search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karun Nair"

    கருண் நாயர், முரளி விஜய் நீக்கப்பட்டதில் தகவல் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நிர்வாகக்குழு ரவி சாஸ்திரி, விராட கோலியிடம் விளக்கம் கேட்கிறது. #BCCI
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் தேர்வு குழுவினரை விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வுக்குழு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று இருவரும் குற்றமசாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.

    கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.



    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

    தேர்வு குழுவினரை விமர்சனம் செய்ததால் கருண் நாயரும், முரளி விஜய்யும் வீரர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
    ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பது நியாயம் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு மீது ஹர்பன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #INDvWI
    இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் தேர்வு குறித்து சமீப காலமாக விமர்சனம் எழுந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கும், கருண் நாயருக்கும் வாய்ப்பு கொடுக்காதது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் எழுப்பி வரும் நிலையில் ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதி என்பதில் நியாயம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மூன்று மாதங்களான ஒரு வீரரை பெஞ்ச் வைத்து விட்டு அதன்பின் அணியில் தேர்வு செய்யாதது மிகவும் மோசமானது. இது வினோதமாக உள்ளது.



    அவர்கள் தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள், அதற்கான அளவுகோல் என்ன போன்றவற்றின் தேர்வுக்குழுவின் சிந்தனையை பற்றி புரிந்து கொள்வது வேதனையளிக்கிறது.

    ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருப்பதாக அறிகிறேன். சில வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில வீரர்கள் திறமையை காண்பிக்க தவறிவிட்டால், அதன்பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இது நியாயமானது அல்ல’’ என்றார்.
    ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #dhawan
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.



    ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

    அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கருண் நாயருக்கு தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார். #INDvWI #KarunNair
    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 303 ரன்கள் குவித்தார். டெஸ்டில் முச்சதம் அடித்த இரண்டு இந்தியர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகு சில போட்டிகளில் சோபிக்காததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

    சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயரும் அங்கம் வகித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

    இதனால் வேதனை அடைந்த 26 வயதான கருண் நாயர், ‘‘எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு விவாதிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் நேற்று கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு கருண் நாயரை நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அணித் தேர்வு குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன். மறுபடியும் அணிக்குள் நுழைவதற்கான வழிமுறைகளை எடுத்து சொன்னேன். வீரர்கள் உடனான தகவல் தொடர்பு விஷயத்தை பொறுத்தவரை தேர்வு கமிட்டிக்கு என்று வகுக்கப்பட்ட நடைமுறையில் தெளிவாக இருக்கிறோம்.



    தகவல் தொடர்பு எப்போதும் தேர்வு கமிட்டிக்கு முக்கியமானது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் நீங்கள் அணியில் இல்லை என்ற மகிழ்ச்சியற்ற தகவலை சொல்வது கடினமானதாகும். அவ்வாறான சூழலில் நீங்கள் அணிக்கு ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கு உரிய காரணத்தை சொல்ல வேண்டியது அவசியமாகும். ஆனாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

    எங்களது தேர்வாளர்களில் ஒருவரான தேவங் காந்தி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரினபோது கருண் நாயரிடம் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசினார். அது மட்டுமின்றி அவருக்கு ஊக்கமளித்து வாய்ப்புக்காக காத்திருக்கும்படி ஆலோசனைகளும் வழங்கினார். இந்திய அணிக்கு திரும்புவதற்கு கருண்நாயர், ரஞ்சி மற்றும் இந்திய ‘ஏ’ அணி போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும். நமது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திட்டத்தில் கருண் நாயருக்கும் நிச்சயம் இடம் உண்டு. தற்போது அவர் முதல்தர போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு எம்எஸ்கே பிரசாத் கூறினார்.
    டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரர் கருண்நாயர், டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளார். #KarunNair #BCCI
    பெங்களூர்:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களில் 2 பேர் மட்டுமே டிரிபிள் செஞ்சூரி அடித்துள்ளனர். ஒருவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2 முறை டிரிபிள் செஞ்சூரி (319, 309) அடித்துள்ளார்.

    மற்றொருவர் கருண் நாயர். 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 303 ரன் குவித்து முத்திரை பதித்தார்.

    முச்சதம் அடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கருண்நாயர் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது. 26 வயதான அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் ஆடினார். அதற்கு பிறகு கடந்த 1½ ஆண்டுகளாக 11 பேர் கொண்ட அணியில் ஆடவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான அணியில் கருண்நாயர் இடம் பெற்று இருந்தார். ஆனால் ஒரு டெஸ்டில் கூட அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. கடைசி வரை பெஞ்சில் தான் இருந்தார்.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது கருண்நாயர் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் ஆடினேன். இதில் இரண்டு இன்னிங்சில் நான் சரியாக ஆடவில்லை. ஆனால் அதன்பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டமே. வாய்ப்பு கொடுக்காமல் நீக்கப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை.

    தேர்வு குழுவினரோ அல்லது அணி நிர்வாகமோ என்னிடம் எந்த தகவலையும் பரிமாறியது இல்லை. இது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனாலும் தேர்வு குழு ஒரு முடிவை எடுத்துவிட்டது. அதை நான் மதிக்கிறேன்.

    இவ்வாறு கருண்நாயர் கூறியுள்ளார். #INDvWI #karunnair #TeamIndia #BCCI
    இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் முரளி விஜய், கருண் நாயர் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #INDA
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதில் ரகானே, முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் மூன்று பேரும் இடம்பிடித்துள்ளனர்.

    நேற்று அணி அறிவிக்கப்படும் முன்பே முரளி விஜய் மற்றும் ரகானே ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கு முன்னோட்டாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கருண் நாயர் ஏற்கனவே இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி இந்த போட்டி தொடங்கியது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி 197 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 62 ரன்களும், ரகானே 49 ரன்களும், ரிஷப் பந்த் 58 ரன்கள் சேர்த்தனர். ஆனால் முரளி விஜய் 8 ரன்களிலும், கருண் நாயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    421 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அதேபோல் முரளி விஜய் 5 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளனர். லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படாவிடில் முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறங்குவார். இந்த நிலையில் மோசமான ஆட்டம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    கருண் நாயருக்கு ஆடும் லெவன் அணியில் இடம்கிடைப்பது சந்தேகமே. முதல் இன்னிங்சில் 49 ரன்னில் ஆட்டமிழந்த ரகனே, 2-வது இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், தற்போது முன்னேற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். #INDvAFG
    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர். 26 வயதாகும் இவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மொகாலி டெஸ்டில் அறிமுகமானார். மொகாலி டெஸ்டில் நான்கு ரன்களும், அதன்பின் நடைபெற்ற மும்பை டெஸ்டில் 13 ரன்களும் அடித்தார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது டெஸ்டிலேயே முச்சதம் அடித்து அசத்தினார். அத்துடன் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேவாக்குடன் முச்சதம் அடித்த வீரர் பட்டியலில் இடம்பிடித்தார்.

    அதன்பின் ஆஸ்திரேலியா தொடரின்போது பெங்களூரு டெஸ்டில் 26 ரன்களும், ராஞ்சி டெஸ்டில் 23 ரன்களும், தரம்சாலா டெஸ்டில் 5 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

    இந்தியா வருகிற 14-ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு கெட்டியாக பிடித்துக் கொள்ள வீரும்பும் அவர், இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்ற தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கருண் நாயர் கூறுகையில் ‘‘நான் தற்போது பிட்டராகியுள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறவில்லை. இந்த நேரத்தில் அதிக சிரமம் எடுத்து என்னுடைய திறமையை வளர்த்துள்ளேன். பேட்டிங் மற்றும் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தினேன். உள்ளூர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ளேன். இரண்டு வருடத்திற்கு முன் நான் இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன்’’ என்றார்.
    புனேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #CSKvKXIP
    ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.



    அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக விளையாடுவது சிறந்த தருணம் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். #IPL2018 #KXIP
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்கள்.



    இவர்கள் மூன்று பேரும் ஜூனியர் அணியில் இருந்தே ஒன்றாக இணைந்து விளையாடியவர்கள். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இணைந்து விளையாடுவது சிறந்த தருணம் என்றும், சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும் கருண் நாயர் கூறியுள்ளார்.



    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதால், கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக முச்சதம் அடித்தபின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×