என் மலர்
நீங்கள் தேடியது "Arjun Tendulkar"
- கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
- கோவா அணிக்கு இடம் பெயர்ந்த அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
கோவா:
ரஞ்சி கிரிக்கெட்டில் கோவா- ராஜஸ்தான் அணிகள் (சி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் கோவாவில் உள்ள போவாரிம் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த கோவா அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கோவா 8 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்தது. சுயாஷ் பிரபுதேசாய் இரட்டை சதமும் (212 ரன், 416 பந்து, 29 பவுண்டரி), அர்ஜூன் தெண்டுல்கர் சதமும் (120 ரன், 207 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.
இதில் 7-வது வரிசையில் ஆடிய அர்ஜூன் தெண்டுல்கரின் பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த சாதனையாளரான ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் ஆவார்.
கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் கிடைத்தும் அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கோவா அணிக்கு இடம் பெயர்ந்த 23 வயதான அர்ஜூன் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இவரது தந்தை சச்சின் தெண்டுல்கரும் தனது அறிமுக முதல்தர போட்டியிலேயே சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது. அதாவது 1988-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் மும்பை அணிக்காக 15-வது வயதில் களம் கண்ட தெண்டுல்கர் 100 ரன்கள் எடுத்தார். இப்போது அவரை போன்று அவருடைய மகனும் சாதித்துள்ளார்.
- கோவா அணிக்கு மாறுகிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.
- கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த சீசனில் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை.
இந்த நிலையில் அவர் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அண்டை மாநிலமான கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.
அர்ஜூன் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டியது முக்கியம். அணி மாறுவதன் மூலம் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவரது ஆட்டத்திறன் மேம்படும் என்று நம்புகிறோம். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய கட்டத்தை தொடங்குகிறார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அணி முதலில் களம் இறங்கியது. முதல் ஓவரை அர்ஜூன் தெண்டுல்கர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குஜராத் கேப்டனை டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்தடுத்த ஓவர்களில் பிரியேஷ் குமார் (1), எல்எம் கோசர் (8) ஆகியோரை வெளியேற்றினார்.

குஜராத் அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறுவதற்கு அர்ஜூன் முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து விளையாடிய குஜராத் 142 ரன்னில் சுருண்டது. அர்ஜூன் தெண்டுல்கர் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 38 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Look who selling radios @HomeOfCricket today.. sold 50 rush guys only few left 😜 junior @sachin_rt#Goodboypic.twitter.com/8TD2Rv6G1V
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 11, 2018
பின்னர் இந்திய இளைஞர்கள் பேட்டிங் செய்தார்கள். டைட் (113), படோனி (185 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 589 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் செனாரத்னே 6 விக்கெட் வீழ்த்தினார்.
345 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை இளைஞர்கள் 2-வது இன்னிங்சை தொடங்கினார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னாண்டோ 104 ரன்களும், நுவானிது பெர்னாண்டோ 78 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 324 ரன்கள் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்திய இளைஞர்கள் அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஜங்க்ரா 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமானார். அவர் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 24-ந்தேதி ஹம்பன்டோடாவில் தொடங்குகிறது.
இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமானார். டாஸ் வென்று இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் இலங்கை அணி 244 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அர்ஜூன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்திருந்தது. வதேரா 81 ரன்களுடனும், படோனி 107 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வதோரா மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்ஷ் தியாகி 15 ரன்னில் வெளியேறினார்.
8-வது விக்கெட்டாக அர்ஜூன் தெண்டுல்கர் களம் இறங்கினார். இவர் 11 ரன்களை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அறிமுக போட்டியில் ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். படோனி 185 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 134.5 ஓவரில் 589 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கே மிஷரா, விக்கெட் கீப்பர் பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

3-வது ஓவரை அர்ஜூன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுத்த அர்ஜூன், அடுத்த பந்தில் மிஷராவை எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்காக தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இலங்கை அணி 55 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜுன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஓவருடன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
தற்போது இந்திய சீனியர் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய அணி நேற்று தனது முதல் பயிற்சி செசனை தொடங்கியது. அப்போது அர்ஜூன் தெண்டுல்கர் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசினார்.

அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரான பிசிசிஐ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கான பயிற்சி முகாம் தரம்சாலாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.
இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், நடுகள பேட்ஸ்மேனும் ஆவார். இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சனத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் என்பதற்காக அர்ஜூன் விஷேசமாக பார்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு எல்லா வீரர்களும் ஒரே மாதிரிதான் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சனத் குமார் கூறுகையில் ‘‘பயிற்சியாளர் பதவியில் எனது வேலை என்ன என்பது எனக்கு முழுவதுமாக தெரியவில்லை. ஆனால், ஒரு பயிற்சியாளராக அனைத்து வீரர்களும் எனக்கு ஒன்றுதான்.
அர்ஜூன் தெண்டுல்கர் மற்ற இளைஞர்களைவிட மாறுபட்டவர் இல்லை. என்னுடைய வேலை ஒவ்வொரு வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான்’’ என்றார்.
