search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு IAMAI எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.
    இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்திய இணைய பாதுகாப்பு விதிகள் "நம்பிக்கையை விட அச்சத்தின் சூழலை" உருவாக்கும், உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது, விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒரு வருட தாமதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பேஸ்புக், கூகுள் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI), இந்த வாரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு குறித்த உத்தரவை விமர்சித்துள்ளது.

    cyber

    மற்ற மாற்றங்களுக்கிடையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) உத்தரவின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்களைக் கவனித்த ஆறு மணி நேரத்திற்குள் தரவு மீறல்களைப் புகாரளிக்க வேண்டும் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஐடி மற்றும் தகவல் தொடர்பு பதிவுகளை பராமரிக்க வேண்டும் என அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை 72 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT), அமேசான் மற்றும் மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) போன்ற கிளவுட் சேவை வழங்குநர்களை, நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் IP முகவரிகளைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய உத்தரவுகள் "பெரிய" பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்ப்ட்டு உள்ளது.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் புது வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு மாடலின் வெளியீடு இந்த ஆண்டு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அளவில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z போல்டு 3 மாடலின் அளவில் இருக்கும் என்றும் இதில் LTPO மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் அதிகபட்சம் 120Hz வரை வழங்கப்படும் என தெரிகிறது. 

     மடிக்கக்கூடிய பிக்சல் போன்

    கூகுள் பிக்சல் போன் மாடலில் 7.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த மாதிரியாக மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் செங்குத்தாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 12L ஓ.எஸ்-ஐ வெளியிட்டது. இது டேப்லெட், மடிக்கக்கூடிய மற்றும் குரோம் ஓ.எஸ். சாதனங்களுக்காக ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் கொண்டிருக்கிறது. 
    ×