search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "center median"

    • 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது

    கடலூர்:

    திருவாரூர் மாவட்டம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் மேல்மருவத்தூருக்கு செல்வதற்காக நேற்று இரவு புறப்பட்டு வேன் ஒன்றில் வந்தனர். இந்த வேனை அதே ஊரை சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது 25) ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பண்ருட்டி-கும்பகோணம் சாலை அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் வேன் டயர் வெடித்து சிதறியது. இதனால் தாறுமாறாக சிறிது தூரம் ஓடிய வேன் மீண்டும் தடுப்பு கட்டையில் மோதி  இதில் வேனில் பயணம் செய்த செவ்வாடை பத்தர்கள் லேசான காயத்து டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனால் பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது பற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்த வேன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   பண்ருட்டி கும்பகோணம் சாலையிலுள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பண்ருட்டி போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் விபத்துக்கள் நடந்து வருவதால் இதனை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் விபத்துக்கள் நடந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். பாலக்கோடு வழியாக தருமபுரி மற்றும் சுற்றுலா தளமான ஒகேனக்கல்லுக்கு தினந்தோரும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனத்தில் வந்துசெல்கின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பலர் என அதிக பொதுமக்கள் இப்பகுதியில், பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாலக்கோடு புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் பிரிவு ரோட்டில் தருமபுரியை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாலானோர் அதிவேகத்திலேயே செல்வர். இப்பகுதி பிரிவு ரோட்டில் சென்டர் மீடியன் இன்றி காணப்படுவதால், வளைவுகளில் வளையும்போது எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

    புறவழிச்சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் பிரிவு பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமம் அடைவது மட்டுமின்றி, இரவு நேரத்தில் இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்திற்கு உள்ளாகுகின்றனர்.

    எனவே, மாவட்ட நிர்வாகம் புறவழிச் சாலையில் இருந்து பஸ்நிலையம் செல்லும் நெடுஞ்சாலை பிரிவில் சென்டர் மீடியன் மற்றும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
    ×