search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gmail"

    • கூகுள் அக்கவுண்ட் மற்றும் அதன் தரவுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும்.
    • இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம்.

    ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

    "எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்," என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?

    கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும். சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.

    • பாதுகாப்பு ஆய்வாளரான க்ரிஸ் ப்ளூமர் ஜிமெயிலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்துள்ளார்.
    • கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விரைந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறது.

    ஜிமெயில் பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சமாக விளங்கும் வகையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் புளூ வெரிஃபைடு (verified) செக்மார்க் வழங்கியது. இந்த அம்சத்தின் மூலம் ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோர், உண்மையான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் இமெயில்களிடையே வித்தியாசத்தை உணர முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    எத்தகைய பாதுகாப்பிலும், சிறு ஓட்டை இருக்கத் தான் செய்யும் என்ற வகையில் தற்போது ஜிமெயிலின் புதிய அம்சத்திற்கும் ஏமாற்றும் பேர்வழிகள் குறைபாட்டை உருவாக்கியுள்ளனர். க்ரிஸ் ப்ளூமர் என்ற பாதுகாப்பு ஆய்வாளர் ஜிமெயில் சேவையில் ஏற்பட்டு இருக்கும் பாதுகாப்பு குறைபாடை கண்டறிந்து, தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த குறைபாடு கூகுளின் அதிகாரப்பூர்வ வெரிஃபிகேஷனில் மாதிரியை உருவாக்கி, பயனர்களை குறிப்பிட்ட இமெயில் நம்பகத்தன்மை கொண்டது என்று நம்ப வைப்பதாக க்ரிஸ் ப்ளூமர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே தகவலை க்ரிஸ் ப்ளூமர் கூகுள் நிறுவனத்திற்கும் தெரிவித்து இருந்தார். எனினும், இது வேண்டுமென்றே கூறப்படும் குற்றச்சாட்டு என்ற பதில் அளித்த கூகுள், இது பற்றி விசாரிக்க போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறது.

    பிறகு, இதுபற்றிய தகவல்களை க்ரிஸ் ப்ளூமர் டுவிட்டர் பதிவில் வெளியிட்டார். இவரது டுவிட்டர் பதிவு வேகமாக பரவியதை அடுத்து, கூகுள் நிறுவனம் இந்த குறைபாடு பற்றி விசாரணை நடத்துவதாக தெரிவித்து இருக்கிறது. இது குறித்து கூகுள் செக்யுரிட்டி குழு கூறியதாவது..,

    "கூர்ந்து கவனித்ததில் இந்த குறைபாடு வழக்கமான SPF பாதிப்பாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்டோம். இதன் காரணமாக இந்த குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது."

    "குழப்பத்திற்காக நாங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது முந்தைய பதில் உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று புரிந்து கொள்கிறோம். என்ற போதிலும், இந்த விவகாரத்தில் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இது பற்றிய ஆய்வு மற்றும் எதிர்கால அப்டேட் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    • இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.

    இணைய வசதியே இல்லாமல் இனி ஜிமெயில் மெசேஜ்களை அனுப்ப முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். இதுகுறித்து கூகுள் சப்போர்ட் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இனி இணைய வசதி இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தின் மூலம் ஜிமெயில் மெசேஜ்களை படிக்கவும்., பதில் அனுப்பவும் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்த, முதலில் கூகுள் குரோம் பிரவுசரை டவுன்லோடு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த அம்சம் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் குரோமிலும் Incognito mode-ல் இந்த அம்சம் இயங்காதாம்.


    முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸை ஓபன் பண்ண வேண்டும். அடுத்து அதில் உள்ள 'Enable offline mail' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன்பின்னர் எத்தனை நாட்களுக்கான ஜிமெயில் மெசேஜ்களை sync செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் 'Save changes' ஆப்ஷனை க்ளிக் செய்த பின் ஜிமெயில் மெசேஜ்களை இணைய சேவை இன்றி பயன்படுத்தலாம்.

    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    கூகுளின் ஜிமெயில் ஐ.ஓ.எஸ். தளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. #Gmail



    கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப் மூலம் இயக்கலாம். இந்த அம்சம் கொண்டு பல்வேறு அம்சங்களை மிக எளிமையாக ஸ்வைப் செய்தே இயக்க முடியும்.



    பயனர்கள் ஸ்வைப் அம்சத்தை இயக்க ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும் இதே அம்சங்களை கொண்டு நோட்டிஃபிகேஷன்களையும் இயக்கலாம். உதாரணத்திற்கு மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய ஜிமெயில் ஐ.ஓ.எஸ். நோட்டிஃபிகேஷனை அழுத்திப் பிடித்து ஸ்னூஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது எதுவரை மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய வேண்டும் என்பதை தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் புதிய அம்சங்களுடன் அட்டாச்மென்ட் க்விக் வியூ, அக்கவுண்ட்களிடையே ஸ்விட்ச் செய்தல் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளன. 
    இணையதள தகவல் பரிமாற்ற முறைகளில் பிரபலமானதாக இருக்கும் மின்னஞ்சல் சேவையில் உங்களது இமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி என பார்ப்போம். #Email



    இணைய உலகில் தகவல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வரும் ஒன்றாகி விட்டது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சுமார்  200 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் களவாடப்பட்டது. இவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக கண்டறியப்பட்டது. எனினும், இது மிகப்பெரும் தகவல் திருட்டு சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உங்களது தகவல்கள் களவாடப்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான டிராய் ஹன்ட் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் களவாடப்பட்டு அவற்றின் பாஸ்வேர்டுகள் இணையத்தில் பரவி வருவதை அறிந்து தடுமாறியிருக்கிறார். முன்னதாக இவர் ஆதார் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 

    இந்த தவறுகள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டுகள் வெளியாக செய்ததாக அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட தகவல்களில் இந்த விவரங்கள் 12,000 வெவ்வேறு ஃபைல்களாக சுமார் 87 ஜி.பி. அளவு சேமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார். 



    முன்னதாக அவர் தனது வலைபக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் இணையத்தில் வெளியான விவரங்கள் தற்சமயம் கிடைக்கிறதா என தெரியவில்லை. எனினும் அவை ஹேக்கர்களிடையே பிரபலமாக இருக்கும் இணைய முணையங்களில் கிடைப்பதாக அவர் தெரிவித்தார். ஹன்ட் வெளியிட்ட தகவல்களில் சுமார் 200 கோடி மின்னஞ்சல் விவரங்கள் தகவல் திருட்டு மூலம் வெளியாகி இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மேலும் அவற்றில் வெறும் 70 கோடி மின்னஞ்சல்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தது என அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல்கள் HIBP (Have I Been Pwned) வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நீங்களும் உங்களது மின்னஞ்சல் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என இந்த வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்கு https://haveibeenpwned.com வலைதளம் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். 

    இதேபோன்று பாஸ்வேர்டு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள https://haveibeenpwned.com/Passwords வலைதளத்தை பயன்படுத்தலாம். 



    மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்? 

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின் படி உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு வெளியாகி இருப்பதை அறிந்து கொண்டதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    - உடனடியாக மின்னஞ்சல் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். 

    - டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-Factor Authentication) வசதியை அனைத்து சேவைகளிலும் செயல்படுத்த வேண்டும். 

    - குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் வழங்கியிருந்த அனுமதிகளை திரும்ப பெற வேண்டும்.

    நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். சில சேவைகளில் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்தாலும் இவ்வாறு செய்ய வேண்டும். வெவ்வேறு சேவைகளுக்கென தனித்தனி பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க முடியும்.
    ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் போஸ்ட்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் கமென்ட்கள் பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட போஸ்ட்களின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும், பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

    தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜிமெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை போன்றதாகும், எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.



    நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் ஃபேஸ்புக் பரிந்துரை செய்திருக்கும் கமென்ட்கள் சிறியதாக இருந்தாலும், அவை சீராக வேலை செய்வதாகவே தெரிகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

    சமீபத்தில் ஃபேஸ்புக் தளத்தில் யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறோம் என பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
    கூகுளின் ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Gmail #Apps


    கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் தளத்தில் புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை டெஸ்க்டாப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அம்சம் ஆன்ட்ராய்டு தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    சர்வெர் சைடு அப்டேட் என்பதால் புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும். ஜிமெயில் அல்லாத அக்கவுனட்களில் மின்னஞ்சலை திறக்க பிரத்யேக லின்க் அனுப்பப்படும்.

    ஜிமெயில் பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் வழக்கமான மின்னஞ்சல்களை போன்றே வரும். கான்ஃபிடென்ஷியல் மோட் பயன்படுத்த மின்னஞ்சலை கம்போஸ் செய்து மேலே காணப்படும் மெனுவில் உள்ள புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ஜிமெயில் சார்பில் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, மின்னஞ்சலை இயக்க பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டுமா என்றும் கோரும். கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால் வேலை முடிந்தது. மின்னஞ்சலை அனுப்பியதும் அதனை மாற்ற முடியாது. 
    கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆன்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. #Gmail


    ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதுவரை பயனர்கள் மின்னஞ்சல் ஷெட்யூல் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய அம்சம் பலருக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

    மொபைலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதால், இதே அம்சம் இணையத்திற்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிமெயில் மொபைல் செயலியின் கம்போஸ் ஆப்ஷனின் அருகில் உள்ள ஷெட்யூல் சென்ட் எனும் அம்சம் புதிதாக சேர்க்கப்படுகிறது.

    ஷெட்யூல் செய்யும் அம்சம் மொபைல் மற்றும் இணைய பதிப்புகளுக்கு ஒரே சமயத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஷெட்யூல் இ-மெயில் அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்து, அதன் பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவை தானாக செல்லும் படி இருக்கும்.

    ஜிமெயிலின் புதிய செயலியை ஏ.பி.கே. வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவசரம் இல்லை என்பவர்கள் பிளே ஸ்டோரில் அப்டேட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம். #Gmail #Apps
    ஜிமெயில் சேவையின் பாதுகாப்பு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு கூகுள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு செயலிகளின் ஊழியர்களால் பயனரின் மின்னஞ்சல்களை படிக்க முடியும் என்ற சர்ச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், கூகுள் சார்பில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த பதில் கூகுள் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மூன்றாம் தரப்பு செயலிகள் சார்பில் கேட்கப்படும் தகவல்கள் பெரும்பாலும், அவர்களுக்கு அவசியமானது தானா என்றும், அவை சரியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதை கூகுள் மிகவும் கண்டிப்புடன் கண்கானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்களில் மென்பொருள் உருவாக்குவோரில் நூற்றுக்கணக்கானோர் மூன்றாம் தரப்பு ஜிமெயில் செயலிகளின் மூலம் பயனரின் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் டெவலப்பர்களின் பணியாளர்கள் ஜிமெயில் பயனர்களின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை இயக்க வசதி பெற்றிருந்தனர் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    நிறுவனங்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் ரிட்டன் பாத் எனும் விளம்பர நிறுவனம் தனது பணியாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன் 8000 பயனர் மின்னஞ்சல்களை வாசிக்க அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்நிறுவன மென்பொருள்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டது.

    இதே வலைப்பதிவில் கூகுள் பயனரின் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. இதில் விளம்பரங்களை வழங்குவதற்கு என பயனர் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்யும் வழக்கத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் சில தானியங்கி வழிமுறைகளால் பலர் 'கூகுள் உங்களின் மின்னஞ்சல்களை வாசிக்கிறது' என தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "உண்மையில் கூகுள் தரப்பில் யாரும் உங்களது மின்னஞ்சல்களை வாசிப்பதில்லை, எனினும் பயனர் சார்பில் பிரத்யேக சூழல்களில் முறையான அனுமதி பெறப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என கூகுள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது."
    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியின் புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.


    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியில் கூகுள் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் வழிமுறையை மாற்றியிருக்கிறது.

    ஜிமெயில் இன்பாக்ஸ்-இல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை பெறும் போது, அதனை செயலி சரியாக கண்டறிந்து கொள்ளும். ஜிமெயிலின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீங்கள் முதலில் படிக்க விரும்பும் மின்னஞ்சல்களை கண்டறியும்.

    புதிய அம்சத்தை செயல்படுத்த ஐஓஎஸ் தளத்தின் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் மெனு -- நோட்டிஃபிகேஷன் -- ஹை ப்ரியாரிட்டி ஒன்லி (ஏettings menu -- Notifications -- High priority only) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 



    முதற்கட்டமாக இந்த அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது டீஃபால்ட் அம்சம் கிடையாது என்பதால், பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மெனு சென்று தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும் என கூகுள் தெரிவித்துள்ளது.
    ஜிமெயில் ஆன்டராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. 

    ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். 

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் வழக்கமாக இருபுறமும் ஸ்வைப் செய்தால் மின்னஞ்சல்கள் ஆர்ச்சிவ் செய்யப்படும். ஆன்ட்ராய்டு போலீஸ் மூலம் முதலில் கண்டறியப்பட்ட இந்த அம்சம் மே 30-ம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய அப்டேட் மூலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய அம்சத்தை இயக்க ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் -- ஜெனரல் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களில் ஆர்ச்சிவ், டெலீட், மார்க் ஆஸ் ரீட்/ அன்ரீட், மூவ் டூ மற்றும் ஸ்னூஸ் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    புதிய அப்டேட் மூலம் ஜிமெயில் இந்த அம்சத்தை அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஜிமெயில் தளத்தில் மிகப்பெரிய அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இதே அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் ஷார்ட்கட்கள், ஸ்மார்ட் ரிப்ளை, கான்ஃபிடென்ஷியல் மோட் மற்றும் நேட்டிவ் ஆஃப்லைன் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது.
    ×