என் மலர்
நீங்கள் தேடியது "Mitchell Starc"
- டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
- பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார். டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைய உள்ளார். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் ஸ்டார்கின் சுவிங் பவுலிங்கில் திணறி ஆட்டம் இழந்திருக்கிறார்கள்.
இந்தியாவின் சமதளமான பிட்சில் அவரால் எளிதாக ரிவர்ஸ் சுவிங் போட்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
- இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது.
- அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என மிட்செல் ஸ்டார்க் கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதற்காக அவர் பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 31 2018 வரை கவர் ஆகும் வகையில் பிரிமீயர் செலுத்தியுள்ளார். அவருடைய இன்சூரன்ஸ் மதிப்பு சுமார் 10 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும்.
தற்போது இந்த ரூபாயை வழங்க உத்தரவிடும்படி ஆஸ்திரேலியாவில் உள்ள நீதிமன்றத்தை அணுகியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

‘‘ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையின் கீழ் விளையாடுவது அற்புதமானது. உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான வீரர். ஆஸ்திரேலியா தொடரில் தற்போது விளையாடி வரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியா உச்ச நிலையை அடையும்’’ என்றார்.
உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.

தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.
மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கினார். இந்த சம்பவத்தில் ஸ்மித்திற்கும், வார்னருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதித்தது.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் அடித்தார். ஒரே டெஸ்டில் 200 ரன்கள் அடித்ததால் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பிய பின்னர், மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று சக வீரரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆன மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக ஸ்டீவ் ஸ்மித் எப்படி விளையாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கடுமையாக விளையாடக் கூடியவர். மற்ற எந்த வீரரையும் விட அதிக பந்துகளை சந்திக்கக் கூடியவர். அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக் கூடியவர்.
ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பி, அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதம் அடித்து உலக பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்குவார்கள். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை’’ என்றார்.