என் மலர்

    தூத்துக்குடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
    • டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள மேலூர் ரெயில் நிலையத்தை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் ஆய்வு

    ரெயில் நிலையத்திற்கு எதிரே புதிய பஸ் நிலையம் இருப்பதால் சாலையை அகலப்படுத்துவதற்கும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ரெயில்வே பணிகள் நிறைவேற்றதால் அப்பகுதியில் இருக்கும் மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றி போக்குவதற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நாட்களில் புதிய சாலை மற்றும் மின்விளக்குகள் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், ஜெயராஜ் ரோட்டில் அமைந்துள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அங்கே உள்ள நடைபாதை பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகளுக்கு உத்தரவு

    இதனை அடுத்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர், தி.மு.க. வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்டாரஞ்செட்டிவிளை பகுதியில் உள்ள தார்சாலை மட்டும் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாகவும், புழுதிகள் பறந்தவண்ணம் காணப்பட்டது.
    • அமைச்சரின் உத்தரவின் பேரில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளி முதல் ரெங்கநாதபுரம், சிவலூர் காலனி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    உடன்குடி:

    உடன்குடி- தாண்டவன்காடு சாலையில் பண்டாரஞ்செ ட்டிவிளை பகுதியில் உள்ள தார்சாலை மட்டும் பல ஆண்டு களாக மிகப்பெரிய குண்டும், குழியுமாகவும், புழுதிகள் பறந்தவண்ணம் காணப்பட்டது.

    இச்சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, இந்து கிறிஸ்தவ ஆலயங்கள், குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ச.ம.க., பா.ஜனதா மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் போரா ட்டங்கள் நடத்தியும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இது குறித்து உடன்குடி பேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, வார்டு உறுப்பினர்கள் முகம்மது ஆபித், சாரதா ஆகியோர் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்து உடனே நிறைவேற்றி தரும்படி வற்புறுத்தினர்.

    மனுவை பெற்று கொண்ட அமைச்சர் உடனடியாக நடவ டிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினார். அமைச்சரின் உத்தரவின் பேரில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் பள்ளி முதல் ரெங்கநாதபுரம், சிவலூர் காலனி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது இபித், சாரதா, சரஸ்வதி பங்காளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுமார் 12 ஆண்டுகள் வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
    • படத்தொகுப்பை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 3-ந்தேதிக்கு (சனிக்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட தொகுப்பு போட்டி இணையவழியில் நடக்கிறது.

    பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.

    இப்போட்டியில் பங்கு பெற மாணவர்கள் https://forms.gle/TAdLy6jBvHHTQtEZ7 என்ற இணைப்பின் மூலம் தங்களது படத்தொகுப்பை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 3-ந்தேதிக்கு (சனிக்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறிய jensi@drsacoe.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 04639-220740 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினி துறை பேராசிரியர் ஜென்சி மற்றும் பேராசிரியர்கள், துறை மாணவர்கள் செய்துள்ளனர்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
    • பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், நெல்லை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி அணியும் மோதின.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் சார்பில் 18-வது மாநில அளவிலான ஆண், பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தன.

    இதில், ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. போட்டிகளை மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ., கனரா வங்கி உதவி பொது மேலாளர் சக்கால சுரேந்திர பாபு தொடங்கி வைத்தனர்.

    இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆண்கள் பிரிவில் கன்னியா குமரி கே.கே.பிரண்ட்ஸ் அணியும், கீழக்கரை அணியும் மோதின. இதில், 24-22, 18-24, 15-9 என்ற புள்ளி கணக்கில் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது. 3-வது இடத்தை புதியம்புத்தூர் அணியும், 4-வது இடத்தை கோவில்ப ட்டி அணியும் பிடித்தன.

    பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், நெல்லை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி அணியும் மோதின. இதில், 25-23, 22-25, 15-11 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. 3-வது இடத்தை சென்னை லைப் ஸ்போர்ட்ஸ் அணியும், 4-வது இடத்தை மதுரை லேடி டோக் கல்லூரி அணியும் பிடித்தன.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி மண்டல மேலாளர் கவுசல்யா கோப்பைகளை வழங்கி பாராட்டினார். விழாவில், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ்குமார், நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன், தொழிலதிபர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை படர்ந்தபுளி லியா கைப்பந்து கழக தலைவர் ஜனகராஜ், செயலாளர் லிங்கவன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியல்,பள்ளங்கள் காணப்படுகிறது.
    • கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கரம், கார்களில் வருபவர்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்ல விஜயராமபுரம், சிறப்பூர், சாமிதோப்பு, நடுவக்குறிச்சி வழிச்சாலை பிரதான சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் இரவு- பகலாக ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்த சாலையில் சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியல்,பள்ளங்கள் காணப்படுகிறது.

    இதனால் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கரம், கார்களில் வருபவர்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் சாமிதோப்பு அடுத்து சுடலைமாட சுவாமி கோவில் முன்பு சாலையோரத்தில் கரையே காணப்படுகிறது. இரவு நேரத்தில் இது தெரியாமல் வருபவர்கள் சாலை மேட்டில் இருந்து கீழே விழுந்து வாகனங்கள் கவிழும் அபாய நிலையும் காணப்படுகிறது.

    இந்த வழியே அடிக்கடி பயணிப்பவர்கள் இதனை சுதாரித்து சென்று வருகின்றனர். இந்த வழியை புதியதாக பயன்படுத்தி வருபவர்கள் இந்த தருணம் தெரியாமல் பெரிய விபத்து நிகழ வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    ஆதலால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு நடத்தி சாலையோரத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அப்புறப் படுத்துவதுடன், சாலையோரத்தில் கரையே இல்லாத பகுதியில் மணலை கொண்டு கரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சபீன் ராஜா மற்றும் அவரது நண்பரான சிவக்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தெருவில் வேகமாக சென்றுள்ளனர்.
    • அதனை கண்ட சுகுமார் குழந்தைகள் உள்ள இடத்தில் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுகுமார் (30), சென்ட்ரிங் தொழிலாளி.

    இதே பகுதியில் பாரதி நகரை சேர்ந்த சபீன் ராஜா (25) என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சபீன் ராஜா மற்றும் அவரது நண்பரான சிவக்குமார் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் செல்வராஜ புரத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அவர்கள் தெருவில் வேகமாக சென்றுள்ளனர். அதனை கண்ட சுகுமார் குழந்தைகள் உள்ள இடத்தில் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.

    இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மீண்டும் அங்கு வந்த சபீன் ராஜா, சிவக்குமார் ஆகியோர் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளனர்.

    அப்போது சபீன் ராஜா கத்தியால் தாக்கியதில் சுகுமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் கூடினர்.

    அப்போது சபீன் ராஜாவும், சிவக்குமாரும் சுகுமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த படி அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் சுகுமார் காயல்பட்டினம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபீன் ராஜா, சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அகத்தியர் சிலைக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர்.

    தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    இந்த நிலையில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தாமிரபரணி நதியின் உப நதியான கடனா ஆறு, மணிமுத்தாறு, பச்சையாறு, சிற்றாறு உள்பட ஆறுகளும் வறண்டு விட்டன.

    இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி வறண்டு போனால் மே மாதம், பொதிகை மலையில் அகத்தியருக்கு பூஜை செய்வது வழக்கம். எனவே இந்த வருடமும் அதுபோன்ற பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இதற்காக செய்துங்க நல்லூரில் இருந்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன், உச்சிமகாளி சுவாமி உள்பட 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 26-ந்தேதி மாலை கிளம்பினர்.

    இவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தாமிரபரணி ஆர்வலர்கள் வழி அனுப்பி வைத்தனர். இவர்களை போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பொதிகைமலை யாத்திரைக்கு வருகை தந்தனர். கேரள வனத்துறைக்கு உட்பட்ட விதுரா வழியாக கானித்தலம் வந்து, அங்குள்ள சோதனை சாவடியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போனக்காடு என்ற பகுதிக்கு வந்தனர்.

    அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கரடு முரடான பயணத்தினை தொடங்கினர். அவர்கள் தங்கர் பச்சான் கோவில், லாத்தி மோட்டா, கருமேனியாறு, வாலை பிந்தியாறு, அட்டையாறு, புல்வெளி, ஏழுமடங்கு, ஏ.சி. காடு வழியாக அத்திரிமலை பங்களா வந்து அடைந்தனர்.

    அங்கு இரவு ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலை மீண்டும் பயணத்தினை தொடங்கினர். அவர்கள் மதிமயக்கும் சோலை, தாமரைக்குளம், பொங்கலா பாறை, சங்குமுத்திரை, வழுக்கு பாறை, இடுக்கு பாறை ஆகிய மூன்று இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்து ஏறி பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.

    அங்கு அகத்தியர் சிலைக்கு பால், நெய், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் நடந்தது. பின்னர் தாமிரபரணி நதி வற்றாமல் இருக்கவும், பருவ காலங்களில் மழை பெய்யவும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அங்கு வந்த பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர். அவர்கள் வேண்டுதல் நடத்தும் போதே மழை பொழிந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்து கீழே இறங்கியவுடன் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி அத்திரி பங்களாவில் இரவு தங்கி விட்டு, 3-வது நாள் கீழே இறங்கி வந்தனர். பொதிகை மலை உச்சியில் கடந்த 1996-க்கு பிறகு தமிழ்நாடு வனத்துறை பாதை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரள வனத்துறை சார்பில் அனுமதி பெற்று அகத்தியரை தரிசனம் செய்ய மக்கள் செல்கிறார்கள். இவர்கள் வேண்டுதல் நிறைவேறி மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற பக்தர்கள் நம்பிக்கை நிறைவேறட்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். தொடர்ந்து மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    திருவிழாவை காண கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி நகர உட்கோட்ட சிறப்பு படை போலீஸ் தலைமை காவலர் மாணிக்கராஜ் மற்றும் மகாலிங்கம், சாமுவேல், செந்தில் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் இருந்து சிலர் தப்பி ஓடினர். எனினும் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் அவர் மினிலாரியை ஓட்டிவந்த தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் (வயது41) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனையிட்டனர். அதில் 49 மூட்டைகளில் 2,500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவைகள் தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சார்லசை கைது செய்தனர்.

    மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து. பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) ஆகஸ்ட் 2023 -ம் ஆண்டுக்கான சேர்க்கை வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் அசல், நகல்களுடன், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் சலுகை, இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலனி, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர், முதல்வரை 94990 55810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin