search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahindra"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவன எஸ்.யு.வி.க்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக XUV400, XUV300 மற்றும் பொலிரோ நியோ காம்பேக்ட் எஸ்.யு.வி., மராசோ எம்.பி.வி. மற்றும் பொலிரோ எஸ்.யு.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி மற்றும் அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.

    நவம்பர் மாதத்திற்கு மஹிந்திரா XUV400 மாடல் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. இது டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே பொருந்தும். இதன் EL வேரியண்டிற்கு ரூ. 3 லட்சம் வரையிலான தள்ளுபடியும், EC வேரியண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதே போன்று XUV300 மாடலுக்கு ரூ. 1.2 லட்சமும், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிரத்து 300, பொலிரோ மாடலுக்கு ரூ. 70 ஆயிரமும், பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை காரின் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடும். இத்துடன் ஒவ்வொரு நகரம் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப சலுகைகளிலும் வேறுபாடு இருக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
    • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2023 மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் 80 ஆயிரத்து 679 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.

    இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக மஹிந்திரா நிறுவனம் எஸ்.யு.வி. விற்பனையில் சாதனை படைத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் 43 ஆயிரத்து 708 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது விற்பனையில் 36 சதவீதம் அதிகம் ஆகும்.

     

    ஏற்றுமதியை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை 556 ஆக இருந்தது. மஹிந்திராவின் வர்த்தக பிரிவு வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 25 ஆயிரத்து 715 ஆக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று பயணிகள் வாகன பிரிவிலும் மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    வருடாந்திர அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 622 பயணிகள் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகி வரும் பொலிரோ நியோ மாடல் விலையை மாற்றுகிறது. நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலின் விலை தற்போது ரூ. 1,505 வரை அதிகரித்து இருக்கிறது.

    புதிய விலை விவரம்:

    மஹிந்திரா பொலிரோ நியோ N4 ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்து 300

    மஹிந்திரா பொலிரோ நியோ N8 ரூ. 10 லட்சத்து 16 ஆயிரத்து 500

    மஹிந்திரா பொலிரோ நியோ N10 ரூ. 11 லட்சத்து 37 ஆயிரத்து 499

    மஹிந்திரா பொலிரோ நியோ N10 (O) ரூ. 12 லட்சத்து 15 ஆயிரத்து 499

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் பி.எஸ். 6-2 விதிகளுக்கு பொருந்தும் வகையிலான டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா தார், ஸ்கார்பியோ N, XUV700 போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
    • மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிபம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சலுகை மற்றும் தள்ளுபடிகள் XUV400, மராசோ, XUV300, பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. தார், ஸ்கார்பியோ N, XUV700 போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

    சலுகைகளின் படி XUV400 மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் EC மற்றும் EL என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 மற்றும் 456 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இவற்றின் முன்புறம் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 150 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     

    மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 123 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV300 மாடலுக்கு வேரியண்ட்களை பொருத்து ரூ. 46 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 71 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா நிறுவனம் 2026 ஆண்டு வாக்கில் ஐந்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் ஐந்து புதிய எலெக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

    மஹிந்திரா நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவை XUV.e8, XUV.e9, BE.05, BE Rall-E மற்றும் BE.07 பெயர்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதில் முதல் மாடல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரில், XUV.e9, BE.05 மற்றும் XUV.e8 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஃபிலஷ்-ஃபிட் டோர் ஹேண்டில்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. இத்துடன் BE.05 மற்றும் XUV.e9 கார்களில் எல்.இ.டி. லைட் பார் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது தார் மற்றும் ஸ்கார்பியோ சார்ந்த பிக்-அப் டிரக் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை காட்சிக்கு வைத்து இருந்தது. இவை தார்.இ மற்றும் குளோபல் பிக்-அப் என்று அழைக்கப்படுகின்றன. இதுதவிர மஹிந்திரா நிறுவனம் தனது தார் (5 கதவுகள் கொண்ட மாடல்) மற்றும் XUV300 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை டெஸ்டிங் செய்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • மஹிந்திராவின் ஐ.சி.இ. பிரான்டுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வடிவம் பெறுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் சுதந்திர தினத்தன்று ஸ்கார்பியோ N சார்ந்த பிக்கப் மாடல் மற்றும் எலெக்ட்ரிக் தார் கான்செப்ட் மாடல்களுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் தார், ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ போன்ற மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்து விட்டது.

    இதுதவிர மஹிந்திரா நிறுவனம் தனது பார்ன்-EV (பிறந்த-EV) எஸ்.யு.வி. மாடல்களுக்கென புதிய லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. மஹிந்தரா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிக்கர், "எங்களின் அனைத்து ஐ.சி. என்ஜின் பிரான்டுகளையும் எலெக்ட்ரிக் வடிவம் கொடுப்போம்," என்று தெரிவித்தார்.

     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ EV மாடல்களில் RWD செட்டப், டுவின் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ.e மாடலில் AWD வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்ற வெர்ஷன்கள் அனைத்தும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. இரண்டு எஸ்.யு.வி.-க்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N மற்றும் பொலிரோ போன்ற மாடல்கள் தொடர்ந்து ஐ.சி. என்ஜின் வடிவிலும் விற்பனை செய்யப்படும். இந்த மாடல்கள் இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டிக்கொடுக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடல் தற்போது ஐந்து வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய XUV300 மாடலின் W8 (O) AT வேரியன்ட் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை W2 மற்றும் W4 என்று அழைக்கப்படுகின்றன. புதிய மஹிந்திரா XUV300 மாடல்களின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகின்றன. புது வேரியன்ட்களின் மூலம் மஹிந்திரா XUV300 மாடல் W2, W4, W6, W8 மற்றும் W8 (ஆப்ஷனல்) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றில் மஹிந்திரா XUV300 மாடலின் W4 வேரியன்ட்-இல் சன்ரூஃப், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. W4 டர்போ ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த என்ஜின் 129 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும். முன்னதாக இந்த என்ஜின் W6 வேரியன்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போதைய புது வேரியன்ட்கள் மூலம் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் W8 (O) AT வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 59 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹிந்திரா தார்.இ மாடலின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • தார்.இ மாடலில் 60 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N சார்ந்த பிக்கப் டிரக் மாடலை ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய டீசரில் தார் எஸ்யுவி-யின் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் தார்.இ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.

    டீசரில் தார் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் மாடிஃபை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வெர்ஷனின் செங்குத்தாக இருக்கும் டெயில் லேம்ப், சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், தார்.இ பேட்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மஹிந்திரா BE Rall-E மாடலை போன்றே தார்.இ மாடலிலும் 60 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் தார்.இ மாடல் லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தார்.இ கான்செப்ட் மஹிந்திரா நிறுவனத்தின் INGLO ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    தார்.இ எலெக்ட்ரிக் மாடலில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற வெளிப்புற டிசைன், இன்டீரியர் வழங்கப்படுகிறது. புதிய தார்.இ மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் வெளியீடு 2025 வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். புதிய தார்.இ மாடல் ஹூண்டாய், கியா, மாருதி சுசுகி, ஹோண்டா, எம்ஜி மற்றும் டாடா நிறுவன எலெக்ட்ரிக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடலிலும் 2.2 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் சற்றே நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

    மஹந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ N எஸ்யுவி மாடலின் பிக்கப் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிய பிக்கப் டர்க் மாடலுக்கான டீசரை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    எனினும், இந்த மாடல் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் தான் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. Z121 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் சற்றே நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. புதிய பிக்கப் டிரக் 3000mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. வழக்கமான மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 2600mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.

     

    நீண்ட வீல்பேஸ் கொண்டிருப்பதால் ஸ்கார்பியோ N மாடலில் அதிக சுமையை ஏற்ற முடியும். ஸ்கார்பியோ N பிக்கப் டிர்க்-இல் இரட்டை கேபின் வெர்ஷனும் அறிமுகமாக இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. இந்த மாடலில் முற்றிலும் புதிய எல்இடி டெயில்லேம்ப், முன்புற கிரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த அம்சங்கள் அனைத்தும் ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடல் ஆடம்பர மாடல்கள் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. ஸ்கார்பியோ N பிக்கப் டிரக் மாடலிலும் 2.2 லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட, நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172.5 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மஹந்திரா XUV500 மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
    • ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV500 மாடலை 2011 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மஹிந்திரா உருவாக்கிய முதல் மோனோக் எஸ்யுவி மாடல் இது ஆகும். இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து, மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு மாற்றாக மஹிந்திரா XUV700 மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் XUV500 பிரான்டிங் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும், இதன் அடுத்த தலைமுறை மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது.

     

    அதிக பிரபலமாக இருந்த காரணத்தால், XUV500 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை உறுதிப்படுத்தும் தகவல்களும் இணையத்தில் வெளியானது. S301 குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    மேலும் இந்த காரின் ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. டாடா நிறுவனமும் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக புதிய கர்வ் மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஹூண்டாய் கிரெட்டா மாடல் மிகப்பெரும் அப்டேட் பெறும் என்று தெரிகிறது.

    இதனிடையே புதிய மஹிந்திரா XUV500 கூப் எஸ்யுவி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் புதிய கார் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதே போன்ற டிசைன் XUV ஏரோ கான்செப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இதன் டிசைன் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Photo Courtesy: DANGER B via Gaadiwaadi

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print