நியூசிலாந்து: மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நியூசிலாந்து: மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
Published on

வெலிங்டன்:

நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் ஹக்கி யுங் லீ (45). அவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர். அவரது கணவர் 2018-ம் ஆண்டு திடீரென இறந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ஜூசில் தூக்க மாத்திரை கலந்து அவர்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

காலையில் எழுந்து பார்த்தபோது இரு மகள்களும் உயிரிழந்தனர். ஆனால் ஹக்கி யுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசுக்கு பயந்து ஒரு சூட்கேசில் தனது மகள்களின் உடல்களை அடைத்து வைத்தார். அதன்பின் அவர் அங்கிருந்து தென் கொரியா தப்பி ஓடினார். 2022-ல் அவரது வீட்டை மற்றொரு தம்பதி வாங்கிய பிறகே இந்தச் சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தென் கொரியா சென்று ஹக்கி யுங்கை கைதுசெய்த போலீசார் நியூசிலாந்துக்கு நாடு கடத்தினர். ஆக்லாந்து கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இந்நிலையில் ஹக்கி யுங் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com