search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fleming"

    • ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது.
    • ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. குஜராத் அணி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 6 ரன்னில் வீழ்த்தியது. இதனால் 2-வது வெற்றியை பெறப் போவது சென்னையா? குஜராத்தா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே. மோதும் ஆட் டத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    குஜராத்துடன் இன்று மோதும் ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீ பன் பிளமிங் கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும். ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.

    தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:

    புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

    ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்' என கூறினார்.
    இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 
    அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
    2019 உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு டோனி தேவை. அவரது வலிமையை கணிக்க இயலாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. இரண்டு உலகக் கோப்பையை (2007 இருபது ஓவர், 2011 ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்து அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    37 வயதான டோனி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அந்த இரு நிலைகளிலும் விளையாடி வந்தார். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி நீக்கப்பட்டார்.

    இதனால் அவரது எதிர்காலம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை டோனி இனி இடம் பெறுவது கேள்விக்குறியே. ஒருநாள் போட்டிகளிள் ஆட்டத்திறனை பொறுத்து அவரது எதிர்காலம் இருக்கிறது.

    இந்த நிலையில் டோனி வலிமையானவர், 2019 உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு அவர் தேவையானவர் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி இந்திய அணியில் இடம்பெற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவரது வலிமையை கணிக்க இயலாது. கடந்த ஐபிஎல் போட்டியில் டோனியின் பேட்டிங்கை பார்த்தால் இது தெரியும்.



    ஒருநாள் போட்டிகளில் போன்று டோனி நம்பிக்கையுடன் ஆட வேண்டும். அவர் மிகப்பெரிய கட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாக நினைக்கிறேன். 2019 உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெறுவார்.

    இவ்வாறு பிளமிங் கூறினார்.

    டோனி இந்த ஆண்டில் 10 இன்னிங்சில் விளையாடி 255 ரன்களே எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 67.36 ஆகும்.
    அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

    இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.

    இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-


    இறுதிப்போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். திட்டம் வைத்து இருப்பது எல்லாம் பயிற்சியாளர் பிளமிங் தான். நான் அதை செயல்படுத்துவேன். இதற்காக பிளமிங்குக்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. ஐதராபாத்துக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள்.


    எனது வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. அது போலத்தான் அணியில் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது யார் பேட்டிங் செய்கிறார் அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையை பொறுத்து தான் பந்துவீச்சாளர்களை அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    கடினமான ஆடுகளத்தை தவிர்த்து மற்ற இடங்களில் ஜோஸ் பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன் என்று ஸ்டீபன் பிளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். #IPL2018 #RRvCSK
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பட்லர் 60 பந்தில் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.

    அவரது ஆட்டத்தை பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கடினமான ஆடுகளத்தை தவிர்த்து கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘பட்லருக்கு எதிராக நாங்கள் ஏராளமான திட்டம் வைத்திருந்தோம். அதில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னும் ஒன்று. அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. கடினமான ஆடுகளத்தை தவிர்த்து பட்லர் கிளாஸ் பேட்ஸ்மேன். அவர் இன்னிங்ஸ் முழுவதும் பேட் செய்தார். அவரை முன்னதாகவே வீழ்த்தியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

    நாங்கள் பென் ஸ்டோக்ஸை விரைவில் வீழ்த்திய போதிலும், பட்லரை அவுட்டாக்க முடியவில்லை. அவர் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நின்றுவிட்டார். முதல் ஆறு ஓவரில் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள். இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செய்திருக்கனும். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது’’ என்றார்.
    ×