search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கருப்பு பட்டை அணிந்த விவகாரம்: உஸ்மான் கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
    X

    கருப்பு பட்டை அணிந்த விவகாரம்: உஸ்மான் கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.
    • பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    துபாய்:

    பெர்த் நகரில், ஆஸ்தி ரேலியா-பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாசகம் எழுதிய ஷூவை அணிய கவாஜா முடிவு செய்திருந்தார்.

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது. இதையடுத்து அவர் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார். இது ஐ.சி.சி.யின் ஆடை மற்றும் உபகரண விதி மீறல்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கவாஜாவுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கூறும்போது, "உஸ்மான் கவாஜா, தனிப்பட்ட செய்தியை காட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. முன் அனுமதி பெறாமல் கருப்பு பட்டை அணிந்துள்ளார். இது ஒரு விதி மீறல் ஆகும். முதல் கட்ட விதி மீறலையடுத்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.

    இது தொடர்பாக கவாஜா கூறும்போது, "தனிப்பட்ட துக்கத்திற்காக கருப்பு பட்டையை அணிந்ததாக ஐ.சி.சி.யிடம் கூறினேன். ஐ.சி.சி.யால் நான் கண்டிக்கப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.

    Next Story
    ×