search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Email"

    • சென்னை கோவில்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
    • கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இமெயிலில் வந்தது.

    சென்னை:

    சென்னையில் பல கோவில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது.

    இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீசார் தகவல் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலில் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.
    • இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'இமெயில்'. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.


    இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.

    இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் கூட அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால் அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும். நிறைய திரையரங்குகள் கொடுத்தால் தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர். படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக நடித்துள்ளார்.


    படம் முடியும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரை தனிமரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். கட்டாயம் சோதனைகள் வரும். சோதனை வந்தால் தான் நல்லது. அதையெல்லாம் தாண்டி தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது.


    அதுமட்டுமல்ல நிறைய இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல லவ் லெட்டர் கொடுத்து, அந்தப் பெண் உடனே கோபமாகி செருப்பை கழட்டுவார். இந்த இமெயில் வந்தவுடன் அந்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு மட்டுமல்ல. சில பெரிய மனிதர்களிடம் கூட தடுமாற்றம், பயம் காரணமாக நாம் சொல்ல முடியாத விஷயங்களை சொல்வதற்கு இந்த இமெயில் உதவுகிறது.


    ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சார் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்கி சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள்.. அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள்.. அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி கண்ணுக்கு தெரிந்து நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கிறது. தனி மனிதனாக பார்த்து திருந்தினால் மட்டுமே போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும் என்று கூறினார்.

    • அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும்
    • மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதற்கான பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்படுவதால் அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான பல்வேறு கடிதங்கள், அறிவுறுத்தல்கள் எல்லாம் மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட இருக்கின்றன. இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam



    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைது செய்துள்ள பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒரேமுறை மட்டும் பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியிருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக பிபின் மருத்துவரிடம் தெரிவித்தார். மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதால், பிபின் வங்கியில் இருந்து பேசுவதை மருத்துவரிடம் நிரூபிக்க அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.



    மேலும், மருத்துவர் பயன்படுத்தும் வங்கி செயலியை மேம்படுத்த வங்கி சார்பில் அனுப்பப்படும் இணைய முகவரியை க்ளிக் செய்ய பிபின் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதை முழுமையாக நம்பிய மருத்துவர் பிபின் சொன்னதை போன்று அவன் அனுப்பிய இணைய முகவரியை க்ளிக் செய்தார்.

    இணைய முகவரியை க்ளிக் செய்ததும் மருத்துவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் தொகை எடுக்கப்பட்டு விட்டதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. பின் பிபினை தொடர்பு கொள்ள மருத்துவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவின.

    இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் துறை உதவியை நாடினார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் வங்கி கணக்கில் இருந்த தொகை மாற்றப்பட்ட வங்கி கணக்கு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவரை ஏமாற்றி அவரது பணத்தை பிபின் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
    இணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email



    இணைய உலகில் தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சுமார்  200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் களவாடப்பட்டது. இவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. எனினும், இது மிகப்பெரும் தகவல் திருட்டு சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்களது தகவல்கள் களவாடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான டிராய் ஹன்ட் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் களவாடப்பட்டு அவற்றின் பாஸ்வேர்டுகள் இணையத்தில் பரவி வருவதை அறிந்து தடுமாறியிருக்கிறார். முன்னதாக இவர் ஆதார் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

    இந்த தவறுகள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் வெளியாக செய்ததாக அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட தகவல்களில் இந்த விவரங்கள் 12,000 வெவ்வேறு ஃபைல்களாக சுமார் 87 ஜி.பி. அளவு சேமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார். 



    முன்னதாக அவர் தனது வலைபக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் இணையத்தில் வெளியான விவரங்கள் தற்சமயம் கிடைக்கிறதா என தெரியவில்லை. எனினும் அவை ஹேக்கர்களிடையே பிரபலமாக இருக்கும் இணைய முணையங்களில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஹன்ட் வெளியிட்ட தகவல்களில் சுமார் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் தகவல் திருட்டு மூலம் வெளியாகி இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல்கள் HIBP (Have I Been Pwned) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீங்களும் உங்களது மின்னஞ்சல் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என இந்த வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு https://haveibeenpwned.com வலைதளம் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். 

    இதேபோன்று பாஸ்வேர்டு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள https://haveibeenpwned.com/Passwords வலைதளத்தை பயன்படுத்தலாம். 



    மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்? 

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் படி உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்டதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    - உடனடியாக மின்னஞ்சல் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். 

    - டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-Factor Authentication) வசதியை அனைத்து சேவைகளிலும் செயல்படுத்த வேண்டும். 

    - குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் வழங்கியிருந்த அனுமதிகளை திரும்ப பெற வேண்டும்.

    நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். சில சேவைகளில் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்தாலும் இவ்வாறு செய்ய வேண்டும். வெவ்வேறு சேவைகளுக்கென தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க முடியும்.
    பத்திரப்பதிவு துறையில் ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் இ-மெயில் மூலம் பத்திர நகல்கள், பதிவு கட்டணம் செலுத்தும் முறையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    பத்திர பதிவுத்துறையில் அலுவலகத்திற்குச் சென்று வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் பெறும் வசதி உள்ளது.

    தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான “ஸ்டார் 2.0” திட்டத்தின் கீழ், பதிவுத் துறையில் வீட்டிலிருந்த படியே இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை இணைய தளம் வழியாகவே செலுத்தி விரைவுக் குறியீடு வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகலை தரவிறக்கம் செய்து கொள்ளும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    சான்றிதழில் அச்சிடப்பட்டிருக்கும் விரைவுக் குறியீட்டை ஒளிவருடல் செய்தால் சான்றிதழின் நகலினை மையக் கணினியிலிருந்து பார்வையிடலாம். இம்முறையில் சான்றிதழின் உண்மைத் தன்மையை எவரும் அறிந்து கொள்ளலாம். இந்த சான்றிதழ்கள், பதிவு விதிகள் படி வழங்கப்படுவதால் உரிய சட்ட அங்கீகாரமும் பெற்றுள்ளது.

    இந்த புதிய வசதியால், பொதுமக்கள் வில்லங்கச் சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்படும்.

    தற்போது நடைமுறையில் உள்ள பதிவுத்துறைக்கான கட்டணங்களை 11 வங்கிகளின் இணையவழி மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக, இந்திய நிதியமைப்புக்குட்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனை முறைகளிலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட புதிய இணையவழி கட்டணம் செலுத்தும் முறையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இப்புதிய முறையினால் 58 வங்கிகளின் வழியே இணைய வங்கி சேவை நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ஒருங்கிணைந்த கட்டண முகப்பு ஆகிய அனைத்து வழிகளிலும் பதிவுத்துறைக்கான கட்டணத்தை பொது மக்கள் செலுத்தலாம்.

    பதிவுப் பணிகள் நிறைவடைந்து ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒளிவருடல் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணத்தை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் புதிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இப்புதிய வசதியினால் பொதுமக்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற்றுச் செல்ல தாமதமாகும் தருணங்களில் ஒளிவருடல் செய்யப்பட்டு தங்கள் மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட ஆவண பிம்பங்களை தங்களின் உடனடி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், சீட்டுப் பதிவு மற்றும் சங்கப் பதிவுக்கான மென்பொருள் மேம்படுத்தப்பட்டு ஸ்டார் 2.0 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மை நிறுவனப் பதிவுக்கு புதிதாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து நகல்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற சீட்டுக்கள், சங்கங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன், இந்து திருமணப் பதிவு சட்டம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், தனி திருமணப் பதிவுச் சட்டம், கிறிஸ்துவ திருமணப் பதிவுச் சட்டம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஸ்டார் 2.0 மென் பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து சான்றிதழ்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற திருமணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பனந்தாளில் 57 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், படப்பை மற்றும் உறையூரில் தலா 80 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 5 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பாலங்களை திறந்து வைத்தார்.


    தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகளை தொய்வின்றி செயல்படுத்திடவும், தொழில் முனைவோருக்கு வழங்கும் சேவையினை மேம்படுத்திடவும், இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, 12 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம் மற்றும் மின்) பணியிடங்களுக்கு பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 உதவிப் பொறியாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 6 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்குகள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேளுக்குறிச்சி கிளை அலுவலகக் கட்டடம் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் சீர்காழி கிளை அலுவலகக் கட்டடம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உரக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  #TNCM #EdappadiPalaniswami
    மகாராஷ்ரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #DevendraFadnavis #Maoist
    மும்பை:

    சமீபத்தில் பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக வந்த தகவலை அடுத்து, நாடு முழுவதும், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது, அவர்கள் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பழி வாங்கும் விதமாக, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    2 இ-மெயில்களில் வந்த கொலை மிரட்டலை அடுத்து, முதல்மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில், சிலரை கொலை செய்வதன் மூலம் எங்கள் சிந்தனையை அழிக்க முடியாது. கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதற்கு கணக்கு தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இரண்டு இ-மெயில்களின் நகலை காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும், காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். #DevendraFadnavis #Maoist
    ஜிமெயில் சேவையின் பாதுகாப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு கூகுள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு செயலிகளின் ஊழியர்களால் பயனரின் மின்னஞ்சல்களை படிக்க முடியும் என்ற சர்ச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், கூகுள் சார்பில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த பதில் கூகுள் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் தரப்பு செயலிகள் சார்பில் கேட்கப்படும் தகவல்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அவசியமானது தானா என்றும், அவை சரியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை கூகுள் மிகவும் கண்டிப்புடன் கண்கானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் மென்பொருள் உருவாக்குவோரில் நூற்றுக்கணக்கானோர் மூன்றாம் தரப்பு ஜிமெயில் செயலிகளின் மூலம் பயனரின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் டெவலப்பர்களின் பணியாளர்கள் ஜிமெயில் பயனர்களின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை இயக்க வசதி பெற்றிருந்தனர் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    நிறுவனங்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் ரிட்டன் பாத் எனும் விளம்பர நிறுவனம் தனது பணியாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் 8000 பயனர் மின்னஞ்சல்களை வாசிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவன மென்பொருள்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டது.

    இதே வலைப்பதிவில் கூகுள் பயனரின் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. இதில் விளம்பரங்களை வழங்குவதற்கு என பயனர் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்யும் வழக்கத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் சில தானியங்கி வழிமுறைகளால் பலர் 'கூகுள் உங்களின் மின்னஞ்சல்களை வாசிக்கிறது' என தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "உண்மையில் கூகுள் தரப்பில் யாரும் உங்களது மின்னஞ்சல்களை வாசிப்பதில்லை, எனினும் பயனர் சார்பில் பிரத்யேக சூழல்களில் முறையான அனுமதி பெறப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என கூகுள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது."
    நிரவ் மோடிக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் குஜராத் கோர்ட்டு பிறப்பித்த கைது வாரண்டை இ-மெயில் மூலம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவருக்கு அனுப்பி வைத்தனர். #NiravModi #Email #PNBBank
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி நிரவ் மோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ.) கண்டறிந்தது. அதாவது விலை உயர்ந்த வைரம் மற்றும் முத்துக்கள் இறக்குமதி மூலம் ரூ.52 கோடி அளவுக்கு அவர் சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.



    எனவே இது தொடர்பாக நிரவ் மோடி மற்றும் குஜராத்தின் சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அவரது 3 நிறுவனங்கள் மீது வருவாய் புலனாய்வுத்துறை அமைப்பு அதிகாரிகள் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும், நிரவ் மோடி ஆஜராகவில்லை.

    எனவே அவருக்கு எதிராக சூரத் கோர்ட்டு சமீபத்தில் கைது வாரண்டு பிறப்பித்தது. இந்த வாரண்டை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் இ-மெயில் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    இதற்கிடையே தப்பி ஓடிய நிரவ் மோடி, லண்டனில் உள்ள அவரது நகைக்கடை மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது குறித்து தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓல்டு பாண்ட் தெருவில் உள்ள ‘நிரவ் மோடி’ என்ற அவரது கடையின் மாடியில்தான் அவர் வசித்து வந்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ததற்கு பின்னர் கூட, இங்கிலாந்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் குறைந்தபட்சம் 4 முறை சென்று வந்திருப்பதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.   #NiravModi #Email #PNBBank
    ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. 

    சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.

    இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க '@' குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் '+' குறியீடு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம். 

    பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


    கோப்பு படம்

    சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும். 

    புதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

    உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    கூகுளின் ஜிமெயில் தளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    கூகுளின் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    புதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜிமெயில் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். இதனால் மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுதல் மற்றும் ஆர்சிவ் போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.



    இந்த அம்சத்தை பயன்படுத்த க்ரோம் பிரவுசர் 61 வெர்ஷன் தேவைப்படுகிறது. ஜிமெயிலில் ஆஃப்லைன் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே காணலாம்..,

    வழிமுறை 1: கூகுள் க்ரோம் வெர்ஷன் 61 டவுன்லோடு செய்யவும்.

    வழிமுறை 2: ஜிமெயிலில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.

    வழிமுறை 3: டிராப்-டவுன் மெனுவில் செட்டிங்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்யவும்

    வழிமுறை 4: மெனு பாரில் காணப்படும் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 5: இனி எனேபிள் ஆஃப்லைன் மெயில் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    வழிமுறை 6: உங்களது தேவைக்கு ஏற்ப செட்டிங்-களை மாற்றியமைக்கலாம்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை செயல்படுத்தியதும், ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த துவங்கலாம்.

    ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்யும் போதே வாக்கியங்களை முழுமை செய்ய கூகுள் பரிந்துரைக்கும். இதை கொண்டு முழுமையாக டைப் செய்யாமல் டேப் பட்டனை க்ளிக் செய்து மிக எளிமையாக மின்னஞ்சலை டைப் செய்யலாம்.
    ×