என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மஹிந்திரா"
- மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
- இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி சந்தையில் தனது மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் சமயத்தில் XUV700 காரின் விலையை தற்காலிகமாக குறைத்துள்ளது. மஹிந்திரா XUV700 AX7 விலை இப்போது ரூ.19.49 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.24.99 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது. இந்த சிறப்பு விலைகள் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
AX7 டீசல்-AT 7-சீட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.20 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. AX7 L டீசல்-MT 7-சீட்டர் விலை ரூ.1.50 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு XUV700 விற்பனையை மேலும் அதிகப்படுத்த உதவிகரமாக இருக்கும்.
AX7 மற்றும் AX7 L டிரிம்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. உதாரணமாக, AX7 பதிப்புகளில் பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 1 ஆண்டு இலவச Adrenox சந்தா, TPMS, முழு-எல்இடி விளக்குகள், 18-இன்ச் அலாய் வீல், ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/10/3201971-mahindra01.webp)
சோனியின் 3டி ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட்-வியூ மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரியர் எல்இடி சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களை AX7 L கொண்டுள்ளது.
மஹிந்திரா XUV700 AX7 மற்றும் AX7 L டிரிம்கள் தற்போதுள்ள அனைத்து வித எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அதாவது 200hp பவர் கொண்ட 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் அல்லது 185hp வழங்கும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின்களில் XUV700-ஐ வாங்கலாம்.
இரண்டு என்ஜின்களுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டீசல் எஞ்சின் AT கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனைப் பெறுகிறது. மஹிந்திரா சமீபத்தில் XUV700 இன் 2,00,000 யூனிட் உற்பத்தி மைல்கல்லைக் கொண்டாடியது.
- ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது.
- அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மற்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில், இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 8 புதிய கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்திய வாகனத் துறையின் முக்கிய நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா ஆகியவை புத்தம் புதிய கார்களை, பெரும்பாலும் SUVக்களைக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளன.
1. மஹிந்திரா தார் அர்மடா & XUV.e8:
மஹிந்திரா தார் ஆர்மடா ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய மாடல் மூன்று-கதவு மாடலை விட பெரியதாக இருக்கும். பெரிய தொடுதிரை, ADAS, டூயல்-பேன் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் கன்சோல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் மிகவும் ஆடம்பரமான இன்டியர் வேலைபாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, XUV.e8 மின்சார SUV இந்த வருட இறுதியில் அல்லது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. டாடா கர்வ் EV & ICE, Nexon iCNG:
டாடா கர்வின் எலெக்ட்ரிக் மாடல், 500 கி.மீ.க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படும் ரேஞ்சில் வரும் மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து ICE பதிப்பு அறிமுகப்படுத்தப்படும். இது புதிய 1.2 லிட்டர் நேரடி-இன்ஜெக்ஷன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் Nexon இலிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும். கூடுதலாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Nexon iCNG, 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
3. ஹூண்டாய் க்ரெட்டா EV & Alcazar Facelift:
ஹூண்டாய் க்ரெட்டா EV உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சோதனை செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கோனா எலெக்ட்ரிக் உடன் மின்சார மோட்டாரைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அதன் ICE இணையான க்ரெட்டாவிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு உத்வேகத்தைப் பெறும். இந்த நடுத்தர அளவிலான மின்சார SUV 450 கிமீ ரேஞ்சை வழங்கும் மற்றும் வழக்கமான க்ரெட்டாவைப் போன்ற உபகரணங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்காசர் இந்த பண்டிகைக் காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளேயும் வெளியேயும் பல சீரமைப்புகளைக் கொண்டிருக்கும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/06/3112400-car0.webp)
4. புதிய மாருதி சுசுகி டிசையர்:
அடுத்த தலைமுறை டிசையர் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டு, வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்பு டிசைன்களைப் பெறுகிறது. இருப்பினும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இந்த வரிசையில் புதிய 1.2L Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
- மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மாறும்.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ எம்பிவி மாடல் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராசோ மாடலின் விலை ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13.90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எம்பிவி மாடல் 7-பேர் மற்றும் 8-பேர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறுப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனம் இறுதியாக உற்பத்தி செய்த செடான் கார் மாடலாக வெரிட்டோ இருந்தது. தற்போது மராசோ விற்பனை நிறுத்தப்பட்டால், மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி உற்பத்தியாளராக மட்டும் மாறும்.
இந்திய பயணிகள் வாகன சந்தையில் எம்பிவி மாடல்கள் மட்டும் 16 சதவீதமாக உள்ளது. டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிலையில், கியா மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் விற்பனையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த வரிசையில் மஹிந்திராவின் மராசோ மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 44,793 மராசோ யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 640 யூனிட்களாகவே இருக்கிறது. மராசோ மாடலுக்கு போட்டியாக இருக்கும் மாருதி 14,495 எர்டிகா யூனிட்களையும், கியா நிறுவனம் 4.412 கரென்ஸ் யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன.
- ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
- பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் 2022-ம் ஆண்டு தனது ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி 2 ஆண்டுகளில் ஸ்கார்பியோ N விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்கார்பியோ சீரிஸ் மாடல்கள் உற்பத்தியில் 10 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
முன்னதாக, ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து 11 ஆண்டுகளில் 9 லட்சம் கடந்துள்ளதாக அறிவித்து இருந்தது. ஸ்கார்பியோ N அதையும் தாண்டி விற்பனையாகி உள்ளது.
கிளாசிக் மற்றும் N என்று இரண்டு மாடல்களை கொண்டுள்ள ஸ்கார்பியோ பிராண்ட் 2024 நிதியாண்டில் 4,59,877 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதன் காரணமாக 12-மாத காலத்தில் மஹிந்திராவின் ஒட்டுமொத்த விற்பனையில் புது மைல்கல்லை எட்ட ஸ்கார்பியோ மாடல்கள் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/02/3021307-scorpio01.webp)
பிப்ரவரி 1, 2024 அன்று, ஸ்கார்பியோ N அறிமுகப்படுத்தப்பட்டு 19 மாதங்கள் 5 நாட்களில் 1,00,000வது விற்பனை மைல்கல்லைக் கொண்டாடியது. பிப்ரவரி-ஜூன் 2024 காலகட்டத்தில் 27,000 யூனிட்களைச் சேர்த்து இந்த கார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,27,000 விற்பனையாகி இருக்கிறது.
ஜூலை 2023 முதல் மே 2024 வரை, ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ N ஆகிவை 1,42,403 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது ஜூன் 2002 இல் தொடங்கப்பட்ட ஸ்கார்பியோ பிராண்டின் ஒட்டுமொத்த விற்பனையை 10,42,403 ஆக உயர்த்தியுள்ளது.
ஜூலை 1, 2022 அன்று ஸ்கார்பியோ N-க்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் 1,00,000 யூனிட்கள் புக்கிங் ஆனது. அப்போது, முன்பதிவுக்கான தொகையின் மதிப்பு சுமார் ரூ.18,000 கோடி, எக்ஸ்ஷோரூம் என மஹிந்திரா நிறுவனம் கூறியிருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவை இணைந்து 28,524 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- புதிய தார் மாடல் ஹார்டு-டாப் பாடி ஸ்டைல் கொண்டிருக்கும்.
- இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் 5-டோர் வேரியண்ட் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய தார் 5-டோர் மாடல் உற்பத்திக்கு தயாரான நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
புகைப்படங்களின் படி புதிய தார் ஐந்து கதவுகள் கொண்ட மாடலில் முற்றிலும் புதிய டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், உள்புறத்தில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. முந்தைய ஸ்பை படங்களின் படி புதிய தார் மாடல் ஹார்டு-டாப் பாடி ஸ்டைல் கொண்டிருக்கும் என்று தெரியவந்தது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/22/2295916-mahiindra-thar-5-door-spied.webp)
2024 மஹிந்திரா தார் 5-டோர் மாடலில் முற்றிலும் புதிய கிரில், நீண்ட வீல்பேஸ், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் சன்ரூஃப், ரியர் ஏ.சி. வெண்ட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய தார் மாடலிலும் 2.0 லிட்டர் எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
- AX3 வேரியண்ட்-ஐ விட ரூ. 3 லட்சம் வரை குறைவு.
- புது வேரியண்ட் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும்.
மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலின் புதிய 7 சீட்டர் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. XUV700 புதிய வேரியண்ட் MX என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது XUV700 AX3 வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ரூ. 3 லட்சம் வரை குறைவு ஆகும்.
இதுவரை XUV700 MX வேரியண்ட் ஐந்து பேர் அமரும் இருக்கை அமைப்பில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதிக இருக்கை அமைப்பில் கிடைப்பதால், XUV700 புது வேரியண்ட் மேலும் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/06/2164400-mahindra-xuv700.webp)
மஹிந்திரா XUV700 புதிய MX வேரியண்டில் ஏழு இன்ச் அளவில் MID டிஸ்ப்ளே, எட்டு இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏ.சி. வெண்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய வேரியண்டிலும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த கார் அதிக அம்சங்கள், தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
- இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XUV 3XO மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் விலை ரூ. 7 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் முற்றிலும் புதிய டிசைன், அதிக அம்சங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்டிருக்கிறது.
புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் MX1, MX2, MX3 மற்றும் MX2 ப்ரோ, AX5, AX5L, AX7 மற்றும் AX7L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் C வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிளாக்டு அவுட் கிரில், மெஷ் பேட்டன் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/04/29/2123949-mahindra-xuv-3xo.webp)
காரின் பின்புறத்தில் எல்.இ.டி. லைட் பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் டெயில்கேட், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர், அகலமான பம்ப்பர் மற்றும் புதிய XUV 3XO லெட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
உள்புறம் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, லெதர் இருக்கைகள், ரிவைஸ்டு சென்டர் கன்சோல், ரியர் ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா XUV 3XO மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- புதிய எஸ்.யு.வி. மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொலிரோ நியோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட பொலிரோ நியோ பிளஸ் எஸ்.யு.வி. தற்போது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்த கார் 2-3-4 இருக்கை அமைப்புடன் மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. பொலிரோ நியோ பிளஸ் மாடல் P4 மற்றும் P10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/04/17/2082760-mahindra-bolero-neo-plus-pic.webp)
பொலிரோ நியோ பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது புதிய நியோ பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
புதிய எஸ்.யு.வி. மாடல்- நபோலி பிளாக், மஜெஸ்டிக் சில்வர் மற்றும் டைமண்ட் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபினில் பிரீமியம் இத்தாலிய இண்டீரியர்கள், 9 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத், யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் மாடலில் புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
- இது மஹிந்திரா XUV 300 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் இம்மாத இறுதியில் (ஏப்ரல் 29) தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV 3XO அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த காருக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் இவை அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/04/08/2057395-mahindra-xuv-3xo.webp)
புதிய XUV 3XO மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் பெயர் மட்டுமின்றி டிசைன் அடிப்படையிலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய கிரில், இன்வெர்ட் செய்யப்பட்ட சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் பாரெல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.
இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட், மஹிந்திராவின் டுவின் பீக் லோகோ மற்றும் XUV 3XO பிராண்டிங் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
மற்ற அம்சங்களை பொருத்தவரை அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏழு ஏர்பேக், லெவல் 2 ADAS சூட் வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது.
- அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
- கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இந்த காருக்கான தட்டுப்பாடு இன்றும் குறையாத நிலையே தொடர்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலின் 2023 வெர்ஷனுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
அதன்படி ஸ்கார்பியோ N மாடலின் டாப் எண்ட் Z8 மற்றும் Z8L டீசல் 4x4 வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 7 சீட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. Z8 மற்றும் Z8L டீசல் 4x2 AT வேரியண்ட்களுக்கு (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/04/05/2052257-mahindra-scorpio-n.webp)
ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8L பெட்ரோல் AT வேரியண்ட்களுக்கும் (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி தவிர எக்சேன்ஜ் போனஸ் அல்லது கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 203 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 175 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஸ்கார்பியோ N மாடல் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 54 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
- புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மேம்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடலுக்கு மஹிந்திரா XUV 3XO என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் ஒட்டுமொத்த XUV மாடல்களும் இதே போன்ற பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
டீசரில் புதிய மஹிந்திரா XUV 3XO மாடலின் முன்புறம் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய பேட்டன் கொண்ட கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள் உள்ளன.
இத்துடன் புதிதாக சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் எல்.இ.டி. லைட் பார், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பின்புறத்தில் XUV 3XO லெட்டரிங் உள்ளது. இவைதவிர டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய மஹிந்திரா XUV 3XO மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் மஹிந்திரா XUV 3XO கார், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.
- இந்திய ராணுவத்திற்காக விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
- பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும்.
இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ (Armoured Light Specialist Vehicle-ASLV) 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/03/18/2026828-mahindra-armado-pic.webp)
அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன வாகனம் என்ற வகையில், இது சிறப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படை, எல்லை பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் பலவித எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 215 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் வசதி மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/03/18/2026829-mahindra-armado.webp)
வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பன்ச்சர் ஆன நிலையில்கூட 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கடினமான சூழலிலும் பயன்படுத்த ஏதுவாக இதில் செல்ஃப்-கிளீனிங் எக்சாஸ்ட் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உள்ளது.
இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அர்மாடோ குறித்த பதிவை தனது எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.
Some sincere advice:
— anand mahindra (@anandmahindra) March 17, 2024
PLEASE don't get in its way….
?#Armado https://t.co/4fDVLTK1X1
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)