search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம்.

    ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

    அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படைவீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துதார்.

    தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு ஜம்ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " பாகிஸ்தானில் உள்ள தலைமைக்கு நான் கூற விரும்புகிறேன், அவர்கள் உண்மையிலேயே இந்தியாவுடன் நட்புறவை விரும்பினால், அவர்கள் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மேலும் காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது" என்றார்.

    • ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
    • இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடர் ஓமன் நாட்டில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் இந்த தொடர் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும் ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

    இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி வந்த யாசிர் கான் தூக்கி அடித்த பந்தை ஓடிச்சென்று பாய்ந்து ஒற்றை கையால் ரமன்தீப் சிங் பிடித்தார்.

    ரமன்தீப் சிங்கின் அந்த கேட்ச் ஒரு இந்தியரின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    • இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.
    • திருமணத்தை விரைந்து ஆன்லைனில் நடத்தி முடிக்க இருவீட்டார் முடிவு எடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய மணமகன், பாகிஸ்தான் மணமகளுக்கு ஆன்லைன் வழியே எல்லை தாண்டிய திருமணம் நடந்தது. இந்த வித்தியாச திருமணம் பா.ஜ.க.-வை சேர்ந்த உள்ளூர் தலைவர் தஹ்சீன் ஷாஹித் குடும்பத்தில் தான் வெற்றிகரமாக அரங்கேறி இருக்கிறது.

    தஹ்சீன் ஷாஹித் மகன் முகமது அப்பாஸ் ஹைதர் மற்றும் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ராவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி, மணமகன் பாகிஸ்தான் செல்ல விசா கோரி விண்ணப்பித்து இருந்தார். எனினும், இரு நாடுகள் இடையே அரசியல் பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.

    இதைத் தொடர்ந்து மணப்பெண் தாயார் ராணா யாஸ்மின் ஜைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தாயார் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்தை விரைந்து முடிக்க ஆன்லைனில் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று இருவீட்டார் இணைந்து முடிவு எடுத்தனர்.

    அதன்படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு, ஷாஹித் இமாம்பராவில் கூடி ஆன்லைன் திருமணத்தில் பங்கேற்றார். லாகூரைச் சேர்ந்த மணமகளின் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

    ஆன்லைன் திருணம் பற்றி பேசிய ஷியா மதத் தலைவர் மௌலானா மஹ்ஃபூசுல் ஹசன் கான், "இஸ்லாத்தில், திருமணம் செய்ய பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. மேலும் மணப்பெண் தன் சம்மதத்தை மௌலானாவிடம் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பு மௌலானாக்கள் இணைந்து விழாவை நடத்தும் போது ஆன்லைன் திருமணம் சாத்தியமான் ஒன்று தான்," என்றார்.

    மேலும் மணமகன் ஹைதர் தனது மனைவிக்கு இந்திய விசாவை எந்த தொந்தரவும் இல்லாமல் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசினார்
    • லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

    2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்ற சூழலே நிலவுகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் [PCB] தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

     

    அந்த வகையில் பிசிசிஐ -க்கு பிசிபி கூறிய திட்டம் என்னவென்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டிக்கு மீண்டும் பாகிஸ்தான் வரலாம். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின்போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி கூறியுள்ளது.

    தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வார இடைவெளி இருப்பதால் இது சாதியாமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திருப்ப ஏதுவாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார்.

    இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சல்மான் அகா மட்டும் நிதானமாக ஆடி 63 ரன்களை அடித்தார். எனினும், இங்கிலாந்து அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது.
    • இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனைப் பெற்று பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இம்ரான்கானுக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருவதாக அவரது கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் சிறையில் இம்ரான்கானை இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாக அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

    இம்ரான்கானை அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திப்பதற்கு பஞ்சாப் மாகாண அரசு தடைவிதித்துள்ளது. மேலும் அவர் வாரத்துக்கு ஒரு முறை லண்டனில் உள்ள தனது மகன்களுடன் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் மின்சாரத்தை துண்டித்துவிட்டனர். அவர் சிறை அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. இருட்டு அறையில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை எழுந்துள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

    இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளரான ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கும், இம்ரான்கானுக்கும் 1995-ல் திருமணமான நிலையில் 2004-ல் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்ததும், இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளதும் குறிப்படத்தக்கது.

    • பாபர் அசாம் ஓய்வு என்று பெயரில் வலுக்கட்டாயமாகக் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்றாக நான் பார்க்கிறேன்.

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இன்னும் மிச்சமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் கேட்பன் பாபர் அசாம் அப்போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள்ளார். கடந்த சில மாதங்களாகவே சுமாராக செயல்பட்டுவருவதாக விமர்சனத்துக்குள்ளான பாபர் அசாம் ஓய்வு என்று பெயரில் வலுக்கட்டாயமாகக் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இதற்குப் பாகிஸ்தான் வீரர் ஃபகர் சமான் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்றாக நான் பார்க்கிறேன்.

     

    ஆனால் இந்த முடிவு அந்த எல்லாவற்றையும் விட அதிக ஆச்சர்யம் தருவதாக உள்ளது. இது ஒரு முட்டாள்தனமான முடிவு. அவராகவே [பாபர் அசாம்] விருப்பப்பட்டு ஓய்வு கேட்காமல் இது நடந்திருக்கும் பட்சத்தில் நிச்சயம் இது முட்டாள்தனமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலியா ரியாஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.

    • சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
    • காயமடைந்த 7 சுரங்கத் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

    மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

    காயமடைந்த 7 சுரங்கத் தொழிலாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
    • அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் வேட்கையுடன் தயாராகிறது.

    பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. திடீர் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவர் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பாத்திமாவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் முனீபா அலி அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒரு போதும் வென்றதில்லை. இதுவரை அந்த அணிக்கு எதிராக மோதியுள்ள 15 ஆட்டங்களில் 13-ல் தோற்றுள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இதற்கிடையே சார்ஜாவில் நேற்றிரவு நடந்த பி பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 104 ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்த டெஸ்ட் போட்டியில் 310 பந்துகளில் முச்சதத்தை கடந்து ஹாரி புரூக் சாதனை படைத்துள்ளார்

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் 310 பந்துகளில் முச்சதத்தை கடந்து ஹாரி புரூக் சாதனை படைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 ஆவது டெஸ்ட் முச்சதமாகும். 278 பந்துகளில் வீரேந்திர சேவாக் அடித்த முச்சதம் தான் அதிவேகமாக அடிக்கப்பட்ட டெஸ்ட் முச்சதமாகும்.

    இப்போட்டியில் 823 ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

    இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 903 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 849 ரன்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
    • துப்பாக்கி சூட்டின் போது 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகர்வால் பகுதியில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டைக்கு வழிவகுத்தது.

    இந்த துப்பாக்கி சூட்டின் போது, 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம், 8 பேர் தப்பியோடினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள், 7 கலாஷ்னிகோவ்கள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×