search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நேபாளத்தில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு திருப்பூர் வீரர் தேர்வு

    கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன் என்றார் சாகுல் அமீது.

    திருப்பூர்:

    இந்திய வீரர்கள் பங்கேற்கும், கிரிக்கெட் தொடர், நேபாளம் நாட்டில் அடுத்த மாதம் 10, 11, 12-ந் தேதிகளில் நடக்கிறது. தொடரில் விளையாட தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.

    இதில் திருப்பூர், மங்கலம் அக்ஹாரப்புத்துாரை சேர்ந்த ஷாகுல் ஹமீது, ஈரோடு-மணிவண்ணன், அரியலுார் - சந்தோஷ் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

    இதுகுறித்து ஷாகுல் ஹமீது கூறியதாவது:-

    மங்கலம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். வலது கை பாதித்திருந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.

    கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன். நேபாள கிரிக்கெட் தொடரில், முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×