search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Greg Chappell"

    • வெற்றியை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி தங்களது பலத்திற்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமானதாகும்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்டை விடுத்து சுழற்பந்து வீச்சாளர் குனேமேனை ஆடும் லெவனில் சேர்த்தது தவறான முடிவாகும்.

    சிட்னி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது. இரண்டு டெஸ்டிலும் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 3-வது நாளிலேயே சுருண்டது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தனது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கேப்டன் கம்மின்ஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் மோசமான தோல்வியை சந்தித்ததால் அந்த அணி மீது விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அந்த அணியினர் சூழ்நிலையை சரியாக புரிந்து துணிச்சலுடன் ஆடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பலும் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டை குறை சொல்லி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'இவான்டர் ஹோலிபீல்டுடனான மோதலுக்கு முன்னதாக அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கூறுகையில் 'வாயில் குத்து விழுவது வரை ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்' என்றார். ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை பார்க்கையில் அவர் சொன்னது தான் எனது நினைவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணியினர் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே தங்களை தானே வாயில் குத்திக்கொண்டனர். ஒரு தொடரை பொறுத்தமட்டில் திட்டமிடுதல் மிகவும் முக்கியமானது. குறைபாடுகளுடன் கூடிய திட்டம் பலனற்றதாகும்.

    வெற்றியை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி தங்களது பலத்திற்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமானதாகும். சுழற்பந்து வீச்சு நமது பலம் கிடையாது. இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதற்காக கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்தால் அது வெற்றிக்கு எந்தவகையிலும் உதவாது. ஆஸ்திரேலிய அணியின் பலம் வேகப்பந்து வீச்சாகும். நீங்கள் அணியின் சிறந்த பவுலர்களை ஆட வைப்பதுடன் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஊக்கம் அளிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களும் புத்திசாலித்தனமாக ஆடி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்டை விடுத்து சுழற்பந்து வீச்சாளர் குனேமேனை ஆடும் லெவனில் சேர்த்தது தவறான முடிவாகும். கம்மின்ஸ் ஷாட் பிட்ச் பந்து வீச்சை சரியாக செய்யாததும் பாதகமாக அமைந்தது.

    டெல்லி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆபத்து குறைவான ஷாட்களை ஆடாமல் ஸ்வீப் ஷாட்டை அதிகம் நம்பி ஆடியது சரிவுக்கு வழிவகுத்தது. இந்திய சூழ்நிலையில் பேட்டிங் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முதல் இரண்டு மூன்று ஓவர்களில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு ஷாட் ஆட வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் முதலில் ஆஸ்திரேலியா சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து உறுதியுடனும், துணிச்சலுடனும் தங்களுக்குரிய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் ஆடுவது கடினம் என்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு தெரியும். ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்கப்படுவதை ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பொறுப்பற்ற முறையில் ஆடி 3 நாட்களுக்குள் ஆட்டம் இழப்பதை எல்லாம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வது கடினம்' என்றார்.

    • ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது.
    • இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.

    முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா குணமடைந்துள்ளார். இதனால் அவர் ரஞ்சி டிராபியில் ஆடினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2004-ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமை யிலான அணி 4 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அந்த அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இந்தியா வந்த போது 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    ஆஸ்திரேலிய அணி இந்த முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும். சொந்த மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தில் உள்ளனர். இது இந்தியாவுக்கு பின்னடைவாகும். முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் வலுகுறைந்து உள்ளது. விராட் கோலியை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது.

    இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் தந்திரங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு ஏற்ற வகையில் ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மாற்றி அமைக்க வேண்டும்.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ஆஸ்டன் அகருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் லயன் தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் இணைந்து பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்கலாம்.

    வார்னர் இந்தியாவில் தனது பேட்டிங் சாதனையை மேம்படுத்த வேண்டும். உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிரெவிஸ் ஹெட், கேமரூன் ஓயிட் ஆகியோர் பாகிஸ்தான், இலங்கையில் எதிர்கொண்டதை விட இந்தியாவில் சுழற்பந்து தரமாக இருக்கும். அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது.

    லபுசேன் இந்திய துணை கண்டத்தில் தனது முதல் பெரிய சோதனையை எதிர்கொள்வார். ஆஸ்திரேலியா வெற்றி பெற புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய அம்சமாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடல், பொறுமை, விடாமுயற்சி தேவை என தெரிவித்தார்.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி செல்ல இருக்கிறது. #CA
    ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இதனால் ஒரே நேரத்தில் கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பதவி காலியாக இருந்தது. கேப்டன் பதவிக்கு உடனடியாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார்.

    ஆனால் துணைக்கேப்டன் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா அணி விரைவில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.



    இந்த தொடருக்கு கட்டாயம் துணைக் கேப்டன் தேவை. தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களாக மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தேர்வுக்குழு உறுப்பினராக கிரேக் சேப்பல் மிட்செல் மார்ஷ் துணைக் கேப்டனாக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.



    மிட்செல் மார்ஷ் வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இந்தியா வந்து விளையாடுகிறது. அப்போது அந்த அணிக்கு கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.



    அதேவேளையில் ஹசிலவுட் 40 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். துணைக் கேப்டன் பதவியில் ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நாதன் லயனும், மிட்செல் ஸ்டார்க்கும் இந்த போட்டியில் இணைந்துள்ளனர்.
    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான கிரேக் சேப்பல் இந்திய அணி கையெழுத்திட்ட பேட்டை விற்பனை செய்ய இருக்கிறார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல். தலைசிறந்த கிரிக்கெட் விமர்சகரான இவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவருக்கும் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவானதால் தலைமை பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    டோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஒன்று கிரேக் சேப்பலுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த பேட்டை தனது தொண்டு நிறுவனத்திற்காக தற்போது விற்பனை செய்ய இருக்கிறார்.



    இதை கிரேக் சேப்பல் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சிட்னியில் வசித்து வரும் 400-க்கும் மேற்பட்டவர்கள் மே 24-ந்தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறும் டின்னரில் கலந்து கொள்வார்கள். இதில் 30 பேர் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள். ஒவ்வொருவருக்கும் தலா 275 டாலர்கள் நுழைவுத் தொகையாக வசூலிக்கப்பட இருக்கிறது. இந்த டின்னர் நிகழ்ச்சியின்போது இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட பேட் ஏலத்தில் விடப்படும்’’ என்றார்.

    ஆஸ்திரேலியாவில் வீடுகள் இன்றி வாழ்பவர்கள் மறுவாழ்விற்காக கிரேக் சேப்பல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு பணம் திரட்டுவதற்கான இந்த ஏற்பட்டை செய்துள்ளார்.
    ×