search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    திருப்பூரில் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு- நாளை மறுநாள் நடக்கிறது

    31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பழங்கரை அடுத்த அணைப்புதூரில் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை மறுநாள் 26-ந் தேதி நடக்கிறது. இதில் 2008 செப்டம்பர் 1-ந் தேதி,அதன் பின்னர் பிறந்தவர்கள் 14 வயது பிரிவில் பங்கேற்கலாம்.

    இம்மாதம் 31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். 2006 செப்டம்பர் 1-ந் தேதி அதன் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மட்டுமே தேர்வுக்கு தகுதியுடையவர்கள்.

    தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, அசல் சான்றுகளுடன் மைதானத்துக்கு வர வேண்டும். இரு தேர்வுகளும் மதியம் 2:30மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×