என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

    விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    • தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.
    • அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.

    * தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.

    * அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

    * மற்றக்கட்சியினர் கூட்டணி குறித்து அ.தி.மு.க.வினர் ஏன் கவலைப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது.
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கோவில்பட்டி:

    ம.தி.மு.க. முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி. கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

    தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது. சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம்.

    தற்போது தே.மு.தி.க., வரவால் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது.

    தமிழகத்தில் 4 முனைப்போட்டி இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் தான் பிரதான அணிகள். இந்த 2 அணிகளுக்கு இடையேதான் போட்டி.

    தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு எங்கள் இயக்கத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந் தேதிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என நினைக்கிறேன். அதன் பின்னர் தான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம், யார் வேட்பாளர் என்பதை எல்லாம் சொல்ல முடியும்.

    ம.தி.மு.க.வுக்கு கூடுதல் எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷம். ஆனால் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் கூட்டணி தலைமைக்கு நெருக்கடியை உருவாக்க கூடாது.

    எல்லா இயக்கத்திற்கும் தொகுதிகள் வேண்டும் என்பது முக்கியம் தான். இந்த நேரத்தை பொறுத்தவரை, நாம் வெற்றி அடைய வேண்டும். வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம். எங்கள் கட்சித் தலைமையும், கூட்டணி தலைமையும் பேசி, சுமூகமான முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அவரது அரசியல் வருகையால் தேர்தல் களத்தில் ஒரு தாக்கம் இருக்கும். 15 சதவீத ஓட்டு பெறுவார். ஆனால் அது வெற்றியாக மாறுமா என்பது சந்தேகம் தான்.

    விஜய்யை பொறுத்தளவு, மத்திய பாரதீய ஜனதா அரசை எதிர்த்து அவரது குரல் ஒலிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர். பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசாமல் இருக்கிறார். தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை எதிர்ப்பதாக கூறும் விஜய், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள், திட்டங்கள், நிதி பிரச்சினைகள் குறித்து அவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் மவுனமாக இருக்கிறார்.

    விஜயின் அரசியல் வரவு என்பது இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வருகிறோம். குறிப்பாக, சமீபத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு, கடந்த 4½ ஆண்டுகளில் அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விளாத்திகுளம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதியது.
    • இந்த விபத்தில் பைக்கில் சென்ற குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் மீது வேன் மோதியதில் 5 பேர் பலியானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன்.
    • இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    ஆட்டம் போட்ட சூரனை முருகன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ? அதேபோல் ஆட்டம் போட்டவர்களை தலைவர் விஜயின் தம்பிகள் சம்ஹாரம் செய்யப் போகிறார்கள். இனி வரும் காலம் நம் காலம். அடுத்த முதலமைச்சர் விஜய் தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள். 2 பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் களத்தில் நிற்கிறார்.

    கடந்த காலங்களில் தே.மு.தி.க. கட்சியை விஜயகாந்த் உருவாக்கினார். ஆனால் இன்றைய தினம் விருப்பமனு வாங்குவதற்கு கூட கட்சியில் ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது.

    அதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் உலகநாயகன் கமலஹாசன் வந்தார். தி.மு.க. மீது கூர்மையை தீட்டினார். ஆனால் தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக்கிடக்கிறார் உலக நாயகன். இந்த தேர்தல் முடிவதற்குள் சீமான் கட்சியை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.

    இந்திய துணைக் கண்டத்தில் 1 கோடி இளைஞர்களை வைத்திருக்கிற தலைவனை இன்று தான் அரசியல் பார்க்கிறது.

    தி.மு.க.விற்கு உழைத்தது உனது மகனா?, தி.மு.க.விற்கு வேர்வை பாய்ச்சியது உனது குடும்பம் மட்டும் தானா? தி.மு.க.விற்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தியது உங்கள் குடும்பம் மட்டும் தானா? உதயநிதிக்கு ஒரு திருக்குறளை ஒழுங்கா சொல்ல தெரியுமா? மாநில சுய ஆட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் நிறுத்திவிடுகிறேன்.

    ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும் போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும்.

    நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதலமைச்சர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. ரேம்வாக்கிற்கு எங்கள் தளபதி போடும் பேண்ட் கலரில் முதலமைச்சர் பேண்ட் போடுகிறார். வேறு கலர் கிடைக்கவில்லையா. கலரும் களவு தானா? எங்கள் தளபதி போல் அவரும் ரேம்வாக் போகிறார். இந்த ரேம்வாக்கை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே எங்கள் தளபதி விக்கிரவாண்டியில். எங்கள் தளபதி ராம் வாக் செல்ல அவருக்கு தகுதி இருக்கிறது. உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கிறது?.

    சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊத கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். யாராவது தி.மு.க.வினரை பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள். விசில் ஊதும் போது அவரது செவில் கிழியும் அளவிற்கு ஊத வேண்டும். யானை பிளிரும் ஓசையை விட விசிலின் ஓசை அதிகமானது

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் விஜய ராஜ், பத்ரி பிரசாத், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் மதன், யாசர் அரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் வளாகம் முழுவதும் மணமக்கள் கோலமாக காட்சியளித்தது.
    • தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தை மாதத்தில் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், மற்றும் வேன்களில் வந்து காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும், தை மாத கடைசி சுப முகூர்த்த நாளான இன்று கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் மணமக்கள் கோலமாக காட்சியளித்தது.

    இதனால் அங்கு வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தை மாதத்தில் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம் செய்ய வந்தவாறு உள்ளனர்.

    முன்னதாக, கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வ ரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் நகர எல்லைக்குள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பக்தர்கள் வாகனங்கள் தெருக்களில் நிறுத்தப்பட்டதால் உள்ளூர் பொதுமக்கள் எளிதாக அவசரமாக வெளியே வரமுடியாமல் திணறினர்.

    • ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
    • 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

    திருச்செந்தூர்:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார்.

    அங்கு அவர் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், கோவில் வாசலில் உள்ள டீக்கடையில் டீ அருந்தினார். பின்னர் விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உலக மக்கள் நலனுக்காக வேண்டி கொண்டேன் என்றார்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறினீர்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தை முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன என்றார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். 

    • சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கியூபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன் பிரம்ம நாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா, கேப்ரியல் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இரவு முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் காயல்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த லோடு வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் சாத்தான்குளம் சவுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட டிரைவர் ஆகியோர் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். 

      திருச்செந்தூர்:

      தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

      சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

      உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன்.

      கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்.

      முருகன் அருளால் நல்ல மகத்தான கூட்டணி அமையும், அது எல்லோருக்கும் நிச்சயமாக நன்மை பயன் அளிக்கும் என்று கூறினார்

      விஜய் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது நான் எப்போதும் பதில் சொல்வதில்லை.

      2026 தேர்தல் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும். நாங்கள் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம் என்றார்.

      • பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.
      • தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது.

      தூத்துக்குடி:

      தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

      அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

      கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 3-ந் தேதி வரை சுற்றுப்பயணம் இருக்கிறது.

      கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது.பிப்ரவரி 20-ந் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கிறது. அதனால் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து தலைமைக் கழகத்தில் அறிவிப்பேன்.

      தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ, மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ, தே.மு.தி.க.விற்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டிக்காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் கையில் கொடுத்து இருக்கிறார். சரியான நேரத்தில் கூட்டணியை அறிவிப்பேன்.

      பிரதமர் அவருடைய கூட்டணி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்று இருக்கின்றார்.

      விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் வருவது குறித்து கேட்கிறீர்கள். படத்தில் ஏதேனும் இருக்கிறதா? என்று உரியவரான விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன்.

      தி.மு.க. 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. பல தடவை எந்த மார்க் என்று நான் கூறி இருக்கின்றேன். 50 சதவீதம் நல்லது நடந்து இருக்கிறது. நடக்க வேண்டியதும் இருக்கின்றது. எல்லா காலத்திலும் போராட்டம் இருக்க தான் செய்கின்றது. இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள் எல்லோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
      • தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

      திருச்செந்தூர்:

      அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

      தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

      இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.

      மேலும் பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்களும் ஏராளமானோர் குவிந்தனர். அதிகாலையில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி ரூ. 100 கட்டண தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

        திருச்செந்தூர்:

        சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர்.

        அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

        வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (வயது 31) ஓட்டினார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.

        அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்களது உதவியுடன் வேனில் இருந்தவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து வெளியேறினர்.

        உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

        இந்த விபத்தில் பிரசாந்த் (38), அபிஷேக் (21), சந்திரன் (51), ராகுல் (26) உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

        ×