களை போல ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டாம். சுகாதாரமான முறையில் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என யுவராஜ் கூறினார்.

    இதற்கு ஹர்பஜன் சிங் நீ வண்ணம் தான் பூசினாயா அல்லது வேறு ஏதும் பூசினாயா என கிண்டலாக பேசி அனைவருக்கும் இனிய ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    ×