என் மலர்
நீங்கள் தேடியது "பிளமிங்"
- நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை.
- நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும்.
ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்பின் ஐந்து தொடர் தோல்வியை சந்தித்தது. பின்னர் லக்னோவை வீழ்த்தியது. அதன்பின் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்தது. 12ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வருகிற 25ஆம் தேதி கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் நாங்கள் விளையாடிய விளையாட்டிற்கு கடைசி இடம் பொருத்தமானது என சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிளமிங் கூறுகையில் "நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தை மட்டுமே விரும்பினோம். சில வீரர்களின் ஆட்டங்களை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். அடுத்த இரண்டு போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.
நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும். நாங்கள் அந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், எனவே அதிலிருந்து மறைந்து செல்ல முடியாது" என்றார்.
- ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், கவதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு.
- பதவிக்காலம் சுமார் இரண்டரை ஆண்டுகள் என்பதால் பிளமிங் யோசனை செய்வதாக தகவல்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஜூன் மாதத்துடன் அவரது பயிற்சி காலம் முடிவுடைகிறது. இதனால் விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.
ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், கவுதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணம் செய்ய மாட்டேன் என இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் டிசம்பர் 2027 வரை பதவிக்காலம் என்பது நீண்டு காலம் என அவர் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட்டும் இதுபோன்றுதான் யோசித்தார். பின்னர் சம்மதம் தெரிவித்தார். அதேபோல் பிளமிங்கும் சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவருடன் எம்.எஸ். டோனி நெருக்கமாக உள்ளார். இதனால் டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் டிராவிட் முதலில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் வற்புறுத்தப்பட்டார். அதேபோல் ஸ்டீபன் பிளமிங் வற்புறத்தப்படலாம். இதற்கு டோனியை விட சிறந்த நபர் யாராக இருக்க முடியும்? என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக செய்திகள் வெளியாகி உள்ளது.






