என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹிந்திரா"

    • BE6 கார் 6 வேரியண்ட்களும், XEV 9E கார் 5 வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன.
    • பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை அடங்கும்.

    மஹிந்திரா நிறுவனத்தின் XEV 9E, BE6 ஆகிய மின்சார கார்கள், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கார்களின் ஓராண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இந்த மாதத்துக்கான தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தக் கார்களுக்கு ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 7.2 கிலோ வாட் ஏசி பாஸ்ட் சார்ஜர், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.25 ஆயிரம், எக்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்பில், பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை இதில் அடங்கும். எனினும், குறிப்பிட்ட டீலர்கள் தரப்பில் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். அதிலும் முதல் 5 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை எனவும், டிசம்பர் 20-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம் எனவும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    BE6 கார் 6 வேரியண்ட்களும், XEV 9E கார் 5 வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன. BE6 ஆரம்பவிலை சுமார் ரூ.18.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் விலை ரூ.26.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். XEV 9E காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.21.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டாப் எண்ட் மாடல் ரூ.30.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    இந்த எலெக்ட்ரிக் கார்களை முழுமையாக சார்ஜ் செய்தால், வேரியண்ட்களுக்கு ஏற்ப 556 கிலோமீட்டர் (59 கிலோவாட் ஹவர் பேட்டரி) முதல் 682 கிலோமீட்டர் தூரம் (79 கிலோவாட் ஹவர் பேட்டரி) வரை செல்லலாம் என `ARAI' அமைப்பு சான்றளித்துள்ளது.

    • XUV 700 மாடல் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • புதிய XUV 700 மாடல் காரில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும்

    மஹிந்திரா நிறுவனம் XUV 700 மாடல் கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையொட்டி XUV700 Facelift காரை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த புதிய XUV 700 மாடல் காரில் பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், XUV700 என்ற பெயரை XUV7XO என மாற்றி வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் இருக்கும் என்றும் இந்த என்ஜின் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
    • உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள்- மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை 2026ஆம் ஆண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது சப்-4 மீட்டர் மாடல் வரிசையை விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் மாருதி சுசுகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட Fronx-ஐ ADAS சூட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய சப்-காம்பாக்ட் SUV (ஸ்கார்லெட் என்ற குறியீட்டுப் பெயர்) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    மஹிந்திரா & மஹிந்திரா விஷன் S கான்செப்ட்டின் உற்பத்திக்குத் தயாரான மாடலை அறிமுகப்படுத்தலாம். இது ஸ்கார்பியோ குடும்பத்திற்குள் நிலைநிறுத்தப்பட்ட ஒரு சப்-காம்பாக்ட் எஸ்யூவி-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் பேயோன் காம்பாக்ட் கிராஸ்ஓவர் வெளியீடும் 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாருதி Fronx ஃபேஸ்லிஃப்ட்

    புதுப்பிக்கப்பட்ட மாருதி Fronx பலமுறை சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்த காம்பாக்ட் கிராஸ்ஓவர் ADAS ஆப்ஷனுடன் வரும் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. இது சுசுகியின் அடுத்த தலைமுறை 48V சூப்பர் எனி-சார்ஜ் (SEC) ஹைப்ரிட் பவர்டிரெயினைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மாடலாகவும் இருக்கலாம்.



    டாடா ஸ்கார்லெட்

    வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், டாடா ஸ்கார்லெட் ஒரு மோனோ-கோக் சேசிஸை அடிப்படையாகக் கொண்டதாகவும், சியரா எஸ்யூவி-இல் இருந்து பல வடிவமைப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றன. ஸ்கார்லெட் மாடலில் டாடா கர்வ்-இல் உள்ள 1.2L மற்றும் நெக்சானின் 1.2L டர்போ பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படலாம்.

    மஹிந்திரா பேபி ஸ்கார்பியோ

    உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 2027 இல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும். இறுதி மாடல் அப்சைடு டவுன் L-வடிவ ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் அப்சைடு டவுன் L-வடிவ டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸ்கிரீன், 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்படலாம்.



    ஹூண்டாய் பேயோன்

    மாருதி Fronx மற்றும் டாடா பன்ச் ஆகியவற்றிற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பதிலாக பேயோன் காம்பாக்ட் கிராஸ்-ஓவர் இருக்கும். இது முற்றிலும் புதிய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1.2L TGDi பெட்ரோல் என்ஜினைக் கொண்ட முதல் ஹூண்டாய் கார் ஆக இருக்கும். இது கிரெட்டாவின் 1.5L டர்போ பெட்ரோல் என்ஜினை விட மிகவும் கச்சிதமான மற்றும் எரிபொருள் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    • இது ஏழு பேர் அமரக்கூடிய நிலையான இருக்கைகளுடன் வருகிறது.
    • இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட பொலிரோ மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இந்த புதுப்பிப்பு மாடலில் தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    2025 பொலேரோ மாடல் 1.5 லிட்டர் mHawk75 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 75bhp பவர் மற்றும் 210Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டாருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும், இது ஏழு பேர் அமரக்கூடிய நிலையான இருக்கைகளுடன் வருகிறது.

    வண்ணங்களைப் பொறுத்தவரை, புதிய பொலிரோ- டயமண்ட் ஒயிட், டிசாட் சில்வர், ராக்கி பெய்க் மற்றும் ஸ்டெல்த் பிளாக் என நான்கு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த கார் B4, B6, B6(O) மற்றும் B8 ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • தார் பேஸ்லிப்ட் முழுமையாக கருப்பு நிற கேபினை கொண்டுள்ளது.
    • இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.

    இந்தியாவில் மஹிந்திரா தார் 3 கதவு காரில், பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் ஓட்டுநர் வசதி அம்சங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. புதிய பாடி கலர் கிரில், மேம்படுத்தப்பட்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவை புதிய 3 கதவு தாரின் குறிப்பிடத்தக்க சிறப்புகளாகும்.

    மஹிந்திரா நிறுவனம் தாரின் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. மேட் பிளாக் மற்றும் சில்வர் அம்சங்களுடன் கூடிய டூயல்-டோன் பம்பர், புதுமையான முன்பக்க கிரில், 18 இன்ச் அலாய் வீல்கள் இவற்றுடன் பின்புறத்தில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வைப்பர் மற்றும் டி-ஃபாகர் போன்ற அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறங்களாக டாங்கோ ரெட் மற்றும் கிரே ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

    உட்புறத்தைப் பொறுத்தவரை, தார் பேஸ்லிப்ட் முழுமையாக கருப்பு நிற கேபினை கொண்டுள்ளது. 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் லாப் டைமர், ஆஃப்-ரோடு விவரங்கள் மற்றும் அடாப்டிவ் ரிவர்ஸ் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இதனுடன், புதிய அப்ஹோல்ஸ்டரி, ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய முன்பக்க ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கதவுகளில் பவர் விண்டோ கண்ட்ரோல்கள், எலெக்ட்ரிக் பவர் மூலமாக எரிபொருள் மூடியை திறக்கும் வசதி போன்ற வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

    புதிய தார் பேஸ்லிப்ட், 2.2 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என அதே என்ஜின் ஆப்ஷன்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. ஸ்டீயரிங் வீலில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை புதிய தார் பேஸ்லிப்ட்டின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

    பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், இ.பி.டி. உடன் ஏ.பி.எஸ்., எலெட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற டிஃபாகர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் பல வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.9.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
    • ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    மத்திய அரசு வசூலித்து வரும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 22-ந்தேதிக்கு பின் ஜி.எஸ்.டி. 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வரவிருக்கிறது. இதன் பிறகு, இந்தியாவில் சிறிய ரக கார்களின் விலை குறைய உள்ளது.

    ஜி.எஸ்.டி. மாற்றத்தின் படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளமும், 1200 சி.சி. பெட்ரோல் அல்லது 1500 சி.சி. டீசல் எஞ்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதனை காட்டிலும் குறைந்த சி.சி. எஞ்ஜின் கொண்ட பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.

    இந்நிலையில் ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பிற்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும், செயல்திறனுக்கும் பிரபலமான கார்கள், எவ்வளவு விலை குறைய இருக்கின்றன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    டாடா பன்ச்

    இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் பிரபலமான மைக்ரோ-எஸ்.யூ.வி. கார்களில் ஒன்று டாடா பன்ச். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜின் (87 எச்.பி.) இதில் உள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பிற்குபிறகு சுமார் ரூ. 85 ஆயிரம் வரை இந்த காரில் சலுகை கிடைக்கும். சிறிய அளவிலான இந்த எஸ்.யூ.வி. கார் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு ஆகும்.

    மாருதி சுசுகி வேகன்ஆர்

    இது குடும்பங்களிடையே மிகவும் பிரபலமான கார். எரிபொருள் சிக்கனத்திற்கு பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.57 ஆயிரம் வரை விலை குறைப்பை பெற இருக்கும் வேகன்ஆர் கார், அதிக இடவசதி மற்றும் மிகக் குறைந்த இயக்கச் செலவுகளை விரும்பும் பெரிய குடும்பங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.



    மஹிந்திரா XUV 3XO

    சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் காம்பாக்ட் எஸ்.யூ.வி. காரான இது, ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.40 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    மாருதி சுசுகி பலேனோ

    இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் உள்ளது. விசாலமான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினுக்கு இது பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை குறைய இருக்கிறது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் விசாலமான ஹேட்ச்பேக் கார் தேவைப்படும் குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    டாடா அல்ட்ரோஸ்

    குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற டாடா நிறுவனத்தின் மற்றொரு கார் அல்ட்ரோஸ். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பை பெற உள்ளது. பன்முக எஞ்ஜின் தேர்வுகள் கொண்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர்

    டாடா பன்ச்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்.யூ.வி. கார் இது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.89 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. நவீன அம்சங்கள் கொண்ட உயரமான எஸ்.யூ.வி. காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    மாருதி சுசுகி ஸ்விப்ட்

    இது ஹேட்ச்பேக் கார் பிரிவில் நீண்டகாலமாகவே பிரபலமான மாடலாகும். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.58,000 வரை ஸ்விப்ட் காரின் விலை குறைக்கப்பட உள்ளது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    டாடா டியாகோ

    பாதுகாப்பான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஜி.எஸ்.டி சலுகைக்கு பிறகு சுமார் ரூ.75 ஆயிரம் வரையில் டியாகோ காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் உறுதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான காரை தேடுபவர்களுக்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

    பிரீமியம் உணர்வையும், சவுகரியமான பயண அனுபவத்தையும் வழங்கும் இந்த காரில் 1.2 லிட்டர் காபா பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.74 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ஆடம்பரமான கேபின் உடன் மென்மையாக, நகரத்திற்குள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

    • மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் S மாடலுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
    • AX3 இன் மீதமுள்ள மாடல்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்போதுள்ள தயாரிப்பு மாடல்களின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க மஹிந்திரா முயற்சி செய்து வருகிறது. இதற்காக வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் பல புதிய கான்செப்ட் மாடல்களை வெளியிட உள்ளது.

    மஹிந்திரா தற்போது ஸ்கார்பியோ N, XUV700 மற்றும் பல மாடல்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இவை ஜூலை மாத இறுதி வரை வழங்கப்படும். இந்த சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை ஒவ்வொரு நகரம் மற்றும் டீலர்ஷிப்களைப் பொறுத்து மாறுபடலாம்.

    மஹிந்திரா ஸ்கார்பியோ:

    மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் S மாடலுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதே நேரத்தில் S11 வேரியண்டிற்கு ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளாக் எடிஷன் ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8 L மாடலுக்கு ரூ. 40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மலிவு விலை வேரியண்ட்களைத் தேடும் வாடிக்கையாளர்கள் Z4 மற்றும் Z6 வேரியண்ட்களில் ரூ. 30,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

    மஹிந்திரா XUV700:



    மஹிந்திரா XUV700 AX5 மற்றும் AX5 S வேரியண்ட்களுக்கு ஜூலை 2025 மாதத்தில் ரூ. 30,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், AX3 இன் மீதமுள்ள மாடல்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV400:

    மஹிந்திரா நிறுவனம் XUV400 மாடலுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. ஜூலை 2025 இல் மஹிந்திரா XUV400 EL Pro வேரியண்டிற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 2.5 லட்சம் வரையிலான சலுகைகளைப் பெறலாம்.

    மஹிந்திரா XUV 3XO:

    மஹிந்திரா XUV 3XO AX5 பெட்ரோல் மேனுவல் மற்றும் AX 5L வேரியண்ட்களுக்கு ரூ. 50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா XUV 3XO REVX வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்களைப் பெறுகிறது.
    • டூயல் டோன் பிளாக் லெதரெட் இருக்கைகளை கொண்டிருக்கிறது.

    மஹிந்திரா XUV 3XO REVX இந்தியாவில் ரூ.8.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சி-பிரிவு SUV இப்போது சில வடிவமைப்பு மாற்றங்களையும் அம்சங்களில் அப்டேட்களையும் பெற்றுள்ளது. மஹிந்திரா XUV 3XO REVX- REVX M, REVX M(O), மற்றும் REVX A என மூன்று வேரியண்ட்களைக் கொண்டுள்ளது.

    எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:

    மஹிந்திரா XUV 3XO REVX மாடல் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இதில் 110 hp பவரையும் 200 Nm டார்க்கையும் வழங்கும் 1.2L mStallion TCMPFi எஞ்சின் மற்றும் 131 hp மற்றும் 230 Nm ஐ வெளியேற்றும் 1.2L mStallion TGDi எஞ்சின் ஆகியவை அடங்கும்.

    வெளிப்புற அப்டேட்கள்:

    மஹிந்திரா XUV 3XO REVX வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்களைப் பெறுகிறது. இது டூயல் டோன் வண்ணங்களை தரநிலையாகப் பெறுகிறது. இது REVX பேட்ஜிங், டூயல் டோன் ரூஃப், பாடி நிறத்தால் ஆன / கன்மெட்டல் கிரில் மற்றும் R16 கருப்பு நிற வீல் கவர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய XUV 3XO REVX மாடல்கள் கிரே, டேங்கோ ரெட், நெபுலா புளூ, எவரெஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய ஐந்து கண்கவர் வண்ணங்களில் கிடைக்கின்றன.

    உட்புறம் மற்றும் அம்சங்கள்:

    மஹிந்திரா XUV 3Xo REVX காரின் உட்புறத்தில் 10.24-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்கில் ஆடியோ கண்ட்ரோல், ஓட்டுநர் இருக்கை உயரத்தை சரிசெய்யும் அம்சம் மற்றும் பலவற்றைப் பெறுகிறது. மேலும், டூயல் டோன் பிளாக் லெதரெட் இருக்கைகளை கொண்டிருக்கிறது.

    இது ஒரு அசத்தலான கேபின் அனுபவத்திற்காக 4-ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பைப் பெறுகிறது. ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோலுடன் கூடிய ESC (HHC) மற்றும் அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகளும் உட்பட 35 நிலையான அம்சங்களுடன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், REVX A ஆனது Adrenox Connect-ஐ ஒருங்கிணைக்கிறது. இதில் பில்ட்-இன் அலெக்சா, ஆன்லைன் நேவிகேஷன் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    மஹிந்திரா XUV 3XO REVX விலை

    மஹிந்திரா XUV 3XO REVX M காரின் விலை ரூ.8.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), REVX M (O) விலை ரூ.9.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), XUV 3XO REVX A விலை ரூ.11.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் அவற்றின் மையத்தில் செயல்திறன் மற்றும் வசதி இரண்டையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • வேகமான DC சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது வெறும் 20 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் பேட்டரி ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 மற்றும் XEV 9e மாடல்களில் 79 kWh பேட்டரி பேக்கை அறிமுகம் செய்தது. இரு எலெக்ட்ரிக் வாகனங்களின் Pack 2 டிரிமில் இந்த பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, இரண்டு எஸ்யூவி-களும் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நிறுவனம் கவனித்த நுகர்வோர் தேவை முறையில் வேரூன்றியதாகத் தெரிகிறது.

    சமீபத்தில் மஹந்திரா வெளியிட்ட தகவல்களில் இந்த கார்களுக்கான மொத்த முன்பதிவுகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை விலை உயர்ந்த Pack 3 வேரியண்ட்களுக்கானவை என்று நிறுவனம் அறிவித்தது.

    79 kWh பேட்டரி பேக் கொண்ட மஹிந்திரா BE 6 Pack 2 மாடலின் விலை ரூ.23.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதன் மூலம் இந்த விருப்பத்திற்கான விலை ரூ.26.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து குறைகிறது. இதேபோல், XEV 9e-க்கு, 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் தற்போது ரூ. 24.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 79 kWh பேட்டரி பேக் கொண்ட இந்த வேரியண்ட் 500 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குவதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 59 kWh வெர்ஷன் 400 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது.

    Pack 2-வில் உள்ள இரண்டு மாடல்களும் டால்பி அட்மாஸ் கொண்ட ஹர்மன் கார்டன் 16-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஃபுல் கிளாஸ் ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS திறன் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் அவற்றின் மையத்தில் செயல்திறன் மற்றும் வசதி இரண்டையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

    புதிய 79 kWh வேரியண்டில் 210 kW சக்தியும், 59 kWh பதிப்பில் 170 kW சக்தியும், பூஸ்ட் மோட் உட்பட பல டிரைவிங் மோட்களுடன் வருகின்றன. இவை ஒரு அற்புதமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றன. மேலும், BE 6 மற்றும் XEV 9e Pack 2 மாடல்கள் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. வேகமான DC சார்ஜர்களைப் பயன்படுத்தும் போது வெறும் 20 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் பேட்டரி ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

    • கேபினின் உணர்வை மேம்படுத்த பிராண்ட் ஒரு பனோரமிக் சன்ரூஃப்பைச் சேர்க்க வாய்ப்புள்ளது.
    • 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் MT மற்றும் AT ஆப்ஷன்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் ஸ்கார்பியோ N மாடலை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், இந்த எஸ்யூவி பல்வேறு புதுப்பிப்புகள் மற்றும் வெர்ஷன்களைப் பெற்றுள்ளது. புதிய அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் எஸ்யூவியை மேலும் புதுப்பிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எஸ்யூவி-யின் புதுப்பிக்கப்பட்ட மாடல் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக புதிய அம்சங்களுடன் வரும். வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இந்த திருத்தங்கள் இணைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவற்றைச் சமாளிக்க பிராண்ட் ஒரு புதிய மாறுபாட்டை வழங்கக்கூடும். இந்த மாற்றங்களுடன், சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, பண்டிகைக் காலத்தில் இந்த எஸ்யூவி-யின் புது வெர்ஷன் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம். புதிய வெர்ஷனில் கவனம் செலுத்த வேண்டிய முதல் அம்சம் லெவல் 2 ADAS ஆகும். இதில் லேன் கீப் அசிஸ்ட், ஹை-பீம் அசிஸ்ட், லேன் டிபாச்சர் அலெர்ச், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பல அடங்கும்.

    இதனுடன், கேபினின் உணர்வை மேம்படுத்த பிராண்ட் ஒரு பனோரமிக் சன்ரூஃப்பைச் சேர்க்க வாய்ப்புள்ளது. இந்த அம்சங்கள் XUV700 மாடலில் நீண்ட காலமாக வழங்கப்படுகின்றன. மேலும் XUV3XO மற்றும் தார் ராக்ஸ் போன்ற சமீபத்திய மாடல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை, மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் எந்த மாற்றங்களும் இருக்காது. இது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் MT மற்றும் AT ஆப்ஷன்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

    இந்திய சந்தையில் தற்போது, இந்த எஸ்யூவி விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் விற்கப்படுகிறது மற்றும் மிகவும் விலையுயர்ந்த வேரியண்டிற்கு ரூ.25.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • தார் ஃபேஸ்லிஃப்ட் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் புதிய LED டெயில்லைட்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்களில் காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியை வெளிப்படுத்துகிறது.

    மஹிந்திரா தற்போது தார் ஃபேஸ்லிஃப்ட் மாடலினை இந்தியாவில் கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த 3-கதவுகள் கொண்ட எஸ்யூவி 2020 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமானது. அந்த வகையில் இந்த தார் மாடல் அப்டேட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா தார் சமீபத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்: எதிர்பார்க்கப்படும் வெளிப்புறம்

    மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்களில் காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியை வெளிப்படுத்துகிறது. முன்பக்கத்தை இன்னும் மறைத்து வைத்திருக்கிறது. பின்புறத்தில், தார் ஃபேஸ்லிஃப்ட் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் புதிய LED டெயில்லைட்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தார் ஃபேஸ்லிஃப்டின் முன் பகுதி வெளியிடப்படவில்லை என்றாலும், தார் ராக்ஸ்ஸில் காணப்படுவது போல் இது ஒரு புதிய ஹெட்லைட்களைப் பெற வாய்ப்புள்ளது.

    மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட தார் மாடலின் சரியான அம்சங்கள் வெளியீடு நெருங்கும்போது மட்டுமே தெரியவரும். இது 10.2-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் இயக்கப்பட்ட 10.2-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு ஓட்டுநர் இருக்கை, வென்டிலேட்டெட் முன் இருக்கைகள் மற்றும் பல புதிய அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புற கூறுகள் மற்றும் அம்சங்கள் தார் ராக்ஸில் இருப்பது போல் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் லெவல் 2 ADAS வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்: எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

    மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் 1.5 லிட்டர் டர்போ டீசல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆகியவற்றை விருப்பங்களாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களுடன் (ஒரு விருப்பமாக) மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என்று தெரிகிறது.

    • இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடினர்.

    தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது வழக்கமான காரியம் தான். சில தினங்களுக்கு முன் இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், ஆமதாபாத்தில் இளைஞர்கள் வித்தியாசமாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து காவல் துறை இந்த சம்பவத்திற்கு என்ன செய்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    சமூக வலைதளங்களில் வைரல் ஆன வீடியோவில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வானில் வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கும் பரபர காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இது தவிர காரின் பக்கவாட்டு பகுதியில் ஜன்னலின் வெளியில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.

    வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஆமதாபாத் காவல் துறை ஆபத்தான முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப்படி அவர்களை கைது செய்யவில்லை என்ற போதிலும், தவறு செய்த இளைஞர்களை பொது வெளியில் தோப்புக்கரணம் போட செய்தனர். மேலும் இளைஞர்கள் தோப்புக்கரணம் போடும் வீடியோ ஆமதாபாத் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    பட்டாசுகள் சரியாக கையாளப்படவில்லை எனில் வெடி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமானவை ஆகும். இவற்றை கொண்டு சாகசம் செய்வது தீ விபத்தை ஏற்படுத்துவதற்கு சமம் ஆகும். முன்னதாக பட்டாசு வெடித்து பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    ×