என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்"

    • விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று தோன்றியது.
    • ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    ஆட்டநாயகன் விருதை வென்ற பின்பு பேசிய ஜித்தேஷ் சர்மா, "விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றியது. எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் அண்ணா அதைதான் என்னிடம் தொடர்ந்து கூறுவார். 'உன்னால் முடியும். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் சக்தி உன்னிடம் உள்ளது' என தினேஷ் கார்த்திக் என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அவரால் தான் இது சாத்தியமானது" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.
    • பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். வார்னர் 62 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் கோலி 63 அரைசதங்களை அடித்துள்ளார்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

    ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

    9030 - விராட் கோலி (RCB)

    6060 - ரோகித் சர்மா (MI)

    5934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)

    5528 - சுரேஷ் ரெய்னா (CSK)

    5314 - எம்.எஸ். தோனி (CSK)

    மேலும், ஒரு ஐபிஎல் வரலாற்றில் 5 முறை ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    ஐபிஎல்: ஒரு சீசனில் 600+ ரன்கள்:

    5 - விராட் கோலி (2013, 2016, 2023, 2024, 2025)

    4 - கே.எல். ராகுல் (2018, 2020, 2021, 2022)

    3 - கிறிஸ் கெய்ல் (2011, 2012, 2013)

    3 - டேவிட் வார்னர் (2016, 2017, 2019)

    • ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • திக்வேஸ் ரதி, ஜித்தேஷ் சர்மாவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இப்போட்டியில் 16 ஆவது ஓவரை வீசிய திக்வேஸ் ரதி ஜித்தேஷ் சர்மாவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் ரிஷப் பண்ட் அந்த விக்கெட்டை வேண்டாம் என்று பெருந்தன்மையாக மறுத்து விடுவார். இதனையடுத்து ரிஷப் பண்ட்-ஐ ஜித்தேஷ் கட்டியணைத்து நன்றி கூறுவார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய லக்னோ 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 37 பந்தில் 67 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    விராட் கோலி அதிரடியாக ஆடி 54 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது 5வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-ஜித்தேஷ் குமார் ஜோடி இணைந்து அதிரடியாக ஆடியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. ஜித்தேஷ் சர்மா அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆர்.சி.பி. அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்னும், மயங்க் அகர்வால் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும்.

    லக்னோ:

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்றுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்ட பெங்களூரு அணிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தை பிடிக்க முடியும். மாறாக தோற்றால் 3-வது இடத்திலேயே இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய சண்டையால் போட்டி தொடர் 9 நாட்கள் தடைபடுவதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடைபோட்ட பெங்களூரு அணி மீண்டும் போட்டி தொடங்கிய பிறகு உத்வேகத்தை இழந்து நிற்கிறது. அதன் பின்னர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 42 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் பணிந்தது. 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் பெங்களூரு 189 ரன்னில் அடங்கியது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (548 ரன்), பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதாரும், பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நல்ல நிலையில் உள்ளனர். தோள்பட்டை காயத்தால் தாயகத்துக்கு சென்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் திரும்பி இருக்கிறார். 10 ஆட்டங்களில் ஆடி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவரது வருகை நிச்சயம் பெங்களூருவுக்கு வலுசேர்க்கும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 235 ரன்கள் குவித்த லக்னோ அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 560 ரன்), நிகோலஸ் பூரன் (511), மார்க்ரம் (445), ஆயுஷ் பதோனி (329) அசத்துகின்றனர். பந்து வீச்சில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், தற்காலிக மாற்று வீரர் வில்லியம் ஓ ரூர்கே நம்பிக்கை அளிக்கின்றனர். ஐதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி (14 விக்கெட்) மீண்டும் களம் காண்பது பந்துவீச்சை பலப்படுத்தும்.

    டாப்-2 இடத்தை பிடிக்க பெங்களூரு அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 3 ஆட்டத்திலும், லக்னோ 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஹிமாத் சிங், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், வில்லியம் ஓ ரூர்கே, ஆகாஷ் சிங்.

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • மிட்செல் மார்ஷ் 64 பந்தில் 117 ரன்கள் விளாசினார்.
    • நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் லக்னோ பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்று 53 ரன்கள் சேர்த்தது.

    அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மிட்செல் மார்ஷ் 33 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    மிட்செல் மார்ஷ் உடன் பூரனும் சேர்ந்த அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

    17.4 ஓவரில் லக்னோ 200 ரன்னைக் கடந்தது. 18ஆவது ஓவரில் லக்னோ 18 ரன்கள் அடித்தது. 19ஆவது ஓவரை ஆர்ஷத் கான் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் மார்ஷ் ஆட்டமிழந்தார். மார்ஷ் 64 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் விளாசினார்.

    அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். 19ஆவது ஓவரில் லக்னோ 9 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடிக்க லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்தில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்தில் நீடிக்க வெற்றி பெற முனைப்பு காட்டும்.
    • லக்னோ அணி வெற்றி பெற்றால், அந்த அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    • புள்ளி பட்டியலில் டாப்-2 பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும்.
    • கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

    புள்ளி பட்டியலில் டாப்-2 பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி பெறும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் முதல் இரு இடங்களுக்குள் நீடிக்க குஜராத் அணி தீவிரமாக உள்ளது. பெங்களூரு, பஞ்சாப் (தலா 17 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்துக்கான ரேசில் நெருக்கமாக இருக்கின்றன.

    குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கும் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 617 ரன்), கேப்டன் சுப்மன் கில் (601), ஜோஸ் பட்லர் (500) அசத்தி வருகின்றனர். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (21 விக்கெட்), முகமது சிராஜ், சாய் கிஷோர் (தலா 15 விக்கெட்) கலக்குகிறார்கள்.

    இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அத்துடன் கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (455 ரன்), மிட்செல் மார்ஷ் (443), மார்க்ரம் (409), ஆயுஷ் பதோனி கைகொடுக்கிறார்கள். ஆனால் கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. இதுவரை ஒரு அரைசதம் உள்பட 135 ரன்களே எடுத்துள்ளார். பந்து வீச்சில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

    மொத்தத்தில் லக்னோவுக்கு எதிராக ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட குஜராத் அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆதிக்கத்தை நிலைநாட்ட வரிந்துகட்டி நிற்கும். அதே நேரம் அவர்களின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட லக்னோ முழுவீச்சில் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், கசிசோ ரபடா, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    லக்னோ: மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ரிஷப் பண்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஷபாஸ் அகமது அல்லது எம்.சித்தார்த், வில்லியம் ஓ ரூர்கே.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் தோற்றுள்ளது. முந்தைய மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.

    தனது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில் இருக்கும் லக்னோ அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். மாறாக தோற்றால் அந்த அணியின் வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்குர், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளித்தாலும், தாக்கம் எற்படுத்த தவறுகின்றனர்.

    ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை (டெல்லிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணியில் அதிரடி சூரர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களது ஆட்டம் ஒருசேர நன்றாக அமையாததால் சறுக்கலை சந்தித்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (314 ரன்), ஹென்ரிச் கிளாசென் (311), நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன் என்று பெரிய அதிரடி பட்டாளமே இருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் சரியாக நிலைத்து நிற்கவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கேப்டன் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி வலுசேர்க்கின்றனர். அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இன்று இந்தியா வருகிறார். அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

    ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எல்லா வகையிலும் வரிந்து கட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் முடிந்த வரை முன்னேற்றம் காண ஐதராபாத் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், ஐதராபாத் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான்.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சச்சின் பேபி, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, காமிந்து மென்டிஸ், கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்றிரவு லக்னோவில் நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. முதல் 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதும் அடங்கும். இனி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய முடியும். எனவே இன்றைய ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா-சாவா? போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து விடும்.

    லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (410 ரன்), மிட்செல் மார்ஷ் (378), மார்க்ரம் (348), ஆயுஷ் பதோனி (326) அதிரடியில் அசத்துகின்றனர். கேப்டன் ரிஷப் பண்ட் (11 ஆட்டத்தில் 128 ரன்), டேவிட் மில்லர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. பந்து வீச்சில் திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் சில ஆட்டங்களில் நன்றாக பந்து வீசியுள்ளனர். பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 2-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். அந்த அணி தனது முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

    பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 7 அரைசதங்களுடன் 505 ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் ரஜத் படிதார், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் பயனுள்ள பங்களிப்பை அளிக்கின்றனர். காயத்தால் தேவ்தத் படிக்கல் விலகியிருப்பது சற்று பின்னடைவாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டுகிறார்கள்.

    மொத்தத்தில் பெங்களூரு அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட லக்னோ அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் அல்லது ஆகாஷ் சிங்.

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், ஹேசில்வுட் அல்லது சுயாஷ் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது.
    • சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான சமயத்தில் சிறந்த நிலைக்கு திரும்பி இருக்கிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (373 ரன்), திலக் வர்மா (233), ரோகித் சர்மா (228), ரையான் ரிக்கெல்டனும் (215), பந்து வீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ராவும் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.

    லக்னோ அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வெளிநாட்டு நட்சத்திரங்களான நிகோலஸ் பூரன் (377 ரன்), மிட்செல் மார்ஷ் (344), மார்க்ரம் (326) ஆகியோரை அதிகம் நம்பி இருக்கிறது. ஆயுஷ் பதோனியும் ஓரளவு பங்களிப்பை அளிக்கிறார். 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், தங்களது உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்க லக்னோ முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புத்தூர்.

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.

    டெல்லி-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை

     


    இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (323 ரன்), அபிஷேக் போரெல் (225) ஜொலிக்கின்றனர். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கேப்டன் அக்ஷர் பட்டேல், அஷூதோஷ் ஷர்மா ஆகியோரும் சுமாரான பங்களிப்பை அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் பலம் சேர்க்கின்றனர்.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 5 அரைசதங்களுடன் 392 ரன்கள் எடுத்துள்ளார். பில் சால்ட், தேவ்தத் படிக்கல், கேப்டன் ரஜத் படிதாரும் சோபிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.

    சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    டெல்லி: அபிஷேக் போரெல், பாப் டு பிளிஸ்சிஸ், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா,

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது.
    • டெல்லி அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது.

    டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    ×