search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்ததை கண்டித்ததால் மாணவன் மாயம்
    X

    கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்ததை கண்டித்ததால் மாணவன் மாயம்

    கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்ததை பெரியப்பா கண்டித்ததால் பள்ளி மாணவன் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடுங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குணாளன் (வயது17). கம்பத்தில் உள்ள பெரியப்பா நாட்ராயன் என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது சிறப்பு வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.

    படிக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த குணாளன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நாட்ராயன், ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×