என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின்
    X

    மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின்

    • அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ளது.
    • திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த சந்திப்பில் சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் மற்றும் மருமகள் சானியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அர்ஜுன் - சானியா திருமணத்திற்கு அழைப்பதில் பெருமை கொள்கிறோம். இளம் தம்பதியினருக்கு வழங்கிய ஆசிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் மார்ச் 5, 2026 அன்று நடைபெற உள்ளது. திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் எனவும் இது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது நிச்சயதார்த்தம் 2025, ஆகஸ்ட் 13 அன்று மிகவும் ரகசியமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×