என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Devon Conway"
- கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார்.
- சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவான் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக டேவன் கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவின் கட்டைவிரலின் காயம் ஏற்பட்டது. இதற்காக வரும் வாரம் அவர் அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருப்பதாகவும், 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மே மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவன் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
- முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவான் கான்வே விலகி உள்ளார்.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியின்போது அவர் இடது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். அவரது காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் ஹென்றி நிக்கோல்ஸ் இடம் பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20-யின் போது கான்வே காயமடைந்தார்.
- இதனால் முதல் இன்னிங்சின் போது போட்டியில் இருந்து வெளியேறினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான கான்வே காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
கான்வேவுக்கு மேற்கொள்ளபட்ட எக்ஸ்ரே முடிவுகளின் படி அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவரால் அடுத்த போட்டியில் விளையாட முடியுமா என்பது மருத்துவ சோதனைக்கு பிறகே தெரியவரும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாவது டி20 போட்டியில் டெவான் கான்வே இடம்பெறுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
முன்னதாக முதல் டி20 போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவும் தனது விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கான்வேவும் காயத்தை சந்தித்துள்ளது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் வரவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். இத்தொடர் தொடங்குவதற்கு ஒருமாத காலமே உள்ள நிலையில் இருவரும் காயத்தை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது.
- கான்வே ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
- நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் மோதும் நான்காவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர் கான்வேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அணியில் அவருக்கு பதில் சாட்போவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதே போல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
- ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது என சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் கான்வே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இருக்க இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது.
தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.
சிட்னி:
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்