என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார்.

    தொடர்ந்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்167 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 56 ரன்கள் அடித்தார்.

    நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    64 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்தின் கான்வே 37 ரன்னிலும், வில்லியம்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த டாம் லாதம்-ரச்சின் ரவீந்திரா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

    அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லாதம் 145 ரன்னிலும், ரவீந்திரா 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்தது. அந்த அணி இதுவரை 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.
    • காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    வெலிங்டன்:

    நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் ஹக்கி யுங் லீ (45). அவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர். அவரது கணவர் 2018-ம் ஆண்டு திடீரென இறந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

    காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஆனால் ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசுக்கு பயந்து ஒரு சூட்கேசில் தனது மகள்களின் உடல்களை அடைத்து வைத்தார். அதன்பின் அவர் அங்கிருந்து தென் கொரியா தப்பி ஓடினார். 2022-ல் அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பிறகே இந்தச் சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து தென் கொரியா சென்று ஹக்கி யுங்கை கைதுசெய்த போலீசார் நியூசிலாந்துக்கு நாடு கடத்தினர். ஆக்லாந்து கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    இந்நிலையில் ஹக்கி யுங் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹாமில்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டி முடிவில் நியூசிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரோஸ்டன் சேஸ் 38 ரன் அடித்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 30.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 64 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது. மேட் ஹென்றி ஆட்ட நாயகனாகவும், கைல் ஜேமிசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன் குவித்தார்.

    நேப்பியர்:

    வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

    அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஷாய் ஹோப் நேற்று அடித்த சதம் 19-வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவின் (19 சதங்கள்) சாதனையை ஷாய் ஹோப் சமன் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் (25 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    நேப்பியர்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. அடுத்து, நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

    அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. டேவான் கான்வே 90 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளதும்,

    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

    சாக்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து டி20 தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், நியூசிலாந்தின் இஷ் சோதி நேற்று 3 விக்கெட் சாய்த்தார். அவர் டி20 கிரிக்கெட்டில் 156 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமான் 155 விக்கெட் எடுத்த சாதனையை முறியடித்தார்.

    இந்தப் பட்டியலில் ரஷித் கான் 182 விக்கெட், டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

    ஆக்லாந்து:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். ரோவ்மன் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஆனாலும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து போராடி 55 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.

    • மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • இந்தத் தொடருக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்தார்.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை சோபி டிவைன். இவர் நியூசிலாந்து அணிக்காக 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3,990 ரன்னும், 107 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். மேலும், 146 டி20 போட்டிகளில் ஆடி 3,432 ரன்னும், 119 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

    16 வயதில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான சோபி டிவைன் சுமார் 20 ஆண்டுக்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில், சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து சோபி டிவைன் கூறுகையில், நியூசிலாந்து அணியில் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்தார்.

    13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    • அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.
    • இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி பெற்றது.

    ஆக்லாந்து:

    அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.

    இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய வாஷிங்டன் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பேட்டிங்கில் அசத்திய சான் பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 151 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இந்நிலையில், டி 20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பின் ஆலன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

    • எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன.
    • நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து குடிவரவு துறை (Immigration) பெண் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் இந்தியர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    குடியேற்றத் தகவல்களைக் கேட்டு இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் திறக்கப்படுவதில்லை என்றும், அவை Spam (போலி) ஆக கருதப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள்.

    ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது" என்று கூறினார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

    "அமைச்சர் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    • நியூசிலாந்தில் நேற்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்தில் நேற்று மாலை (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.

    நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.

    மவுண்ட் மனுவா:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.

    நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×