search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9"

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9,600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடுகிறது.

    • நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணை க்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியி லேயே நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. நேற்று அணைக்கு வினா டிக்கு 6,800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று மீண்டும் நீர்வரத்து அதிக ரித்து 9,800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 9,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    • ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர்.
    • வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்த னர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு– 4, நம்பியூர் யூனியன் கெட்டி செவியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்– 4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்– 11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 1, புஞ்சைளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்– 3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண் –2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இதுதவிர அம்மா பேட்டை யூனியன் சிங்கம் பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2-ல் 2 பேர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்– 3-ல் 2 பேர், கோபிசெட்டி பாளையம் யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண் –1-ல் 2 பேர்,

    மொடக்குறிச்சி யூனியன் 46 புதூர் பஞ்சாயத்து வார்டு எண்– 1-ல் 4 பேர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3-ல் 3 பேர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்– 2-ல் 3 பேர் என 7 பதவிக்கு 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த பகுதியில் வருகின்ற 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    ×