என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வெள்ளகோவிலில் வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
- கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.
- லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
வெள்ளகோவில் :
கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். காங்கேயம் அடுத்து கொழிஞ்சி காட்டு வலசு பிரிவு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரில் திருச்சியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி வந்த லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனை ஓட்டி வந்த பிரதாப் (வயது 22) மற்றும் வேனில் பயணம் செய்த செரில் (14) ,மேரி (70), ஷருண்(14),மேஜோ (59), கில்சர் (49) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனே அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story






