search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvAUS"

    • தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.

    அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.

    முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

    • இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
    • களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 53 ரன்னும் ( 5 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 21 பந்தில் 31 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 16 பந்தில் 24 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். பென் துவர் ஷிஸ், பெகரன்டார்ப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பென் மெக்டர்மட் 36 பந்தில் 54 ரன்னும் ( 5 சிக்சர்) டிரெவிஸ் ஹெட் 18 பந்தில் 28 ரன்னும் ( 5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் மேத்யூ வேட் 15 பந்தில் 22 ரன்னும் ( 4 பவுண்டரி ) எடுத்தனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், அர்ஸ்தீப் சிங், பிஷ்னோய் தலா 2 , அக் ஷர் படேல் 1 விக்கெட டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. ஏற்கனவே முதல், 2-வது மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;-

    இந்த 20 ஓவர் தொடர் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    எங்கள் வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறினோம். அவர்களும் அதனை தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தீபக் சாஹர் அவசர மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் அவர் இடத்தில் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.


    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஹெட் 28, பிலிப் 4, ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17, மேத்யூ ஷார்ட் 16, பென் துவர்ஷுயிஸ் 0 ரன்னில் வெளியேறினர்.

    ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார். கடைசி வரை போராடிய மேத்யூ வேட் 22 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் 53 ரன்னில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டி பவர்பிளேயிலேயே விக்கெட்டை இழந்தார் ஜெய்வால். அவர் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6 என வெளியேறினார்.

    ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி திணறியது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் மற்றும் ஜிதேஷ் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி காட்டிய ஜித்தேஷ் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசி 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

    • இந்திய அணியில் மாற்றங்கள் இல்லை
    • இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியா பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. தீபக் சாஹருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும்.
    • அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும்.

    பெங்களூரு:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும். எனவே இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பெங்களூரில் பகலில் மேக மூட்டம் 90 சதவிதம் இருக்கும். மழை பெய்ய 40% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவில் மழைக்கான வாய்ப்பு 25% ஆக குறைவாகவும் மேக மூட்டம் 100% இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
    • தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    அதேவேளையில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணியில் 2 வீரர்களுக்கு முதல் 4 டி20-யில் வாய்ப்பு வழங்காததால் நாளைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ஆகியோர் மட்டும் இந்த தொடரில் விளையாடாமல் உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒரு போட்டியிலாவது விளையாடி உள்ளனர். எனவே இருவரும் அடுத்த போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இந்த போட்டியில் நாங்கள் டாசில் மட்டுமே தோல்வியை சந்தித்தோம். அதை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சரிவை சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

    இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொருவருமே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அனைவரிடமும் பேசினேன். அந்த வகையில் நமது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

    குறிப்பாக அக்சர் பட்டேல் கடினமான இந்த சூழ்நிலையிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கூறியதாவது:-

    இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் இலக்கினை நோக்கி முன்னேற முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம். இந்த தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்ய முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஹெட் - ஜோஷ் பிலிப் களமிறங்கினர். 3 ஓவரில் 40 ரன்கள் குவித்த இந்த ஜோடியை பிஸ்னோய் பிரித்தார். பிலிப் 8 ரன்களில் போல்ட் ஆனார். இவர் அவர் ஆன அடுத்த ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஆரோன் ஹார்டி 8 ரன்களில் வெளியேறினார்.

    இதனையடுத்து டிம் டேவிட்- பென் மெக்டெர்மாட் ஜோடி நிதானமாக விளையாடினர். 22 பந்துகள் சந்தித்த பென் மெக்டெர்மாட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 20 பந்தில் 19 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதி வரை போராடிய வேட் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    • அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஆரோன் ஹார்டி பிரித்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 8, சூர்யகுமார் யாதவ் 1 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனையடுத்து ருதுராஜ் - ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 32 ரன்களுக்கு வெளியேறினார்.

    இந்நிலையில் ரிங்கு சிங்குடன் -ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஜிதேஷ் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த அக்சர் படேல் 0 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.
    • இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய லெவன்:

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷ்ரேயாஸ் ஐய்யர், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், முகேஷ் குமார்.

    இந்திய லெவன்:

    யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜிதேஷ் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஷ்ரேயாஸ் ஐய்யர், ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், முகேஷ் குமார்.

    ஆஸ்திரேலிய லெவன்:

    ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட் (கேப்டன்), கிறிஸ் கிரீன், பென் துவார்ஷஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா.

    • 2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி.
    • நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம்- கிரிக்கெட் சங்கம்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இரு அணிகளுக்கும் முக்கியமான இந்த போட்டி தொடங்க இன்னும் ஐந்து மணி நேரமே இருக்கும் நிலையில், மைதானத்தின் சில பகுதிகளில் மின்சார வசதி கிடையாது எனத் தெரிய வந்துள்ளது.

    2009-ம் ஆண்டில் இருந்தே சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்காலிகமாக மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பாக்ஸ் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சார விளக்குகள் (floodlights) ஜெனரேட்டர் மூலம்தான் இயக்க முடியும்.

    ராய்ப்பூர் கிராமப்புற வட்ட பொறுப்பாளர் அசோக் கந்தெல்வால், "கிரிக்கெட் சங்க செயலாளர் தற்காலிகமாக செயல்திறனை அதிகரித்துக் கொடுக்க விண்ணப்பம் செய்திருந்தார். ஆயிரம் கிலோவாட் கேட்ட நிலையில் 200 கிலோவாட் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வேலை இன்னும் தொடங்கப்படவில்லை" என்றார்.

    2018-ம் ஆண்டு மாரத்தான் போட்டியின்போது, மைதானத்தில் மின்சாரம் வசதி இல்லை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அப்போதுதான் 2009-ம் ஆண்டில் இருந்து மின்சார கட்டணம் கட்டவில்லை. 3.16 கோடி ரூபாய் பாக்கி உள்ளது எனத் தெரியவந்தது.

    இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு பொதுப் பணித்துறையிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள செல்லவை விளையாட்டுத்துறை ஏற்கவேண்டும். மின்கட்டணம் விவகாரத்தில் இரு துறைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

    மின்சாரத்துறையில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பிய போதிலும் இரு துறைகள் சார்பில் நிலுவைத் தொகையை கட்டவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட மூன்று சர்வதேச போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருனேஷ் சிங் பரிஹார் கூறுகையில் "பெரிய போட்டிகள் என்பதால் மின்சாரம் குறித்து கவலை கொள்கிறார்கள். நாங்கள் பெரிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்களை மாற்று ஏற்பாடாக பயன்படுத்துவோம். இருந்தபோதிலும், மைதான விளக்குகள் விவகாரம் கவலை அளிக்கிறது. எவ்வளவு தொகை பாக்கி உள்ளது என்று எனக்குத் தெரியாது. மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் தற்காலிக இணைப்பு வாங்கப்பட்டுள்ளது" என்றார்.

    சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்படும் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள விசயம் ஆச்சர்யமாக உள்ளது. மேலும், இரு துறைகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையால் மின்சாரத்தை பெற முடியாத இல்லையில் மைதானம் அமைந்துள்ளது.

    ×