என் மலர்
நீங்கள் தேடியது "Maruti"
- வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள்- மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகியவை 2026ஆம் ஆண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்களது சப்-4 மீட்டர் மாடல் வரிசையை விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் மாருதி சுசுகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட Fronx-ஐ ADAS சூட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய சப்-காம்பாக்ட் SUV (ஸ்கார்லெட் என்ற குறியீட்டுப் பெயர்) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா விஷன் S கான்செப்ட்டின் உற்பத்திக்குத் தயாரான மாடலை அறிமுகப்படுத்தலாம். இது ஸ்கார்பியோ குடும்பத்திற்குள் நிலைநிறுத்தப்பட்ட ஒரு சப்-காம்பாக்ட் எஸ்யூவி-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் பேயோன் காம்பாக்ட் கிராஸ்ஓவர் வெளியீடும் 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதி Fronx ஃபேஸ்லிஃப்ட்
புதுப்பிக்கப்பட்ட மாருதி Fronx பலமுறை சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்த காம்பாக்ட் கிராஸ்ஓவர் ADAS ஆப்ஷனுடன் வரும் என்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. இது சுசுகியின் அடுத்த தலைமுறை 48V சூப்பர் எனி-சார்ஜ் (SEC) ஹைப்ரிட் பவர்டிரெயினைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மாடலாகவும் இருக்கலாம்.

டாடா ஸ்கார்லெட்
வரவிருக்கும் டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், டாடா ஸ்கார்லெட் ஒரு மோனோ-கோக் சேசிஸை அடிப்படையாகக் கொண்டதாகவும், சியரா எஸ்யூவி-இல் இருந்து பல வடிவமைப்பு அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறப்படுகின்றன. ஸ்கார்லெட் மாடலில் டாடா கர்வ்-இல் உள்ள 1.2L மற்றும் நெக்சானின் 1.2L டர்போ பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படலாம்.
மஹிந்திரா பேபி ஸ்கார்பியோ
உற்பத்திக்குத் தயாரான மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து 2027 இல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும். இறுதி மாடல் அப்சைடு டவுன் L-வடிவ ஹெட்லேம்ப்கள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் அப்சைடு டவுன் L-வடிவ டெயில் லேம்ப்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஸ்கிரீன், 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்படலாம்.

ஹூண்டாய் பேயோன்
மாருதி Fronx மற்றும் டாடா பன்ச் ஆகியவற்றிற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பதிலாக பேயோன் காம்பாக்ட் கிராஸ்-ஓவர் இருக்கும். இது முற்றிலும் புதிய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1.2L TGDi பெட்ரோல் என்ஜினைக் கொண்ட முதல் ஹூண்டாய் கார் ஆக இருக்கும். இது கிரெட்டாவின் 1.5L டர்போ பெட்ரோல் என்ஜினை விட மிகவும் கச்சிதமான மற்றும் எரிபொருள் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
- அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
- இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக பாதுகாப்பானதாக மாறி வருகின்றன. மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் இதற்கு முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில், பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்ற 5 கார்களை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்..!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் டி.என்.ஜி.ஏ. தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் டைனமிக் ரேடார் குரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர் பேக்குகள், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
கியா சைரோஸ்
கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்.யூ.வி. கார் ஆகும். இந்த காரிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் உள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள் உள்ளன.

ஸ்கோடா கைலாக்
இந்த கார் அதன் பிரிவிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது. இந்த காரில் 25 அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஹேரியர் EV
டாடா ஹேரியர் EV காரை பொறுத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி. காராகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை எச்.டி. ரியர் வியூ கேமரா, 7 ஏர் பேக்குகள், 20-க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி கேமரா, I-VPAC உடன் கூடிய ESP, SOS கால் வசதி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மாருதி டிசையர்
இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக, மாருதி டிசையர் கார் திகழ்கிறது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியண்ட்களிலும் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்கிங், ஹை-ஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்பட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
- தி ராஜா சாப் படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
- இந்த படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் 'தி ராஜா சாப்' ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் மாருதி இயக்க இருக்கிறார். பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி மீண்டும் இணையும் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு 'தி ராஜா சாப்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். 'தி ராஜா சாப்' முழுமையான பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ் இதுவரை ஏற்றிருக்காத ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் தயாராவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வரா கவனிக்க, வி எஃப் எக்ஸ் பணிகளை 'மகதீரா', 'பாகுபலி' போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கிறார்கள்.
- மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
- அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கிறது.
மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை மையங்கள் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்.யு.வி. மற்றும் XL6 எம்.பி.வி. உள்ளிட்ட கார்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.
பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் மாடல்கள் அதே விலையில் தொடர்கின்றன. அதே நேரத்தில் இன்விக்டோ எம்.பி.வி.-க்கு எந்த தள்ளுபடியும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே, மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு ரூ.74,000 தள்ளுபடியும், 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 66 ஆயிரம் தள்ளுபடி சேர்த்து காரின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சிக்மா மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,000 மற்றும் ரூ.14,000 தள்ளுபடி பெறுகின்றன.
இந்தியாவில் கிராண்ட் விட்டாரா மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

இந்த காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே எஞ்சின் CNG-மேனுவல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 116 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மாருதி XL6 மீதான தள்ளுபடிகள் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ. 40,000 ஆகவும், சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ. 25,000 ஆகவும் உள்ளது. இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 103 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த CNG மோடில் இயங்கும் போது 88 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- தி ராஜா சாப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
- படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபாஸ் சமீபத்தில் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படமான தி ராஜா சாப் படத்தை குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரபாஸ் ஒரு பூங்கொத்தை எடுத்து அதில் உள்ள மலர்களை எடுத்து அவருக்கு அவரே திருஷ்டி கழிக்கும் விதமாக காட்சிகள் அமைத்துள்ளது. மிகவும் ஸ்டைலாக, சமீபத்தில் வந்த படங்களில் ஒப்பிடும் பொழுது இப்படத்தில் கூடுதல் அழகான லுக்கில் இருக்கிறார். இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒசாமு சுசூகி மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சி ஏற்படுத்தியவர்.
- ஒசாமு சுசூகி இந்தியா மீது அதிகமான பாசம் கொண்டிருந்தார்
சுசுகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி (94) நேற்று காலமானார்.
ஒசாமு சுசுகி எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "உலகளாவிய வாகனத் துறையில் புகழ்பெற்ற நபரான ஒசாமு சுசுகியின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரது தலைமையின் கீழ், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஒரு உலகளாவிய சக்தியாக மாறியது. அவர் இந்தியா மீது அதிகமான பாசம் கொண்டிருந்தார். மாருதி உடனான அவரது ஒத்துழைப்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், அவரை நேசிக்கும் எண்ணற்றவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






