search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjun Tendulkar"

    • ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
    • இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோயை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அதில் சச்சின் மகன் அர்ஜூன் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு பந்து வீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முடியாமல் இஷான் திணறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த வீடியோவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டலாக ஒரு கமெண்ட் செய்தனர். அதில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் யார்க்கர் பந்தில் இஷான் போல்ட் முறையில் வெளியேறுவார். அந்த வீடியோவை பதிவிட்டு இஷான் பிளாஸ்பேக்கை நினைவுப்படுத்திகிறார் என கமெண்ட் செய்தனர்.

    இன்னும் ஐபிஎல் தொடருக்கு சில நாட்களே உள்ள நிலையில் மும்பை - சிஸ்கே அணி குறித்த கேலி கிண்டலான பதிவுகள் சமூக வலைதளங்களில் வர ஆரபித்துவிட்டது. 

    • அர்ஜூன் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.
    • சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். 23 வயதான இவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது தியோதர் கோப்பைக்கான தொடரில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சிக்ஸ் பேக் உடன் தான் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஃபிட்னஸ் சார்ந்து அவரது ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில் போன்றவர்கள் ஃபிட்னஸ் சார்ந்து அதிக கவனம் செலுத்துபவர்கள். அவர்களது வழியில் அர்ஜுனும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியுள்ளார்.

    • அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது.
    • இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் தற்போது, ஐபில் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஓரிரு போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து அவர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரின் இடது கையை நாய் கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.

    • நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள்.
    • ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர்.

    ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரைகளை வழங்கினார்.

    23 வயதான அர்ஜுன், ஒரு ஆல்-ரவுண்டர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய அவர், இரண்டு ஓவர்களை வீசினார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், இரண்டு ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

    இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    அர்ஜுன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கிரிக்கெட் வீரராக உங்களின் பயணத்தில் இன்னொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையாக, உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ஒருவராக, விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து அளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும்.

    நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!" என்று அந்த டுவிட்டில் சச்சின் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

    ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர். டெண்டுல்கர் 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு ஆண்டுகள் விளையாடினார்.

    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியில் அர்ஜுன் முதல் முறையாக 2021 ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜூன் காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார்.
    • பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை.

    நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது:-

    காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன்.

    எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.

    • கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • கோவா அணிக்கு இடம் பெயர்ந்த அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    கோவா:

    ரஞ்சி கிரிக்கெட்டில் கோவா- ராஜஸ்தான் அணிகள் (சி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் கோவாவில் உள்ள போவாரிம் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த கோவா அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கோவா 8 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்தது. சுயாஷ் பிரபுதேசாய் இரட்டை சதமும் (212 ரன், 416 பந்து, 29 பவுண்டரி), அர்ஜூன் தெண்டுல்கர் சதமும் (120 ரன், 207 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

    இதில் 7-வது வரிசையில் ஆடிய அர்ஜூன் தெண்டுல்கரின் பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த சாதனையாளரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கோவா அணிக்கு இடம் பெயர்ந்த 23 வயதான அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

    இவரது தந்தை சச்சின் தெண்டுல்கரும் தனது அறிமுக முதல்தர போட்டியிலேயே சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது. அதாவது 1988-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் மும்பை அணிக்காக 15-வது வயதில் களம் கண்ட தெண்டுல்கர் 100 ரன்கள் எடுத்தார். இப்போது அவரை போன்று அவருடைய மகனும் சாதித்துள்ளார்.

    • கோவா அணிக்கு மாறுகிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.
    • கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த சீசனில் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அவர் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அண்டை மாநிலமான கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

    அர்ஜூன் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டியது முக்கியம். அணி மாறுவதன் மூலம் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவரது ஆட்டத்திறன் மேம்படும் என்று நம்புகிறோம். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய கட்டத்தை தொடங்குகிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர்.

    தந்தையை போலவே அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. இடது கை பந்து வீச்சாளரான அவர் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.

    22 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டும் இந்த நிலைதான்.

    இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இது குறித்து மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது, ‘மும்பை போன்ற அணியில் இடம் பெறுவதும், ஆடும் லெவலில் இடம்பிடிப்பதும் வெவ்வேறானது. அணிக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அர்ஜூன் தெண்டுல்கர் தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டால் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    இந்த நிலையில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தெண்டுல்கரின் பேட்டிங் தரத்தை எந்த ஒரு நவீன கால மேட்ஸ்மேனுடனும் இணைக்க இயலாது. அவருடைய மகனாக இருந்தாலும் ஒப்பிடக்கூடாது. அவரது வயதை கருத்தில் கொண்டு விளையாட விடுங்கள். குடும்ப பெயரால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது.

    அவருக்கு நாம் அழுத்தம் கொடுக்க கூடாது. அவரிடம் எதுவும் சொல்ல நாம் யார்? அவரிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

    எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உங்கள் தந்தையை போல் 50 சவீதம் கூட ஆக முடிந்தால் நன்றாக இருக்கும். சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர் என்பதால் எங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான வினூ மங்கட் டிராபியில் அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். #ArjunTendulkar
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான வினூ மங்கட் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. மும்பை அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் இடம்பிடித்திருந்தார்.

    குஜராத் அணி முதலில் களம் இறங்கியது. முதல் ஓவரை அர்ஜூன் தெண்டுல்கர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குஜராத் கேப்டனை டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் பிரியேஷ் குமார் (1), எல்எம் கோசர் (8) ஆகியோரை வெளியேற்றினார்.



    குஜராத் அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறுவதற்கு அர்ஜூன் முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து விளையாடிய குஜராத் 142 ரன்னில் சுருண்டது. அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 38 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்திய 19 வயதுக்கு உள்பட்டோர் அணி வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தின் வெளியே ரேடியோ விற்பனை செய்துள்ளார். #ENGvIND #Lords #ArjunTendulkar
    லண்டன்:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். தற்போது, இங்கிலாந்து எம்.சி.சி ஜூனியர் அணியில் பயிற்சி எடுத்து வரும் அவர், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியின் போது பந்துவீசி வருகிறார்.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது, லார்ட்ஸ் மைதான ஊழியர்களுக்கு ஆடுகள பராமரிப்பில் அர்ஜுன் உதவி செய்தார். 

    மழையால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மைதானத்தை உலர வைக்கும் பணியில் ஊழியர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் உதவி புரிந்துள்ளார். இதனை லார்ட்ஸ் மைதானம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    மேலும், லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று ரேடியோக்களை விற்றார். இதை பார்த்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ஜுனிடம் பெரும்பாலான ரேடியோக்கள் விற்றுவிட்டன. சில மட்டுமே கையிருப்பில் உள்ளன எனக் கூறியுள்ளார்.


    19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #U19Cricket #ArjunTendulkar
    கொழும்பில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை இளைஞர்கள் 244 ரன்கள் சேர்த்தனர். சூரியபந்தாரா அதிகபட்சமாக 69 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் ஹர்ஷ் தியாகி, படோனி தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்திய இளைஞர்கள் பேட்டிங் செய்தார்கள். டைட் (113), படோனி (185 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 589 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் செனாரத்னே 6 விக்கெட் வீழ்த்தினார்.

    345 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை இளைஞர்கள் 2-வது இன்னிங்சை தொடங்கினார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னாண்டோ 104 ரன்களும், நுவானிது பெர்னாண்டோ 78 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 324 ரன்கள் ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்திய இளைஞர்கள் அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஜங்க்ரா 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமானார். அவர் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 24-ந்தேதி ஹம்பன்டோடாவில் தொடங்குகிறது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக அர்ஜூன் தெண்டுல்கர் 11 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். #ArjunTendulkar
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்றப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

    இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமானார். டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் இலங்கை அணி 244 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அர்ஜூன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்திருந்தது. வதேரா 81 ரன்களுடனும், படோனி 107 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வதோரா மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்ஷ் தியாகி 15 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டாக அர்ஜூன் தெண்டுல்கர் களம் இறங்கினார். இவர் 11 ரன்களை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அறிமுக போட்டியில் ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். படோனி 185 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 134.5 ஓவரில் 589 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    ×