search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.6"

    • மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதேபோல் மழை பொழிவு இல்லாததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நேற்று பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 2,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி யாக இன்று பவானி சாகர் அணைக்கு மேலும் வினாடிக்கு 6,659 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்து ள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.34 அடியாக உயர்ந்து உள்ளது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 6,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பி டிப்பு பகுதியில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியே ற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.

    கடந்த 2 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • குருப் 4 தேர்விற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,026 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தா ல்நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றாக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-4 தேர்வு 93 தேர்வு மையங்களில் 143 தேர்வு அறைகளில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 42,600 நபர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 36,574 ேபர் மட்டும் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 6,026 பேர் தேர்விற்கு வரவில்லை.

    மேலும் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு மற்றும் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகளுடன் தேர்வு நடைப்பெற்றது.

    தேர்வுக்கு 7 பறக்கும்படை, 5 நபர்கள் கொண்ட 32 சுற்று குழுக்கள் கண்காணிப்பு பணிகளிலும், 180 காவலர்கள் பாதுகாப்பு பணிகளிலும்வி ண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் 93 தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாகசிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஐயபிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • 30 கி.மீ. வேகத்துக்கு மேல் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பட்டது.
    • 1,411 வாகன உரிமையாளர்கள் 8 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம்,தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. அதனால் விபத்தை தடுக்க வளைவு பகுதிகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி வேகமாக வாகனங்கள் செல்கிறது.

    தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொப்பூர் மலைபாதை இறக்கம் என்பதால் வாகனங்களை டிரைவர்கள் வேகமாக இயக்குகிறார்கள்.

    இதனால் அடிக்கடி லாரிகள் விபத்தில் சிக்குகின்றன. அதிலும் பெரும்பாலும் கனரக வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றன.

    இதனை தடுக்க 30 கி.மீ. வேகத்துக்கு மேல் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பட்டது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை யில் விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி தருமபுரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக, மலைப்பாதை யான வெள்ளக்கல்லில் இருந்து தொப்பூர் வரை 30 கி.மீட்டருக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் வகையில் அப்பகுதியில் ஸ்பீடு ரேடர்கள் கடந்த, 2021 ‌ஜூன் 20-ல் அமைக்கப்பட்டது.

    இதன் மூலம் 2022 ஜூன் 30 வரை இப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் அதிவேகமாக சென்ற 6,693 வாகனங்களுக்கு இ-செலான் மூலம் 40 லட்சத்து 60 ஆயிரத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதில் 1,411 வாகன உரிமையாளர்கள் 8 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர்.

    அபராத தொகையை செலுத்தா விட்டால் தங்களது பகுதியிலுள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களு க்கு செல்லும் போது கூடுதல் அபராதத்துடன் தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாகனங்களை இயக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 13 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    அதேபோல் தற்போது ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ரூ.6,498 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நிரவ் மோடி உள்பட 24 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #PNBCase #NiravModi #EDFile

    மும்பை:

    லட்சுமி விலாஸ் வங்கி அளித்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிய வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.


    உத்தரவாத கடிதங்கள் மூலம், நிரவ் மோடி பெற்ற ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன்தொகையை அவர் வெளிநாட்டில் போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.இந்த வழக்கில், அமலாக்கத்துறை நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது, 12 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை ஆகும்.

    நிரவ் மோடி, அவருடைய தந்தை, சகோதரர், சகோதரி, மைத்துனர் உள்பட 24 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கோர்ட்டு விரைவில் ஆய்வு செய்யும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PNBCase #NiravModi #EDFile


    ×