என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்ததை கண்டித்ததால் மாணவன் மாயம்
Byமாலை மலர்8 May 2019 12:00 PM GMT (Updated: 8 May 2019 12:00 PM GMT)
கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்ததை பெரியப்பா கண்டித்ததால் பள்ளி மாணவன் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடுங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குணாளன் (வயது17). கம்பத்தில் உள்ள பெரியப்பா நாட்ராயன் என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது சிறப்பு வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.
படிக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த குணாளன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நாட்ராயன், ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடுங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குணாளன் (வயது17). கம்பத்தில் உள்ள பெரியப்பா நாட்ராயன் என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது சிறப்பு வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.
படிக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த குணாளன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நாட்ராயன், ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X