என் மலர்
நீங்கள் தேடியது "Usman Khawaja"
- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
- விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்:
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இவரது சகோதரர் அர்சகான் கவாஜா (39). சமீபத்தில் இவர் சிட்னி புறநகர் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டது.

அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் தாக்குதல் நடத்துபவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த ஆவணம் அர்சகான் கவாஜா உடன் படிக்கும் முகமது கமெர் நிஷாம்தீன் எழுதியாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாணையில் நிஷாம்தீன் கையெழுத்து அந்த கடிதத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்த போலீசார் அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.
இந்நிலையில் ஒரு பெண் விவகாரத்தில் அர்சகான் கவாஜா அந்த கடிதத்தை எழுதியதாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.