என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சஞ்சு சாம்சன் விவகாரம்: ஸ்ரீசந்துக்கு 3 வருடம் தடை விதித்தது கேரளா கிரிக்கெட் சங்கம்
- சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார்.
- சஞ்சு சாம்சனுக்கு எனது ஆதரவு, மற்ற கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என சபதம் எடுத்ததாக ஸ்ரீசந்த் மீது குற்றச்சாட்டு.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இவருக்கு பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை விஜய் ஹசாரே தொடரில் விளையாட வைக்கவில்லை. இதில் விளையாடியிருந்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என ஸ்ரீசந்த் தெரிவித்தார்.
மேலும், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இருப்பேன், கேரள மாநில வீரர்களை பாதுகாப்பேன் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஸ்ரீசந்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று சிறப்ப பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீசந்துக்கு 3 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசந்த் கேரளா கிரிக்கெட் லீக்கில் கொல்லம் ஏரியஸ் அணியின் துணை உரிமையாளர் ஆவார். லக்கில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் திருப்திகரமான பதில் அளித்திருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இருப்பினும், அணி நிர்வாகத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.






