என் மலர்
நீங்கள் தேடியது "Vaiko"
- தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
கோவில்பட்டி:
ம.தி.மு.க. முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி. கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது. சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம்.
தற்போது தே.மு.தி.க., வரவால் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது.
தமிழகத்தில் 4 முனைப்போட்டி இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் தான் பிரதான அணிகள். இந்த 2 அணிகளுக்கு இடையேதான் போட்டி.
தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு எங்கள் இயக்கத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந் தேதிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என நினைக்கிறேன். அதன் பின்னர் தான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம், யார் வேட்பாளர் என்பதை எல்லாம் சொல்ல முடியும்.
ம.தி.மு.க.வுக்கு கூடுதல் எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷம். ஆனால் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் கூட்டணி தலைமைக்கு நெருக்கடியை உருவாக்க கூடாது.
எல்லா இயக்கத்திற்கும் தொகுதிகள் வேண்டும் என்பது முக்கியம் தான். இந்த நேரத்தை பொறுத்தவரை, நாம் வெற்றி அடைய வேண்டும். வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம். எங்கள் கட்சித் தலைமையும், கூட்டணி தலைமையும் பேசி, சுமூகமான முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அவரது அரசியல் வருகையால் தேர்தல் களத்தில் ஒரு தாக்கம் இருக்கும். 15 சதவீத ஓட்டு பெறுவார். ஆனால் அது வெற்றியாக மாறுமா என்பது சந்தேகம் தான்.
விஜய்யை பொறுத்தளவு, மத்திய பாரதீய ஜனதா அரசை எதிர்த்து அவரது குரல் ஒலிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர். பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசாமல் இருக்கிறார். தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை எதிர்ப்பதாக கூறும் விஜய், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள், திட்டங்கள், நிதி பிரச்சினைகள் குறித்து அவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் மவுனமாக இருக்கிறார்.
விஜயின் அரசியல் வரவு என்பது இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வருகிறோம். குறிப்பாக, சமீபத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு, கடந்த 4½ ஆண்டுகளில் அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர்.
மதுரை:
தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார்.
இதில் எம்.பி.க்கள் வைகோ, துரை. வைகோ (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்செல்வன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), முகமது அப்துல்லா, ராணிஸ்ரீ குமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ், சச்சிதானந்தம் (திண்டுக்கல்), தர்மர் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த கோரிக்கை மனுவில், விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றத்தின் போது கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிகமானோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த சிரமத்தை தவிர்க்க கரிவலம் வந்தநல்லூர் நிலையத்தை உடனடியாக ஹால்ட் ஸ்டேஷனாக மீண்டும் திறந்து, பின்னர் பிளாக் ஸ்டேஷனாக மாற்றவேண்டும்.
மதுரை கோட்ட காலியிடங்களை மீண்டும் சென்னை கோட்ட ரெயில்வே வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே நான்கு ஜோடி மெமு ரெயில் சேவைகளை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கிறது. இதனால் பயணிக்கும் பொது மக்களும், வியாபாரிகளும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு ரெயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரெயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் ரெயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் ரெயில் வேயின் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 22629/22630) அதிக ஆதரவுடன் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட வேண்டும்.
மதுரை-கோவை இடையே 5 ரெயில்கள் இயப்பட்டது. எனவே ராமேசுவரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய தினசரி ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
மதுரை-கோவை (வண்டி எண்: 16721/16722) எக்ஸ்பிரஸ் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த இரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கோவையை அடைகிறது. திரும்பும் திசையில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 7.35 மணிக்கு மதுரையை அடைகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.
சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும், திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த வேண்டும், திருமங்கலம் ரெயில் நிலையத்தின் வடக்கு முனையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.






