search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van"

    • இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 90). இவர் இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், துரைசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது.
    • 2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சாலையில் உள்ள 63 வேலம்பாளையம் பகுதியில் இன்று காலை பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.

    அதன்பிறகு போக்குவரத்து சீரானது. 

    • ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.

    கொல்லிமலை:

    ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கொண்டை ஊசி வளைவு

    சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

    சிகிச்சை

    விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ

    சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.   

    • சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடிகுளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

    கயத்தாறு:

    தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம் கிராமம் வடக்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), இளநீர் வியாபாரி. இவர் தற்போது கயத்தாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடி குளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று சுப்பிரமணி யின் உமலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிதனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.
    • அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கார் மற்றும் சரக்கு வேன் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது மோதியது.

    இந்த விபத்தில் வாகனங்கள் மட்டும் சேதம் ஆகியது. கார் ஓட்டுநர் , சரக்கு வேன் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காயமடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
    • ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • திருமங்கலம் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்து. இதல் 10 பேர் காயம் அடைந்தனர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    சேலம் நெத்தி மேடு பகுதியைசேர்ந்தவர் வாசுதேவன்(வயது65). இவரது மனைவி வளர்மதி(60). திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு சேலத்திலிருந்து வேனில் புறப்பட்டார்.

    அவர்களது வேன் இன்று அதிகாலை 4.45 மணியள வில் மதுரை மாவட்டம் திருமங்கலம் மேலக் கோட்டை அருகே வந்தது. அப்போது நான்கு வழிச்சாலை தடுப்புசுவரில் வேன் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த வளர்மதி, ராஜ் குமார், ஷாலினி, விஜய குமார், சரோஜாதேவி, குழந்தைகள் காதம்பரி, நித்திலன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயமடைந்த வளர்மதி உள்ளிட்ட 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து காரண மாக நான்குவழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 3 பேரும் வேனில் வேதாரண்யம் நோக்கி சென்றனர்.
    • லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 39).

    அதே பகுதியை சேர்ந்த பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேரும் லோடு வேனில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வேனை செந்தில் ஓட்டினார்.

    அப்போது வேதாரண்யம் சாலையில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் செந்தில், பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பிரபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்டர் மீடியனில் வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ராமேசுவரத்திற்கு 13 பேர்களுடன் டூரிஸ்ட் வேன் சென்றது. இதை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் இளங்கோவன் (வயது30) ஓட்டினார்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது புளியால் விலக்கு சென்டர் மீடியனில் மோதியது. இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    சத்தம் ேகட்டு அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கெகாடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் விபத்தில் காய மடைந்தவர்களை தேவ கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேவகோட்டை ரஸ்தா வில் இருந்து தற்போது புதிதாக போடப்பட்ட திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலையில் சென்டர் மீடியனில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. உடனடியாக இந்த பிரிவு சாலையில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    வெள்ளகோவில்:

    கரூர் மாவட்டம் தென்னிலை அருகே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பழுதாகி நின்றுள்ளது. அந்த வாகனத்திற்கு டூல்ஸ் எடுத்துக்கொண்டு வெள்ளகோவில் ஓலப்பாளையத்தில் இருந்து நவீன் (வயது 23) என்பவர் வேனில் சென்றார்.

    வெள்ளமடை அருகே வரும்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேனை முந்தி செல்லும் போது உரசி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனை ஓட்டிச் சென்ற நவீன் லேசான சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். வேன் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    • அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.

    அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். 

    இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாக–வுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து கார் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதனால் சாலையில் சென்றவர்கள்  இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

    எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×